என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது
Byமாலை மலர்9 Jan 2021 6:40 AM GMT (Updated: 9 Jan 2021 6:40 AM GMT)
வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் நீரும் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று இரவு முதல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.08 அடியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சதகுழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் நீரும் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று இரவு முதல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.08 அடியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சதகுழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X