என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • இதனால் சந்தேகமடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார்.
    • மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஒலையனூர் பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதியில் ஒரு மோட் டார் சைக்கிள் கடந்த 2 நாட்களாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார். விவசாய நிலத்திற்கு வந்தவர்கள் யாரேணும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றிருக்கலாம் என நினைத்த முகமதுயுசூப், மோட்டார் சைக்கிள் யாரு டையது மற்ற நில உரிமை யாளர்களிடம் விசாரித்தார். ஆனால், இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. மேலும், மோட்டார் சைக்கி ளின் அருகில் இருந்த கிணற்றின் நீரில் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பது போன்ற தெரிந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி யடைந்த முகமதுயுசூப், உளுந்தூர்பேட்டை போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசா ரித்தபோது, இது கடலூர் மாவட்டம் விருத்தா சலம் அடுத்த ஆயிபேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் உளுந்தூர்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் தமிழ்செல்வன் (வயது 28) என்பவர் இளங்கோவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது. மேலும், கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் தமிழ்செல்வன் என்பதையும் உளுந்தூர்பேட்டை போலீ சார் உறுதி செய்தனர். இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை.
    • பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம், பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதனை நம்பிய ஒரு சிலர் பணத்தை கட்டியுள்ளனர். அறிவித்தபடி வட்டி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.

    தொடர்ந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.12 லட்சம் என முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வட்டி திட்டங்களை அறிவித்தார். மேலும் மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், நெடுமானுர், சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு மூரார்பாளையத்தில் நகை கடை, சூப்பர் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் போன்ற பல்வேறு நிறுவனங்களைத் திறந்து ஷமீர் குரூப் ஆஃப் கம்பெனியை தொடங்கினார்.

    இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை. பணத்தை முதலீடு செய்தவர்கள் ஷமீர் அகமதுவிடம் பணத்தைக் கேட்டனர். விரைவில் தருவதாக கூறிய ஷமீர் அகமது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரார்பாளையத்தில் உள்ள கடைகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவானார்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏஜெண்டுகளை சுற்றிவளைத்து பணத்தை திருப்பி கேட்டனர். இதையடுத்து ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை ஏஜெண்டுகள் கண்டுபிடித்தனர். அவரிடம் பேசி முரார்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய ஷமீர் அகமதுவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் கட்டிய ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.50 கோடிக்கு வட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், ஷமீர் அகமது மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷமீர் அகமதுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழகத்தில் சமீபகால மாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள்மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசுவிற்பனை மற்றும் வெடி பொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை ப்படுத்தி உயிர் சேதம்மற்றும் பொருட்சே தம் ஆகியவற்றை தவிர்த்திடும் பொருட்டும், வெடிபொருள் தயாரிக்கு ம்போதுபின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும், வெடிபொருள் தயாரிக்கும் உரிமத்தலங்களை தணிக்கை செய்திட செல்லும் அரசுஅலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட அளவிலான தீ மற்றும்பாதுகாப்பு தொழிலக குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது. கிப்ட் பெட்டியில் தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப்வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் கூடாது மற்றும் பட்டாசு வெடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பதாகைகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அறிவியல் முறையில்கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களு க்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் .தடை செய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிக ளை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்சரவ ணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர் (வெடிபொருள்) தானுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பருவதம், வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்
    • அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா கரன் தலைமையிலான போலீசார் அத்தி யூரில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் போலீ சார் நடத்திய விசாரணையில், அவர் புதுப்பட்டு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சலீம் பாஷா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஷேக் அப்துல் ரகுமான் வரவேற்புரை நிகழ்த்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஷபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லாப்பூதீன், வர்த்தக அணி தலைவர் ருமானா ஷாகுல், தொகுதி துணைத் தலைவர் இலியாஸ், துணை செயலாளர் அப்துல்லா, நகர செயலாளர் உசேன், பொருளாளர் அப்துல் ரஹீம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் உசேன், துணைத்தலைவர் பக்கரி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபி மற்றும் மாவட்டச் செயலாளர் தர்பார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி நன்றி கூறினார்.

    • பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
    • இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்ட நிலையில், மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் அதன்படி ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீன்களை 1300 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.

    • சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை யாற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம். ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ராணி (வயது 45) சம்பவத்தன்று அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் கேட்டபோது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேர் மீதும், இதே போல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா அவரது மனைவி ராணி, மகள் சங்கீதா உறவினர் ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
    • ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் சமீப காலமாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம்ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது.

    இந்த ஆய்வின்போது, அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாம ல்வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெடிபொரு ள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரியஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×