என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்9 Jan 2021 12:02 AM GMT (Updated: 9 Jan 2021 12:02 AM GMT)
மனைவி இறந்த கவலையில் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தாலுகா வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் பினுகுட்டன்(வயது 36). இவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கொடிக்களம், திருவட்டத்துறை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ரோசி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரோசி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் இறந்தார்.
இதையடுத்து பினுகுட்டன், பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் மதுரையில் உள்ள ரோசியின் தந்தை வீட்டில் வசித்து வருகின்றனர். மனைவி ரோசி இறந்தது முதல், பினுகுட்டன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பினுகுட்டன் தான் தங்கியிருந்த அறையில் உள்ள மின்விசிறியில் கைலியால் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், பினுகுட்டுவின் உடலை பார்ததபோது அவரது இடது கை அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்தது தெரியவந்தது. பினுகுட்டன் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X