என் மலர்
காஞ்சிபுரம்
- நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.
- உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:
* பரந்தூர் கிராமத்திலிருந்து தனது கள அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.
* வீட்டிற்கு பெரியவர்களை போல் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள்.
* நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.
* உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.
* வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவு மக்களை அதிகம் பாதிக்கும். பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
* Confident ஆக இருங்கள், வெற்றி நிச்சயம் என்று அவர் பேசினார்.
- உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.
- ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:
* உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன்.
* கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு மனம் ஏதோ செய்தது. சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு பரந்தூர் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
* பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு.
* நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்.
* ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை.
* பரந்தூரில் 1000-க்கும் ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை கைவிடுக.
* விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்று பேசினார்.
- பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
காஞ்சிபுரம்:
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.
இதையடுத்து பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் திருமண மண்டபத்தின் வெளியே கேரவனில் நின்றபடியே போராட்ட குழுவினரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசி வருகிறார்.
- போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
- பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
காஞ்சிபுரம்:
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 909 நாட்களாக தொடர் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இதையடுத்து போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும், பிற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
பரந்தூரில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவணங்கள் வைத்திருந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
- பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் நாளை (20-ந்தேதி) பரந்தூர் சென்று ஏகனாபுரம் மக்களை சந்தித்து பேசுகிறார்.
இதற்கிடையே பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் விஜய் மக்களை சந்திக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் பொதுவெளியில் விஜய் பொதுமக்களை சந்திக்க அனுமதி அளித்தால் ஏராளமான கூட்டம் கூடி விடும். இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். எனவே வீனஸ் கார்டன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக போலீசாருடன், போராட்ட குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்று தேர்வு செய்யப்படுகிறது.
- விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து பேச தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ள காவல்துறை, 2 இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், அதிக கூட்டத்தைக் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
- பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை பார்க்க கனடா, ஜெர்மனி நாட்டை சேர்ந்த வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கோவில் வளாகத்தில் பொங்கல் விழா விளையட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவரியம் பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்பானை செய்தல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குப்பை ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி கோலப் போட்டி (வீதி முழுதும்), ஜோசியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம் பாட்டம், வில்லுப்பாட்டு பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கிராம மக்களுடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உறி அடித்தல், மண்பானை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்ட னர். வெளி நாட்டினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று கிராமத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
- மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரத்(வயது 17), சத்ரியன்(17), விஷ்வா(17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
இவர்களில் பரத், ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.யிலும், சத்ரியன் வாலாஜா பாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். விஷ்வா பிளஸ்-2 முடித்து உள்ளார். கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பரத் உள்பட 3 பேரும் பின்னர் வீடுதிரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுத வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பரத், சத்ரியன், விஷ்வா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் 3 பேரும் எப்படி இறந்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.
அவர்களின் முகம் தீவைத்து எரிக்கப்பட்டு கருகி இருந்தது. மேலும் மாணவர்களின் முழங்கால், காலின் கீழ் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் இறந்து போன மாணவர்கள் அனைவரும் அவர்கள் அணிந்து இருந்த ஆடையுடன் இருந்தனர்.
அவர்கள் ஏரியில் குளிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே மர்ம நபர்கள் மாணவர்கள் 3 பேரையும் கடத்தி எரித்து கொலை செய்து விட்டு உடல்களை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. உடல்கள் உப்பிய நிலையில் காணப்படுவதால் அவர்கள் மாயமான 12-ந்தேதியே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் மர்மமாக இறந்து போன பரத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கொலை நடந்து உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
மர்மமாக இறந்து போன 3 மாணவர்களுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? கடைசியாக செல்போன்களில் யாருடன் பேசினார்கள்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வருகிற 19, அல்லது 20-ந் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த போலீசார் கிராம மக்களை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. பெரும்பாலும் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேற்று போராட்டக் குழுவினரை சந்தித்தனர். குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர். தகவல்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் ஒப்படைக்க இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து விஜயின் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்கள் மற்றும் பரமபத வாசல் உள்ள கோவில்களில் எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 10) அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இருபிரிவினருக்கும் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு தலா பத்து நிமிடங்கள் ஒதுக்கீடு செய்தனர்.
- 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த மகாபெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கி முதல் நாள் நிகழ்ச்சியாக சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலைப் பாடத்தைத் தொடர்ந்து 40 நாட்களாக அதிஷ்டானத்தில் பாஸ்கர கன பாடிகள் என்பவரால் பாடப்பட்டு வந்தது.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நாளை ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெறும். மகா பூரணா ஹுதி தீபாராதனைக்கு பிறகு, மகா பெரியவா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கணபதி சேது லாரா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை, மாலை மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நடைபெறுகிறது.
- 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் போராட்டம்.
- இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதில், தி.மு.க.வில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
திமுக-வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன், இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் என்றும், தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என கேள்வி எழுப்பியும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் வினவியுள்ளார்.
ஆனாலும் துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2, 3 என்று துணை முதல்வர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முதல்வரை சுற்றி வியாபாரிகள் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.






