search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free land"

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

    எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • புதுவை அருகே கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காதது குறித்தும் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் ஏம்பலம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு லட்சுமி காந்தன் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து வருவாய் கிராமத்திலும் ஸ்வமித்ரா திட்டத்தின் கீழ் சொத்து அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்குவது குறித்தும், அரசு புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு கண்டறிந்து பட்டியல் தயாரிப்பது, அரசு துறையில் உள்ள காலியிடங்களை கணக்கிடுதல் பற்றி பேசப்பட்டது.

    மேலும் ராஜீவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்காதது குறித்தும் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதுகுறித்து லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கூறுகையில் முதல் கட்டமாக அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு இடங்களை கண்டறிந்து முதல் கட்டமாக சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

    குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். #Italygovt
    ரோம்:

    ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

    குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்கு குழந்தைகள், இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக உள்ளனர்.

    அந்த நாட்டில் பல ஆண்-பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை. இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை. இது தான் குழந்தை பிறப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    மேலும், தம்பதியினருக்கும் குழந்தை பிறப்பதும் குறைவாகவே இருக்கிறது. ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் பலர் குழந்தை பிறப்பை நிறுத்தி விடுகிறார்கள்.

    எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.



    குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3-வது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

    இதுசம்பந்தமான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்பட இருக்கிறது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #Italygovt
    ராமேசுவரத்தில் மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய திமுக பிரமுகரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜான்பாய் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தர் நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    அதன் பேரில் ஜான்பாய் தனது குடும்பத்திற்கு சொந்தமான ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட செம்மடம் பகுதியில் 18 செண்ட் நிலப்பரப்பை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

    மனநல காப்பத்திற்கு நிலத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நடைபெற்றது.

    ராமேசுவரம் ராம்கோ பொறுப்பாளார் வேடராஜன் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் குடில் பிரணவானந்தர் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜா மணி முன்னிலை வகித்தார்.

    ஜான்பாய், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் மனோலயா நிர்வாக இயக்குனர் மணி கண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்து மனநல காப்பகத்தில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், மனோலயா முத்துராமன், முருகபூபதி, சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், வழக்கறிஞர் ராஜசேகர், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவர் நம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×