search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road stroke"

    திருவோணம், திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். #GajaCyclone
    திருவோணம்:

    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டகங்கள் அதிக சேதத்தை சந்தித்துள்ளது. மேலும் கஜா புயல் வந்து சென்று 4 நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதியே இல்லாமல் மக்கள் இருந்து வருகின்றனர்.

    சேதமான இடங்களில் அதிகாரிகள் வந்து பார்வையிடுவது இல்லை. சேதமான பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று டெல்டா பகுதி மக்களிடையே கடும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் வருகின்றனர். அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

    இந்த நிலையில் திருவோணம் பகுதியில் புயல் காரணமாக அதிக அளவில் வாழை, தென்னை, சவுக்கு, தேக்கு மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் என்று பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 4 நாட்கள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர்.

    மின் இணைப்பு இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும், உணவு கூட இல்லாமலும் இருந்து வருகிறோம் என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர். திருவோணம் மற்றும் கரியா விடுதி, வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம், பணிகொண்டான் விடுதி, காடுவெட்டி விடுதி, காவாளிப்பட்டி, கட்டுவான்பிறை, நெய்வேலி உள்ளிட்ட சுற்று புறங்களில் ஏற்பட்ட சேதத்தை இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடவில்லை என்ற கோபத்திலும் மக்கள் இருந்து வருகின்றனர்.

    ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டால் தான் நாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும் ஆனால் இது வரை எந்த அதிகாரிகளும் வரவில்லை என்பதை கண்டித்து இன்று ஊரணிபுரம் கடை வீதியில் மக்கள் திடீரென திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் கூறும் போது, அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதே போன்று அருகே திருவோணம் அருகே உள்ள நம்பிவயல், மூனுமாங்கொல்லை ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதே போல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் நிவாரண உதவிகள் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிவாரண உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone
    கஜா புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நாகை மாவட்ட மீனவ கிராம மக்கள் நிவாரணம் வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 44 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் புயலால் படகுகள் சேதமாகி வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெற்கு பால்பண்ணை சேரி பகுதியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முகாமில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் தங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் சாமந்தன்பேட்டை பகுதி மீனவ கிராம மக்கள் திடீரென நாகை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பால்பண்ணை சேரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் கஜா புயலால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். இங்கு வந்து அதிகாரிகள், எங்களுக்கு குறைகளை கேட்பது இல்லை. புயலால் வீடுகள், படகுகள் சேதமாகி உள்ளது. தமிழக அரசு அதிகாரிகள், சேத விவரங்களை கணக்கெடுக்காமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முன்வராமல் உள்ளனர். இதை கண்டித்து மறியல் செய்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone
    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி அருகே கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடிக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த ஆனந்தம்பாளையம் ஊராட்சி கரியாகவுண்டன் வலசு என்ற ஊரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சிஒன்றிய நடு நிலைப்பள்ளி, மாரியம்மன் கோவில், மற்றும் நியாய விலைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    ஆனால் இங்கு உள்ள 200 வீடுகளின் கழிவுநீர் வெளியேற எந்த வசதியும் ஊராட்சி மன்றத்தால் செய்து தரப்படவில்லை.

    இந்த ஊராட்சியில் குடிநீர், சாக்கடை, மின்சார வசதி என்று எந்த ஒரு வசதியும் இதுநாள்வரை செய்து தரப்படவில்லை. இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தும் சாக்கடை கட்டி தரப்படவில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பெயர் தெரியாத காய்ச்சல் அனைவருக்கும் வருகிறது.

    இதனால் பொதுமக்கள், குழந்தைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் சாக்கடை வசதி கோரி பலமுறை விண்ணப்பம் அளித்தும் பலனில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் இதுநாள்வரை ஊராட்சிமன்ற தலைவர் சொல்வதை மட்டும் செய்துவந்தோம். கடந்த 10ஆண்டுகளாக எந்தவித ஆவணங்களும் எங்களிடம் இல்லை என்கின்றனர்.

    எனவே ஆனந்தம்பாளையம் ஊராட்சி ஆவணங்களை உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து எங்களுக்கு தேவையான சாக்கடைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை செய்து தர முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலைமறியல் செய்ய உள்ளதாகவும் கூறினர். #tamilnews
    ×