search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிதம்பரம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

    சிதம்பரம் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் ஜவகர மகள் நந்தாதேவி (வயது 19). இவா் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று நந்தாதேவி படிக்காமல் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவரது தாய் ஏன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாய்? எனக்கேட்டு கண்டித்ததோடு, செல்போனை பிடுங்கி கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நந்தாதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடு்த்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நந்தாதேவி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×