என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ரவுடியிசம் தொடர்பாக 7 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2020) ரவுடியிசம் தொடர்பாக கொலைகள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 50 கொலைகள் நடந்துள்ளது. 910 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 130 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக 77 பேர், குற்ற வழக்கில் தொடர்புடைய 15 பேர், சாராயம் கடத்திய 29 பேர், மணல் கடத்திய 9 பேரும் அடங்குவர்.
310 திருட்டு வழக்குகளில் 267 வழக்குகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 815 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 302 பேர் சாலை விபத்தில் பலியானார்கள். 2 ஆயிரத்து 602 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டை விட குறைவாகும்.
2019 -ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 913 மோட்டார் வாகன வழக்குகளும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 19 ஆயிரத்து 969 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் 7 வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய உதவி செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 959 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்தார்.
கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திரவுபதிஅம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 65) என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டடு, கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாசில்தார் சுமதி மற்றும் போலீசார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்த வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறந்த வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது32). கார் டிரைவர் என்பது தெரிய வந்தது.
இவருக்கு திருமணமாகி தீபா (30) என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும், சத்யராஜ் கொலை செய்யப்பட்டு இந்த பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சத்யராஜ் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சத்யராஜிம், சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னி நத்தம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பவரும் நண்பர்கள் என்பதும், அந்த பழக்கத்தில் அடிக்கடி சத்யராஜ் வீட்டுக்கு வந்து செல்லும் அய்யப்பனுக்கும், சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. கள்ளக்காதலை சத்யராஜ் கண்டுபிடித்து இருவரையும் எச்சரித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சத்யராஜை அவரது மனைவி தீபா, கள்ளக்காதலன் அய்யப்பனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து போலீசாரிடம் அய்யப்பன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது நண்பரான சத்யராஜின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்றுவந்தேன். அப்போது எனக்கும் சத்யராஜின் மனைவி தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உலலாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த சத்யராஜ் எங்களை கண்டித்தார்.
அதனால் சத்யராஜ் உயிரோடு இருந்தால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது என நினைத்தோம். இதனால் நாங்கள் சத்யராஜை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி கடந்த 17-ந் தேதி சத்யராஜை மதுகுடிக்கலாம் என்று கூறி சாத்தமங்கலம் அருகிலுள்ள வாழைத் தோப்புக்குள் அழைத்து சென்றேன்.
பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து சத்யராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அங்கேயே புதைக்க முயன்றோம். அப்போது மழையால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அங்கு புதைக்க முடியவில்லை.
இதையடுத்து காரில் சத்யராஜ் உடலை ஏற்றி பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்றேன். அங்கு குழிதோண்டி சத்யராஜின் உடலை புதைத்தோம். சில நாள் கழித்து மீண்டும் சடலம் புதைத்த இடத்தில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி வந்து உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் வைத்தோம். இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல புதைக்கப்பட இடத்தில் இருந்து கை வெளியே தெரிந்ததால் நாங்கள் சிக்கி கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சத்யராஜின் மனைவி தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களான வினோத், சுபாஷ், அருண், கார்த்தி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் ரேசன் கடை அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.
நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு அரிசி, எண்ண உள்ளிட்ட 5 பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ் செய்தி வந்துள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் பொருட்கள் எதுவும் வாங்காத நிலையில் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கிராம மக்கள் ரேசன் கடைக்கு வந்தனர்.
அப்போது ரேசன் கடையை திறந்த ஊழியர் சர்க்கரை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு சென்ற அப்பகுதி மக்கள் தங்களது ரேசன் கார்டை எடுத்து சென்று தங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்காமல் எப்படி எங்களுக்கு குருஞ்செய்தி வந்தது எனக் கேட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரேசன் கடை ஊழியர் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை விற்பனையாளரை கடையின் உள்ளே வைத்து பூட்டி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் ரேசன் கடை ஊழியரை மீட்டு பொதுமக்களிடம் தங்களுக்கு குறுஞ் செய்தியில் அனுப்பப்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.






