என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

    புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனையானது.
    கடலூர் முதுநகர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.

    எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் மதுவகைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே போல் இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் டாஸ்மாக் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மது பானங்களை வாங்கினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 144 சில்லரை டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இது தவிர தற்போது பத்துக்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 80-க்கு மது விற்பனையானது.
    Next Story
    ×