search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்டநாட்டு வெடி- சீன வெடிகளை பயன்படுத்தக்கூடாதுகள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை
    X

    கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷ்ரவன் குமார், போலீஸ் சூப்பிரண்டு மோகன் ஆகியோர் முன்னிலையில் தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தடை செய்யப்பட்டநாட்டு வெடி- சீன வெடிகளை பயன்படுத்தக்கூடாதுகள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழகத்தில் சமீபகால மாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள்மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசுவிற்பனை மற்றும் வெடி பொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை ப்படுத்தி உயிர் சேதம்மற்றும் பொருட்சே தம் ஆகியவற்றை தவிர்த்திடும் பொருட்டும், வெடிபொருள் தயாரிக்கு ம்போதுபின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும், வெடிபொருள் தயாரிக்கும் உரிமத்தலங்களை தணிக்கை செய்திட செல்லும் அரசுஅலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட அளவிலான தீ மற்றும்பாதுகாப்பு தொழிலக குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது. கிப்ட் பெட்டியில் தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப்வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் கூடாது மற்றும் பட்டாசு வெடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பதாகைகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அறிவியல் முறையில்கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களு க்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் .தடை செய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிக ளை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்சரவ ணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர் (வெடிபொருள்) தானுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பருவதம், வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×