என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    புரட்டாசி மாதம் பிறந்தது முதலே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் பலர் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி பிறந்து 3-வது சனிக்கிழமையான நேற்று வெகு விமர்சையாக பெருமாள் கோவில்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதன உடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் மேள தாளங்கள் முழங்க வேத மந்திரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் வரதராஜ பெருமகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மேள தாளங்கள் வாசிக்க அதற்கேற்றார் போல் ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.

    அப்போது செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆடி, பாடி நடனமாடி மகிழ்ந்தார். இதை தொட ர்ந்து அவர் இசைக்கேற்றப்படி ஆடி கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தலங்களில் பரவி வருகிறது. இதை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

    • இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    • இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நல வாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் என 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், 62 ஆயிரத்து 880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 9 பேருக்கும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 4 மணிக்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, ஆர்.கே.வி.ரோடு, சக்தி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கின்றது.

    இந்த திடீர் மழையால் ஈரோட்டில் மேடன பகுதியான சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளநீர் நாடார் மேடு பகுதி நோக்கி பாய்ந்து சென்றது. இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் தாழ்வாக உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    வீட்டில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகர பகுதியில் அதிகபட்சமாக 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடம்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கம்பாளையம் பகுதிக்கு அரசு பேருந்து தினமும் 2 முறை இயக்கப்ப டுகிறது. மழைக்காலங்களில் குரும்பூர் பள்ளங்களில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

    இதேபோல் நேற்று இந்த கனமழையால் சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சக்கரை பள்ளம் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர்.

    இந்நிலையில் காய்கறி லோடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. டிரைவரால் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கயிறு கட்டி சரக்கு வாகனத்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். இந்த பகுதி மக்கள் நீண்ட வருடமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிககனத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருள்வாடி, சூசைபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கெட்டவாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மழைநீர் வடிந்த உடன் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் ஆசனூர், திம்பம், அரேபாளையம் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அரேபாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் வலுவிழந்து காணப்பட்ட மூங்கில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.

    • சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 2-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    கருங்கல்பாளையம் முதல் காளை மாட்டு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி தொடங்கியது.


    இதற்காக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாளை ஈரோடு-மேட்டூர் ரோடு ஸ்வஸ்திக் கார்னர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

    • பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
    • வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் ஏற்கனவே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் மீண்டும் இ-மெயில் மூலம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபுரத்தான் பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு அவசர அவசரமாக விடுமுறை அறிவித்து இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.


    பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை வேக வேகமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பெருந்துறை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக பள்ளிக்கு வந்து வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    பள்ளி கேட் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் ஈரோடு நாராயண வாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக ஈரோடு அரசு மருத்துவமனை, ஜி.எச்.ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், எல்லை மாரியம்மன் கோவில். ஈரோடு பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளைமாட்டு சிலை சாலை என பல பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்பு தான். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பன்னீர்செல்வம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையிலும், ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, பஸ் நிலையம் என பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டன. இதனால் மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதற்கட்டமாக பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    தற்போது இன்று 2-ம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளை மாட்டு சிலை சாலை வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆக்கிரமிப்பு பணி அகற்றும் போது கடை உரிமையார்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் இதே சாலைகளில் கடைகளின் முன்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்சாரத்துறையினர், போலீசார், போக்குவரத்து போலீசார், தொலை தொடர்பு துறையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    சாலைகளை ஆக்கிரமித்து உள்ள விளம்பர தட்டிகள், பலகைகள், கழிவுநீர் கால்வாய் மீது அத்துமீறி கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை பணியாளர்கள் அகற்றினர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 3-ம் கட்டமாக நாளை பன்னீர்செல்வம் பூங்கா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை மீனாட்சி சுந்தரானார் சாலையிலும், நாளை மறுநாள் ஈரோடு சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரை மேட்டூர் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கர்நா டகா, ஆந்திரா, தெலு ங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை யான இன்று ஏராளமான பொதுமக்கள் பவானி கூடு துறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.

    இதையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.

    அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வா கத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 72 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வலியுறுத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாக னங்கள் அணிவகுத்தன.

    இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் 300-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.


    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகு டேஸ்வரரை வழிபட்டனர். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலும் பக்த ர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    அம்மாபேட்டை மீனா ட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே பக்த ர்கள் கூட்டம் அலைமோ தியது. அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்தனர். 

    • பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை வழிபட்டு கோவில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.

    குறிப்பாக கர்நாடக மாநில எல்லையை யொட்டிய பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் அந்த மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை வழிபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் கூட்டம் காரணமாக வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் தரிசனத்துக்கு வருபவர்களும் வெயிலால் சிரமம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து பக்த ர்களின் சிரமத்தை தவி ர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தில் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடைகள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது அவர்கள் வசதிக்காக பயன்படுத்தப்படும். வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் வரவழைக்கப்பட்டுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
    • கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஈரோடு:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் கட்சிக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சி கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி மட்டும் ஏற்றப்படாமல் இருந்தது. கம்பம் நடுவதற்காக மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் அனுப்பி இருந்தனர்.

    ஆனால் பதில் வரவில்லை. பின்னர் மீண்டும் தமிழக வெற்றிக்கழகத்தினர் நினைவூட்டம் கடிதம் அனுப்பி இருந்தனர். அதற்கும் பதில் வரவில்லை. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழக வெற்றிக்கழகத்தினர் கம்பத்தில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. நேற்று மாலை 6.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்சிக்கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நாளை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து டவுன் டி.எஸ்.பி. முத்துக்குமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அப்போது கட்சி நிர்வாகிகளுடன் டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதால் நிகழ்ச்சி நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதற்கு கட்சி நிர்வாகிகள் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை பதில் வரவில்லை. அனுமதி கடிதம் ஆவணங்களை உங்களிடம் காட்டுகிறோம் என்று கூறி செல்போனில் ஆவணங்களை காட்டினர்.

    ஆனால் இது செல்லுபடியாகது. முறைப்படி அனுமதி கடிதம் பெற்றால் தான் நிகழ்ச்சி நடத்த முடியும். மீறி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது டவுன் டி.எஸ்.பி.யிடம் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை இந்த பிரச்சனை நீடித்தது.

    பின்னர் ஒரு வழியாக சமாதானமாகி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உரிய அனுமதி பெறாமல் எந்தவித நிகழ்ச்சியும் நடத்தப்படமாட்டது என்றும் மீறி நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதாக கட்சியினர் கடிதம் மூலம் உத்தரவாதம் அளித்தனர்.

    இதனை ஏற்று போலீசார் கலைந்து சென்றனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177-ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டம்ஈரோடு:

    பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை.

    இதற்கிடையே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த முறையை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 11 வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு அரசாணை 149-ஐ ரத்து செய்து தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அளித்த 177-ஐ நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகத்தில் மண்டல வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காளைமாட்டு சிலை அருகில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் காதுகளில் பூ வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை காக்க நியமனத்தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக அறிவித்த அரசாணை 177-ஐ நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

    • பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.
    • பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 20). இவர் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக நவீன்குமார் தினமும் சத்தியமங்கலத்தில் இருந்து பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு செல்வது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் நவீன்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ் மூலம் கோபி செட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். நவீன்குமார் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வந்துள்ளார். பஸ் புதுவள்ளிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (55) என்பவர் தனது மொபட்டில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுவள்ளிபாளையம் பிரிவு சின்ன வளைவில் பஸ் திரும்பிய போது மொபட்டில் சென்று கொண்டிருந்த சண்முகம் மீது பஸ்சில் படிகட்டில் பயணம் செய்த நவீன்குமார் மோதினார்.

    இதில் நவீன் குமாருக்கும், சண்முகத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் வாலிபர் உட்பட 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×