search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "countries of the world"

    • பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சலீம் பாஷா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஷேக் அப்துல் ரகுமான் வரவேற்புரை நிகழ்த்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஷபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லாப்பூதீன், வர்த்தக அணி தலைவர் ருமானா ஷாகுல், தொகுதி துணைத் தலைவர் இலியாஸ், துணை செயலாளர் அப்துல்லா, நகர செயலாளர் உசேன், பொருளாளர் அப்துல் ரஹீம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் உசேன், துணைத்தலைவர் பக்கரி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபி மற்றும் மாவட்டச் செயலாளர் தர்பார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி நன்றி கூறினார்.

    ×