என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பம் கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 65). இவரது கணவர் இறந்துவிட்டார்.
பச்சையம்மாள் அவரது உறவினரான தாயார் அம்மாள் (70). என்பவருடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் அதிகாலையில் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை கண்டதும் வீட்டில் இருந்த பச்சையம்மாள், தாயார் அம்மாள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மூதாட்டிகள் அணிந்திருந்த நகையைக் கழற்றி தருமாறு மர்ம மனிதர்கள் கூறினர். இதில் அதிர்ச்சி அடைந்த பச்சையம்மாள் திருடன்...திருடன்...என்று அலறினார். உடனே அந்த மர்ம கும்பல் பச்சையம்மாள் மற்றும் தாயார் அம்மாளை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தாயாரம்மாள் காயம் காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அந்த மர்ம கும்பல் மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் என 1 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பச்சையம்மாளின் பேரன் ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தாயாரம்மாள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தாயார் அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் பலியான பச்சையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் நீரும் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று இரவு முதல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.08 அடியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சதகுழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மணிமுக்தா அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அணையில் இருந்து 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கோமுகி அணை நிரம்பியதால் அதில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளின் நீரும் மணிமுக்தாற்றில் கலந்தது.
மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த மழைநீரும் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணை திறந்து விடப்படக்கூடிய சூழ்நிலை உருவானதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால் மணிமுக்தாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த வெள்ளத்தின் காரணமாக விருத்தாசலத்தை அடுத்த விலாங்காட்டு- மன்னம்பாடி தரைப்பாலம் மற்றும் மன்னம்பாடி-எடையூர் தரைப்பாலங்கள் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டன.
இதனால் அந்த பகுதியில் மன்னம்பாடி, எடையூர், கோவிலூர் உள்பட 15-க்கும் கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இதனால் தீவனூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலமும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் ஆலிச்சகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் பட 5 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
15 ஆண்டுகளுக்கு பின்னர் மணிமுக்தாற்றில் இருகரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள ஓட்டிமேடு, பெருந்துறை, ஒட்டுமலை, கார்கூடல், டி.குமாரமங்கலம், கோ.ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் உளுந்து பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகியது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம் பாலக்கரையோரம் முல்லாத் தோட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள 4 வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தமிழகம் நோக்கி வீசுவது வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கடலூர், விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் சாலைகளிலும் நீர் கரைபுரண்டு ஓடியது.
மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பலத்த மழை பெய்தது.
இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் ஆதிவராகநல்லூர் காலனி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. சிலரது வீட்டுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் வடிகால் வாய்கால்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. பலரது வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
தொடர் மழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதியில் இதேநிலை நீடிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிந்தது.
சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அண்ணாமலைநகர், புதுச்சத்திரம், கிள்ளை உள்பட பல்வேறு பகுதியிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. பல வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.
மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் திருக்கனூர், புதுக்குப்பம், நடுக்குப்பம், ஓமிப்பேர், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த மணிலா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான பயிர்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பண்டரக்கோட்டை, கோட்லாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தனித்தனி இடத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்த கோபு (வயது 38), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), பண்டரக்கோட்டை சிவப்பிரகாசம் (37), புதுப்பேட்டை சங்கர் (47) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பஜனைமட தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 50). இவர் கடலூர் செம்மண்டலத்தில் தங்கியிருந்து கடலூரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது விஷத்தை குடித்து விட்டதாக தெரிகிறது.
இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபிநாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்






