என் மலர்
ஈரோடு
பு.புளியம்பட்டி:
கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார் புங்கம்பள்ளி அருகே வந்தது. அப்போது புங்கம்பள்ளி குளம் அருகே வந்த போது அரசு பஸ் மற்றும் கார் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அலறினர்.
இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந் தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்சு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள பள்ளத்து மேடு வானிபுதூரை சேர்ந்தவர் பிரபு(28). இவர் அப்பகுதியை சேர்ந்த பூங்கோதை(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சேரன்(6), தீரன்(1) என 2மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு கோபியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி கண்டித்தார். இதில் விரக்தி அடைந்த பிரபு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடைந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பூங்கோதைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.
இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113
கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385
வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128
செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419
சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623
4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கடந்த 2 தினங்களுக்கு முன் தனது கட்சி பதவியை உதறினார்.
அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.
இதனால் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதவியை ராஜினாமா செய்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நான் எப்போதும் அ.தி.மு.க. தொண்டன். அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன் என்று கூறினார்.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. இன்று தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.
கட்சி பதவியை விட்டு விலகிய அவர் அடுத்து என்ன நடவடிக்கையில் ஈடுபடலாம்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் உள்பட கட்சி முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
எந்த காரணம் கொண்டும் நான் ஒரு போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். அதே சமயம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருந்துறை பகுதியில் அ.தி.மு.க.வுக்கு வேலை செய்யாமல் அ.ம.மு.க.வுக்கு வேலை செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
கருத்து கணிப்பை மீறி வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அ.தி.மு.க.வை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். வேறு கட்சிக்காரர்கள் அமைச்சர் பதவி கொடுத்தாலும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன்.
மக்களோடு மக்களாக அ.தி.மு.க. தொண்டனாக கரை வேட்டி கட்டி கொண்டு என்றும் அ.தி.மு.க தொண்டனாகவே இருப்பேன்.
எனது தொகுதி மட்டுமில்லாமல் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் சாய கழிவு நீர் பிரச்சனை நிலவி வருகிறது. அதுவும் மழை பொய்த்த காலத்தில் இந்த சாயக்கழிவு குடிநீரில் கலந்து வருகிறது.

அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேர்தலில் எதிர்க்கட்சியினரை குறி வைத்துதான் நமது பிரசாரம் இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்களே கட்சிக்கு துரோகம் செய்து உள்ளனர். அப்படிப்பட்ட சிலரை நாங்கள் பிடித்து கொடுத்தோம். தகுந்த ஆதாரத்துடன் இதை கொடுத்தும் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் (அமைச்சர் கருப்பணன்) தலையீட்டின் பேரில் வெளியே விட்டு விட்டார்கள்.
இதனால் நான் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
ஒரு முக்கிய நபர் அ.தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டு போடச் சொல்லி பணமும் கொடுத்துள்ளார். இதையும் நான் கட்சி தலைமையில் கூறி உள்ளேன்.
அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு விசாரிப்போம் என்று கூறி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 48). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினம்.
தற்போது சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் சென்று கொண்டிருந்தார்.
மேட்டூர் அருகே நவப்பட்டி என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சேர் வேன் எதிர்பாராத விதமாக மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜாதா(46) என்ற மனைவியும் சஞ்ஜய் என்ற மகனும் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.
விபத்து குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.
இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருக்கும் கே.சி.கருப்பணனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெடித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சருக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தினார். “கட்சிக்காக பணி ஆற்றாமல் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் அமைச்சர் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். பாராளுமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று புகார்களை அள்ளி வீசினார்.
அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. போர்க்கொடி தூக்கியதால் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விலகல் (ராஜினாமா) கடிதத்தை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட் டுக்கே சென்று வழங்கினார். அப்போது அவரிடம் முதல்வர் “எதற்கு இந்த அவசரம் சற்று பொறுமை காக்கவும்” என்று கூறியதாக தெரிகிறது.
எனினும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. “எனது தனிப்பட்ட முடிவு தான் இது. தொடர்ந்து கட்சி பணி செய்வேன்” என்று கூறினார்.
முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, “எனது சொந்த முடிவு தான் இது. பதவி விலகலால் எந்த மன உளைச்சலும் இல்லை. ரொம்ப சந்தோஷமும் இல்லை” என்று கூறினார்.
கட்சி பதவியை விட்டு விலகல் குறித்து இன்று காலை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “கட்சிக்கு உழைக்க பதவி ஒன்றும் அவசியம் இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அ.தி.மு.க. தொண்டன். அம்மா இருந்த போது அமைச்சராக இருந்த நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்து மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற செய்தவன் நான். எனது பணி தொடரும். தொண்டனாக இருந்து கட்சி பணியாற்றுவேன். ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து பாடுபடுவேன். இதில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்பையொட்டி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கட்சி பதவியை ராஜினாமா செய்த விவகாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி வாய்க்கால்மேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 22).
திருமணம் ஆகாத இந்த வாலிபர் இரு சக்கர வாகன மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் மயில்சாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டது. தலையில் கல்லை போட்டு கொன்றதாக கூறப்பட்டது.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக் தகவல் வெளியாகி உள்ளது. வாலிபர் மயில்சாமியை அவரது தம்பியே கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட மயில்சாமியின் தம்பி பெயர் யோகேஸ்வரன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரிடம் மயில்சாமி அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
மேலும் யோகேஸ்வரன் கொண்டு வரும் சம்பளப் பணத்தையும் மயில்சாமி வாங்கி கொண்டு போய் விடுவாராம். மேலும் மோட்டார் சைக்கிளையும் கேட்பாராம். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு தொடர்ந்து இருந்தது.
சம்பவத்தன்றும் அவர்களின் வீட்டு முன்பு உள்ள மரத்தடியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த யோகேஸ்வரன் அண்ணன் மயில்சாமியை பிடித்து தலையை மரத்தில் மோத வைத்தார். மேலும் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. அந்த கல்லிலும் அண்ணனின் தலையை மோதச்செய்தார்.
இதில் மயில்சாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இதுபற்றி பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது:-

தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 50 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை,
அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி:
கோபியை அடுத்த பெளவகாளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி சத்யா (வயது25). இவர்களுக்கு கவின் ஆகாஷ் (5) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சத்யா அங்குள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் சத்யா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவை வெங்கடாசலபதி கண்டித்தார்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வெங்கடாசலபதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவி சத்யா, மகன் கவின் ஆகாஷ் ஆகியோர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியையும் மகனையும் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை.
இதையடுத்து வெங்கடாசலபதி கோபி போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார்.
அதன்பேரில் கோபி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சத்யா, கவின் ஆகாஷ் இருவரையும் தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது25). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், சபரி என்ற மகனும் உள்ளனர்.
லட்சுமி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
லட்சுமி எப்போதும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் சிக்கரசம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்குவார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற லட்சுமி மாலை வேலையை முடித்து சிக்கரசம்பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென லட்சுமியை பிடித்து இழுத்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார்.
இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
லட்சுமி கொலையுண்ட பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட கத்தி ஒன்று இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சுமிக்கு தெரிந்த நபரே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. அவரது நடவடிக்கைகள் நன்கு தெரிந்து அவர் எங்கே எப்போது வருவார் என்று கண்காணித்து இந்த கொலையை அரங்கேற்றி உள்ளார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையுண்ட பகுதியில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, லட்சுமி கொலை செய்த நபர் அவரது நடவடிக்கைகள் நன்கு தெரிந்து அவரை பின்தொடர்ந்து கொலையை நிறைவேற்றி உள்ளார். எதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்றனர்.
கோபி:
கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39) டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார்.
கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம் டிராக்டர் ஓட்டிய வகையில் பாக்கி பணம் ரூ.4 லட்சம் தர வேண்டும் எப்போது தருவாய்? என சுந்தரம் கேட்டாராம். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் டிராக்டர் டிரைவர் சிவக்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்தார். கடந்த 11-ந் தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து கோபி போலீசார் சுந்தரம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டிஎன்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.
உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.
இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






