என் மலர்
ஈரோடு
ஈரோடு சம்பத் நகரில் கல்யாணி கிட்னி கேர் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி சார்பில் ‘பேஸ்புக்’ (முகநூலில்) ஒரு கவர்ச்சிகரமான போலி விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், கிட்னி கொடுப்பவர்கள் இந்த முகவரியில் முன் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும்போது கிட்னி கொடுத்தால் ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
கிட்னி கொடுக்க முன்பதிவு பணம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்ட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு கிட்னிக்கு 3 கோடி ரூபாய் என்ற அறிவிப்பால் ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, கரூர் உள்பட தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் இந்த போலி முகவரி உள்ள கும்பலை சேர்ந்தவர்களுக்கு முன் பணம் கட்டி உள்ளனர்.
இந்த முன் பணமே கோடிக்கணக்கில் சேர்ந்திருக்கும் என தெரிகிறது. தனியார் ஆஸ்பத்திரி பெயரில் முகநூல் தொடங்கி இந்த பண வசூல் வேட்டை நடத்திய கும்பல் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த கும்பல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள முக்கியமான ‘கிட்னி’ ஆஸ்பத்திரி பெயரில் போலி பேஸ்புக் மூலம் அறிவிப்பை வெளியிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களிடம் கிட்னி கொடுக்க முன் பணம் வசூலித்து இருப்பதாகவும் ஈரோடு போலீசார் தெரிவித்தனர்.
இப்படி பணம் கொடுத்த ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் ஈரோட்டில் உள்ள தனியார் ‘கிட்னி’ ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகே அவர்களுக்கு தங்கள் ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் வெளியிட்டு பல கோடி பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையொட்டி தனியார் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸ் சூப்பிரண்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளார்.
மேலும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த கிட்னி மோசடி விவகாரத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் கிட்னி கொடுக்க பதிவு செய்து முன் பணம் கொடுத்து ஏமாந்து உள்ளார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ‘கிட்னி’ மோசடி குறித்து புகார் கொடுத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி பெயரில் போலி முகநூல் மூலம் ‘கிட்னி’ வாங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரி பெயரில் கிட்னி வாங்குவதாக கூறி பல கோடி மோசடி செய்துள்ள கும்பல் பல இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கெல்லாம் தலைமை மோசடி கும்பல் ஆந்திர மாநிலம் ஐதராபத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனால் ஈரோடு மாவட்ட போலீசார் ஐதராபாத் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் பெயரில் முகநூலில் (பேஸ்புக்) போலி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அந்த கணக்கில், முன்பதிவு செய்து தேவைப்படும்போது கிட்னி கொடுத்தால் ரூ.3 கோடி தருவதாக விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி சிலர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு முன்பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட தொகை வசூலித்து மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் டாக்டர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் கொடுத்தனர். அவருடைய உத்தரவின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள அம்மன் கோவில் பதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (வயது 60). இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர்.
கோபி முத்துவேலப்பன் வீதியில் உள்ள மகன் தீனதயாளன் வீட்டில் அவர் வசித்து வந்தார்.
பாக்யலட்சுமி தனது வீட்டின்முன் வளர்த்து வரும் பூச்செடிகளில் தினமும் பூ பறிப்பார். அதேபோல் இன்று காலையும் பாக்யலட்சுமி பூ பறிக்க வீட்டின் வெளியே சென்றார். அப்போது வெளியே துணி காயபோட்டிருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதை கவனிக்காத அவர் அந்த கம்பியை தொட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாக்யலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்த வாலிபர் ஈரோடு சூளை நத்தக்காடு பூசாரித்தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் பிரதீப்குமார்(25) என்பதும், என்ஜினீயரிங் படித்து முடித்து ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மீண்டும் வேலைக்காக செல்லும் ரங்கம்பாளையம் தண்டவாளத்தை செல்போனில் ஹெட்போன் அணிந்து பாட்டு கொண்டே கவனக்குறைவாக கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருக்கலாம் என தெரியவந்தது.
இதனையடுத்து பிரதீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் ஈரோடு மார்க்கெட்டிற்கு கடந்த ஒரு மாதமாக போதிய தக்காளி வரத்து இல்லாததால் அதன் விலை உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்தான தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் 14 கிலோ கொண்டபெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன.
இதன் காரணமாக சில்லரை விலையில் கடந்த சிலநாட்களாக கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் தரமான தக்காளிகள் தற்போது கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்களும், ஓட்டல் கடைக்காரர்களும் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஈரோடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில்இருந்து வரத்தாகும். ஆனால் தற்போது தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் மட்டுமே குறைந்தளவில் வரத்தாவதால் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரையும்,சில்லரை விலையில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் விடிய-விடிய பலத்த சூறை காற்றுடன் இடி- மின்னலுடன் மழை கொட்டியது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு 9.30 மணிக்கு பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து 1½ மணி நேரம் விடாமல் பெய்தது. இதனால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பல இடங்களில் ரோட்டோரம் உள்ள மரங்கள் பலத்த காற்றால் பேயாட்டம் ஆடியது. சட... சட.. வென மரக்கிளைகள் முறிந்தது.
சத்தி-கோவை ரோட்டில் ஒருவேப்ப மரமும் இதேபோல் மேட்டுப் பாளையம் ரோட்டில் ஒரு வேப்ப மரமும் முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சத்தியில் பலத்த காற்றால் 3 மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் சத்தியில் மின்தடை ஏற்பட்டது.
நேற்று இரவு 9 மணிக்கு நகரில் தடைப்பட்ட மின்சாரம் இன்று அதிகாலை 5 மணிக்குதான் வந்தது. விடிய... விடிய... மின்சாரம் இல்லாததால் மக்கள் தூக்கமின்றி மிகவும் அவதிப்பட்டனர்.
கோவை ரோட்டில் சோமசுந்தரம் என்பவரது தோட்டம் உள்ளது. சூறாவளி காற்றால் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த சுமார் 2 ஆயிரம் செவ்வாழை மரங்கள் சூறை காற்றால் முற்றிலும் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதன் சேதமதிப்பு ரூ.2லட்சம் ஆகும்.
பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் சத்தி அருகே உள்ள திம்மையன் புதூரில் பலத்த காற்றால் முகுந்தன் என்பவரது வீட்டின்மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடு சேதம் அடைந்தது.
ஈரோடு:
ஈரோடு சி.என்.சி. கல்லூரி பின்புறம் காடு போல் ஒரு பகுதி உள்ளது. இங்குள்ள வழி தடத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கண் பகுதியில் ஆழமான காயமும் இதே போல் தாடை பகுதியில் ஆழமான காயமும் இருந்தது.
அவரை மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தி கொலை செய்திருக்க கூடும். அல்லது கூர்மையான கல்லால் அவரை தாக்கி கொன்றிருக்க கூடும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஈரோடு நேதாஜி நகரை சேர்ந்த ராஜ் (வயது 65) என தெரிய வந்தது.
இவர் அந்த பகுதியில் உள்ள வேலன் நகரில் ஒரு தறி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி (55) என்ற மனைவியும், விஜயலட்சுமி (35), சுப்புலட்சுமி (32) என்ற 2 மகள்களும், சிவகுமார் (30) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சிறிது தூரம் ஓடி அருகே உள்ள காம்பவுண்டு சுவர் பக்கம் நின்று குறைத்தது.
இதனால் கொலையாளிகள் அந்த காம்பவுண்டு சுவற்றில் ஏறி தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.
தறி தொழிலாளி ராஜ் இரவு பணிக்கு வேலைக்கு சென்றிருக்க கூடும். அதனால் தான் வரவில்லை என்று அவரது வீட்டில் நினைத்து கொண்டு இருந்தனர்.
இன்று காலை அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
ராஜை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. அருகே மது பாட்டில்கள் கிடந்தது. இதனால் நண்பர்கள் மது குடித்த போது அதில் ஏற்பட்ட தகராறில் ராஜ் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபியை அடுத்த கெட்டி செவியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது56). இவர் கோபி அடுத்த சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜேம்ஸ் ராபர்ட் பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் காரில் கெட்டி செவி ஊரிலிருந்து சிறுவலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஜேம்ஸ் ராபர்ட் ஓட்டி வந்தார்.
நள்ளிரவு 2 மணி அளவில் கெட்டி செவியூர் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரேஞ்சர் மில் எதிரே உள்ள ஒரு புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஜேம்ஸ் ராபர்ட் மற்றும் கார்த்திகேயன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோபி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தார். கார்த்திகேயன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட்டுக்கு ரோசலின் என்ற மனைவியும், ஸ்டெபி இன்சென்டா என்ற மகளும் உள்ளனர்.
ஜேம்ஸ் ராபர்ட் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கோபி போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 45 தபால் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கோட்ட தபால் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் கூறினார்.
ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் ஈரோடு மற்றும் கோவை தலைமை தபால் நிலையம், நம்பியூர், ஒலகடம், சூரம்பட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., டி.என்.பாளையம், கருங்கல் பாளையம், பவானி கோபி தெற்கு, சித்தோடு, பி.பி. அக்ரஹாரம், கரட்டடி பாளையம், கள்ளிப்பட்டி, சிவகிரி, மொடக்குறிச்சி, துடுப்பதி தபால் நிலையங்களில் இலவசமாக ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பெருந்துறை, அம்மாபேட்டை, காவிரி ரெயில் நிலையம் தபால் நிலையம், ஊஞ்சலூர், சக்தி நகர், காஞ்சிக் கோவில், அரச்சலூர் ஈரோடு ரெயில்வே காலனி, சென்னிமலை, காசி பாளையம், கொடுமுடி, வீரப்பன் சத்திரம, விஜயமங்கலம் உள்பட 45 தபால் நிலையங்களில் கட்டணமில்லாமல் ஆதார் பதிவு செய்யலாம்.
அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண் போன்ற திருத்தங்களை ரூ.50 செலுத்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே கடும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியதும் மேலும் கூடுதலாக வெயில் கொளுத்தி வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 104 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவு தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது.
வெயிலை தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சில மக்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பார்க்க சென்ற வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், சர்பத், மோர், இளநீர் ஜூஸ் கடைகளில் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
காலை 9 மணி முதலே அனல் காற்றுடன் வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. வீட்டில் மின்விசிறி போட்டாலும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வரும் 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் கொளுத்த உள்ளதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் 47719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 39010 வாக்குகளும் பெற்றன.






