என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #BharathBandh #PetrolDieselPriceHike

    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டுகள் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மேட்டூர் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகளை கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike 

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கொங்காலம்மன் வீதியை அடுத்த புது மஸ்ஜித் வீதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குட்கா விற்கப்படுவதாக ஈரோடு உணவு பாதுகாப்பு அலுவலர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் செல்வன் ரவி எழில் ஆகியோர் அடங்கிய குழுவினர் புது மஸ்ஜித் வீதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்

    அப்போது ஒரு மாடி வீட்டு அருகே டேபிள் வைத்து வடமாநில வாலிபர் ஒருவர் சில பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார் சந்தேகமடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பொருட்களை சோதனையிட்டனர் அப்போது 5 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது மேலும் சில வெள்ளி? நாணயங்களும் அந்த மூட்டைகளுக்குள் இருந்தன.

    மொத்தம் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் புகையிலைப் பொருட்களை விற்று அந்த வாலிபர் ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் வயது 30 என தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    செல்போனை தொலைத்ததற்கு தாய் திட்டியதால் தூக்குப்போட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் நமச்சிவாயமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 3-வது மகள் கோகிலா (வயது 18). இவர் கோவையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவையில் இருந்து கோகிலா சம்பவத்தன்று நசியனூருக்கு பஸ்சில் வந்துகொண்டு இருந்தார். அப்போது அவர் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டதாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு சென்றதும் இதுகுறித்து அவர் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். அப்போது கோகிலாவை அவருடைய தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கச்சென்றுவிட்டனர். தாய் திட்டியதால் மனமுடைந்த கோகிலா தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் கோகிலா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

    இதுபற்றி உடனே சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    சென்னையில் இன்று மாலை நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Sengottaiyan #RajivGandhimurdercase

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியில் இன்று காலை பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது.

    ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள் என தனி தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

    போட்டியை தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    இது போன்ற விளையாட்டு போட்டிகள் மூலம் உடல் மற்றும் மணதை வலிமைப்படுத்த முடியும். ஒழுக்கம், பண்பு, உயர்வு பெறும். சிறந்த கல்வியாளராக உருவாக முடியும்.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


    சமூக சேவை நிறுவனம் சார்பில் 20 அரசு பள்ளிகளில் முதல் கட்டமாக வாகனம் மூலம் கழிவறை சுத்தம் செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் பரிட்சாத்த முறையில் சோதனை மேற் கொள்ளப்படும்.

    வரும் கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் செலவில் “அடல் லேப்” திட்டம் தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழக கல்வித்துறை முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எலத்தூர் அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராபுரத்திலும் இது போல் சம்பவம் நடந்துள்ளது.

    எலத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியை மாற்றம் செய்யப்படுவார்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    நிகழ்ச்சியில் சத்தியபாமா எம்.பி, கல்லூரி முதல்வர் ஜெகதாலட்சுமணன், செயலாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sengottaiyan #RajivGandhimurdercase

    இலங்கை அகதி கலானி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் அதே பகுதியை சேர்ந்த கலானி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.

    இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார். 
    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி அருகே கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி கரியாகவுண்டன் வலசு என்ற ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சிஒன்றிய நடு நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில், மற்றும் நியாய விலைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    ஆனால் இங்கு உள்ள 200 வீடுகளின் கழிவுநீர் வெளியேற எந்த வசதியும் ஊராட்சி மன்றத்தால் செய்து தரப்படவில்லை.

    இந்த ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, மின்சார வசதி என்று எந்த ஒரு வசதியும் இதுநாள்வரை செய்து தரப்படவில்லை. இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் சாக்கடை கட்டி தரப்படவில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பெயர் தெரியாத காய்ச்சல் அனைவருக்கும் வருகிறது.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் சாக்கடை வசதி கோரி பலமுறை விண்ணப்பம் அளித்தும் பலனில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் இதுநாள்வரை ஊராட்சிமன்ற தலைவர் சொல்வதை மட்டும் செய்துவந்தோம். கடந்த 10ஆண்டுகளாக எந்தவித ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்கின்றனர்.

    எனவே ஆனந்தம்பாளையம் ஊராட்சி ஆவணங்களை உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து எங்களுக்கு தேவையான சாக்கடைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை செய்து தர முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் செய்ய உள்ளதாகவும் கூறினர். #tamilnews
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு மதிமுக ஆதரவு தெரிவித்து பங்கேற்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #vaiko #petroldiesel

    ஈரோடு:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று ஈரோடு வந்தார். ஈரோடு மூலக்கரையில் வருகிற 15-ந் தேதி ம.தி.மு.க. மாநாடு நடைபெறும் இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ம.தி.மு.க. 25-வது ஆண்டு வெள்ளி விழா, தந்தை பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, பொது வாழ்வில் 50 ஆண்டுகள் நிறைவு பொன்விழா என முப்பெரும் விழா ம.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இது எங்களது 2-வது மாநில மாநாடாகும். ஏற்கன 1995-ம் ஆண்டு திருச்சியில் முதல் மாநில மாநாடு நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்றார்.

    ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் தி. மு.க. தலைவராக பொறுப் பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தேதியில் விழுப்புரத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளார். எனவே அவர் சார்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    மாநாட்டுக்கு மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். பொருளாளர் கணேசமூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார். மாநாட்டில் கொடியேற்றுதல், கண்காட்சி திறப்பு, கருணாநிதி உருவ படம் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காலையில் நடைபெறும் விழாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொள்கிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி பொன் விழா மலரை வெளியிடுகிறார். தி.மு.க. கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சரத்பவார், யஷ்வந்த் சின்கா, திருநாவுக்கரசர், பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன் ஜவாஹீருல்லா, நடிகர் சத்யராஜ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாட்டு பணி கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது. பொருளாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு ஆகியோர் இரவு, பகலாக பணிகளை செய்து வருகிறார்கள். இந்திய அரசியலில் முக்கிய நகர்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

    மத்திய அரசு இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு போன்றவற்றில் ஈடு படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறது. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற துயரங்களை தமிழகம் சந்தித்து வரும் இந்த வேளையில் இந்த மாநாடு நடக்கிறது.

    மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வர உள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்துக்கு கலைஞர் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். கருணாநிதிதிரு உருவ படத்தை துரைமுருகன் திறந்து வைக்கிறார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்கள் மாத சம்பளம் வாங்கும் குடும்பத்தினர் அடித்தட்டு மக்கள் தலையிர் நேரடியாக விழுந்துள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் வருகிற 10-ந்தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்கும்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக நரேந்திர மோடி கூறுகிறார். இதை ஏற்க முடியாது. உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. 9.20 ரூபாயாக இருந்த உற்பத்தி வரியை 19.40 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதே போன்ற டீசல் உற்பத்தி வரி 3.44 ரூபாயாக இருந்தது. தற்போது அதை 15.37 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. மாநில அரசும் தன் பங்குக்கு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி உள்ளது.

    ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக நான் 22 வருடமாக போராடி வருகிறேன். 2010-ம் ஆண்டு நான் ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக தடையாணை வாங்கி செயல் படவிடாமல் தடுத்தேன். ஆனால் அந்த நிர்வாகம் மேல்முறையீடு செய்த ஸ்டெர்லைட் செயல்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் பல போராட்டம் நடத்தி100-வது நாளாக மனு கொடுக்க சென்றனர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மத்திய அரசு திட்டமிட்டு மாநில அரசு மூலம் இந்த அடக்கு முறையை நடத்தியுள்ளது.

    மாணவி சோபியா தனது கருத்துரிமையை வெளிப்படுத்தும் வகையில் விமானத்தில் பேசியுள்ளார். எனவே அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மனிதாபிமானத்தோடும் சகோதரி தமிழிசை இந்த வி‌ஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை பிரச்சினையில் நானும், பழ நெடு மாறனும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அவர்களுக்கு தூக்கு தண்டனை தேதி அறிவித்து பல்வேறு போராட்டத்துக்கு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    சமீபத்தில் அவர்களை விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. எனவே தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குட்கா ஊழலில் தமிழக டி.ஐ.ஜி., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை பதவியில் இருந்து முதல்-அமைச்சர் நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பொருளாளர் கணேசமூர்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, மாநில அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இலக்கிய அணி யுவராஜ்குமார், நிர்வாகி சாதிக் உள்பட பலர் உடன் இருந்தனர். #vaiko #petroldiesel

    ஈரோடு அருகே வாகன சோதனையின் போது போலீஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெரிய அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அருண் குமார் (வயது 18).அருண்குமார் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் கடந்த 5-ந் தேதி மாலை கனி ராவுத்தர் குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அருண்குமார் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து அருண்குமாரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அன்று இரவு அவரது வீட்டுக்கு கருங்கல்பாளையம் போலீசார் ஒருவர் சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.

    அதன்பேரில் அருண்குமார் தனது பெற்றோருடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அருண்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று அருண்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அருண் குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருண்குமாரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரப்ரோடு வழியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நடந்து சென்று எஸ்.பி.சக்தி கணேசிடம் மனு கொடுத்தனர்.

    எஸ்.பி.சக்தி கணேசன் அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இதனை அடுத்து அருண்குமார் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஈரோடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது.-

    அருண்குமார் உறவினர்கள் என்னை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் இன்னும் ஆயுதப்படைக்கு மாற்றப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சென்னிமழை அருகே அரசு டவுன் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரை மாணவிகளே போலீசில் ஓப்படைத்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்தல் தொடர்பாகவும், ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த வலியுறுத்தியும் அனைத்து கட்சி சார்பில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. #VinayagarChaturthi
    ஈரோடு:

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.-

    ஈரோடு மாவட்டத்தில் வரும் 13- ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா இந்து இயக்கங்கள் சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் வைக்கப்படும் சிலைகள் அவர்கள் சார்பில் நடத்தப்படும் ஊர்வலங்களில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் போக்குவரத்து பாதிக்கும் இடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக் கூடாது.

    கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது. வன்முறையை தூண்டும் ஒலி முழக்கங்களை அனுமதிக்கக் கூடாது. பிறவழி பாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது.

    எளிதில் கரையும் களிமண் போன்றவற்றால் செய்யப்படும் சிலைகளை தவிர நீர்நிலைகளை மாசுபடுத்தும் ரசாயனத்தால் ஆன சிலைகளை அனுமதிக்கக் கூடாது. சிலைகள் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக் கொடிகள் அமைப்பு கொடிகள் அனுமதிக்கக் கூடாது.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    திராவிடர் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தலித் விடுதலை கட்சி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். #VinayagarChaturthi
    ரெயில்வே மேம்பால சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னிமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு நூல் கோன்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது.

    லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த குமார் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். மாற்று டிரைவர் அய்யன்துரை (37) என்பவரும் லாரியில் இருந்தார்.

    இந்த லாரி சென்னிமலை அடுத்த ஈங்கூர் அருகே நள்ளிரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தது. அங்கு குறுகிய ரெயில்வே மேம்பாலம் இருப்பது தெரியாமல் இயக்கப்பட்டதால் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    மற்றொரு டிரைவரான அய்யன்துரைக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேம்பால சுவரில் மோதியதால் லாரியின் முன் சக்கரங்கள் தனியே துண்டிக்கப்பட்டன.

    அதனால் வேறு லாரியில் நூல் கோன்கள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பம்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திண்டல்:

    ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட வீரப்பம் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    வீரப்பம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஆற்றுநீர், ஆழ் குழாய் நீர் மேல்நிலை தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வீரப்பம் பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது.-

    எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆற்று நீர் நீரேற்று நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் இப்பகுதிக்கு முறையாக ஆற்று நீர் கிடைக்கவில்லை.

    அதே போல் ஆழ்நிலை குழாய்கள் வறண்டு விட்டதால் முறையாக தண்ணீர் வருவதில்லை. ஒரே ஒரு ஆழ்குழாய் மூலம் தற்போது தண்ணீர் பிடித்து வருகிறோம். அதுவும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்க வேண்டி உள்ளது.

    மேலும் எங்கள் பகுதிக்கு வரும் கீழ்பவானி வாய்க்காலில் வரும் தண்ணீரும் முறையாக பராமரிப்பு இன்றியும், தூர்வார படாததாலும் குறைந்த அளவே வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீராக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரைக்கும் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை தொட்டியில் குடிநீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    ×