search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 children"

    இலங்கை அகதி கலானி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் அதே பகுதியை சேர்ந்த கலானி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.

    இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார். 
    ×