search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புதுப்பேட்டையில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

    புதுப்பேட்டையில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பஜனைமட தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 50). இவர் கடலூர் செம்மண்டலத்தில் தங்கியிருந்து கடலூரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது விஷத்தை குடித்து விட்டதாக தெரிகிறது.

    இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபிநாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    Next Story
    ×