என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பம் கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 65). இவரது கணவர் இறந்துவிட்டார்.
பச்சையம்மாள் அவரது உறவினரான தாயார் அம்மாள் (70). என்பவருடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் அதிகாலையில் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை கண்டதும் வீட்டில் இருந்த பச்சையம்மாள், தாயார் அம்மாள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மூதாட்டிகள் அணிந்திருந்த நகையைக் கழற்றி தருமாறு மர்ம மனிதர்கள் கூறினர். இதில் அதிர்ச்சி அடைந்த பச்சையம்மாள் திருடன்...திருடன்...என்று அலறினார். உடனே அந்த மர்ம கும்பல் பச்சையம்மாள் மற்றும் தாயார் அம்மாளை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தாயாரம்மாள் காயம் காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அந்த மர்ம கும்பல் மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் என 1 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பச்சையம்மாளின் பேரன் ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தாயாரம்மாள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தாயார் அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் பலியான பச்சையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்