என் மலர்
கடலூர்
- இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர்:
கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
- அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
கடலூர்:
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் நின்றது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வழக்கத்தை விட அதிகமான மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் ஒரு சிலர் மழைநீரையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி சென்றனர்.
ஆனால் தண்ணீருக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயங்காமல் நின்றது . இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி, தள்ளிக்கொண்டு வெளியேறினர் . இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டு போக்குவரத்ததுக்கு தடை விதிக்கப்பட்டது. . இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் தண்ணீர் வடிந்ததும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.
- கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.
- கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் திருப்பாதிரிப்புலியூரில் மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மாடி கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் பாழடைந்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தாமல் பூட்டிய நிலையில் இருந்து வந்தது . இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக இன்று அதிகாலை பாந்து இருந்த கட்டிடம் பலத்த சத்தத்துடன் இடிந்து சாலையில் சரிந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடிந்த சுவரை சுற்றி இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து இடிந்து விழுந்த கட்டிடஇடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். மேலும் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் . கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.
எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது
கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.
பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 33), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டை சேர்ந்த நளினி (26) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ம் நளினிக்கு நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்ற நளினி, கணவன் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலே வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் வாழப்பட்டை சேர்ந்த பாலாஜி (25) என்ற வாலிபரை நளினி 2-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார் நளினி, அவரது 2-வது கணவர் பாலாஜி, நளினியின் தந்தை கண்ணன், நளினியின் தாயார் லதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில்தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (27 ந்தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29- ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, திட்டக்குடி, விருத்தாச்சலம், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது நேற்று இரவு இடி மின்னலுடன் பெய்த வந்த நிலையில் கனமழையாக மாறியது. இதனை தொடர்ந்து விடிய விடிய மழை தொடர்ந்து வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 17 சென்டி மீட்டர், லால்பேட்டை பகுதியில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சாரி 10.9 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10.7 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதோடு குடியிருப்பு பகுதிகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்பட்டு வருகின்றது. மேலும் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்த காரணத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகின்றது. இந்த மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் சூழ்ந்தால் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு-
சேத்தியாதோப்பு - 168.4,லால்பேட்டை - 110.0,கொத்தவாச்சேரி - 109.0, ஸ்ரீமுஷ்ணம், - 107.1,புவனகிரி - 88.0, காட்டுமன்னார்கோவில் - 87.0, வேப்பூர் - 85.0,கலெக்டர் அலுவலகம் - 77.4, பரங்கிப்பேட்டை - 76.8, பெல்லாந்துறை - 74.5,கடலூர் - 69.5, குறிஞ்சிப்பாடி - 66.0,கீழ்செருவாய் - 64.0, சிதம்பரம் - 63.1,வடக்குத்து - 63.0, அண்ணாமலைநகர் - 58.0,தொழுதூர் - 58.0, லக்கூர் - 52.3, விருத்தா சலம் - 50.2,குப்பநத்தம் - 46.4, காட்டுமயிலூர் - 45.0,எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 40.0, மீ-மாத்தூர் - 38.0, வானமாதேவி - 30.6, பண்ருட்டி - 16.௦ மாவட்டத்தில் மொத்தம் 1,743.30 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது.
- நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 18- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வருகிறது. மேலும் காலையில் சந்திர சேகர் சாமி வீதியுலா, மாலையில் பஞ்சமூர்த்தி வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய விழாவான கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வாமன புரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலையில் வாமனபுரீஸ்வரர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பித்து தேர்த்திருவிழா நடைபெற்றது.
அப்போது திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து முக்கிய மாடவீதியில் உலா வந்து மீண்டும் தேர் நிலை அடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. கார்த்திகை மாதம் பிரம்ம உற்சவ விழாவில் சிகர நிகழ்ச்சியான ரோகிணி தீபம் ஏற்று விழா நாளை ( 27 -ந்தேதி )நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற உள்ளது. பின்னர் நடராஜர் தேரடி பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கோவில் எதிர்புறத்தில் உள்ள மலை மீது சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று பக்தி முழக்கத்துடன் ரோகிணி தீபம் ஏற்றப்படும் . இதில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு ரோகிணி தீபத்தை சுற்றி வந்து வழிபடுவார்கள். 29 -ந் தேதி பிரம்ம உற்சவ விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
- இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்ட ரூ.56.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய மாதிரி பள்ளிக் கட்டிடம் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான புதிய மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
இந்த கட்டிடத்தில் மாதிரி பள்ளிக் கட்டிடம் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளங்களுடனும், விடுதி கட்டிடம் 4 தளங்களு டனும் அமைய உள்ளது.விழாவில் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பிரமிளா, எம்.கே.எம். எஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ் பஷிருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
- கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் கார்கூடலூர் அணைக்கட்டு ரோடு உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஞானஜோதி - கோப்பெருந்தேவி தம்பதியர் கூரை வீடுகட்டி வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் ஞானஜோதி குடும்பத்துடன் உறங்கி கொண்டிருந்த போது பலத்த சத்தத்துடன் பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டது. அலறியடித்து எழுந்து பார்த்தபோது இவரது வீட்டின் ஓரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் கவிழ்ந்து கிடந்தது. இதில் அவரது கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமானது. இதேபோல பொது மக்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விழித்தெழுந்து வெளியில் வந்தனர். கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்தவர்களை விரைவாக மீட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். அதன் மூலம் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூரை வீட்டில் வசித்த ஞானஜோதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டில் நேற்று இரவு தங்கினார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி மக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சாலை யில் செல்லும் வாகனங்கள் திடீரென வழுக்கி கவிழ்கி றது. இதனால் தங்களின் வீடுகள் சேதமடைகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துகளினால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. குறிப்பாக மழை நேரத்தில் இந்த சாலை மேலும், வழு வழுப்பாகி அடிக்கடி விபத்து நடக்கிறது.
எனவே, இந்த சாலையை சொரசொரப்பாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தினர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் கூறினார்கள். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் விடு முறையில் இருப்பார்கள். விருத்தாசலம் போலீசார் நாளை திங்களன்று அதி காரிகளிடம் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பர். எனவே, மறியலை கைவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கூறினார். இதையேற்ற அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேனில் வந்தவர்கள் யார்? இதனை ஓட்டிவந்த டிரைவர் யார்? விபத்து எவ்வாறு நடந்தது? விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை என்ன? என அனைத்தும் மர்மமாகவே உள்ளது. இது தொடர்பான தகவலை விருத்தாசலம் போலீசார் கூற மறுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
- வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீ முஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது.
விடியற்காலை 6 மணிவரை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 17 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான 7.5 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித் துறை நீர்ப்பாசனப் பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து விநாடிக்கு 600 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடையது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது.
தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரியின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு குமார உடைப்பு வழியாகவும் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க் கால்கள் வழியாக பரங்கிப் பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
நீர் வரத்தை பொறுத்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரியில் இருந்து வெளி யேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ளதாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.






