search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public praise"

    உசிலம்பட்டி அருகே ரோட்டில் கிடந்த ரூ.10 ஆயிரம் பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரியபாலார்பட்டியைச் சேர்ந்தவர் பரமன்.

    இவர் சம்பவத்தன்று கீழப்புதூர் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் வைத்திருந்த மணிபர்ஸ் மாயமானது. அதில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

    பல இடங்களில் தேடிப் பார்த்தும் மணிபர்ஸ் கிடைக்கவில்லை. இது குறித்து உசிலம்பட்டி டிவுன் போலீசில் பரமன் புகார் செய்திருந்தார்.

    கீழப்புதூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அபிஷேக் (வயது 5). முதல் வகுப்பு படித்து வரும் இவன் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

    அப்போது அங்கு ஒரு மணிபர்ஸ் கிடந்ததை பார்த்த அபிஷேக் அதை எடுத்து தனது தந்தையிடம் ஒப்படைத்தான். பர்சில் ரூ. 10 ஆயிரம் இருந்ததை பார்த்த செல்வம் போலீஸ் நிலையத்தில் ஏதேனும் மணிபர்ஸ் தொலைந்த வழக்குகள் பதிவாகியிருக்கிறதா? என விசாரித்தார்.

    அப்போது பரமன் மணிபர்ஸ் தொலைந்தது தொடர்பாக புகார் அளித்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வரவழைத்து விசாரணை நடத்தியதில் சிறுவன் அபிஷேக் கண்டெடுத்த மணிபர்ஸ் பரமனுடையது என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பணம் மற்றும் மணிபர்ஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ரோட்டில் கிடந்த மணிபர்சை தந்தையிடம் கொடுத்து உரியவரிடம் சேர்க்க உதவிய சிறுவன் அபிஷேக்கை போலீஸ் உயர் அதிகாரிகளும், அந்த பகுதி மக்களும் பாராட்டி வாழ்த்தினர். #tamilnews
    வேப்பனஹள்ளி பகுதியில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை அந்த பகுதி பொதுமக்கள் மக்கள் பாராட்டினார்கள்.
    வேப்பன ஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனபள்ளி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராம பகுதியில் உத்தனபள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு தலைமையில் உத்தனபள்ளி சுற்று வட்டார கிராமங்களில் பல்வேறு சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தொடர் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வேகத்தடை அமைத்தல் போன்ற சேவைகளை போலீசார் செய்து வருகின்றனர். போலீஸ் நிலையம் சுற்று சுவர் அமைத்தல் மற்றும் தற்போது உத்ததனபள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் இல்லாமல் வீதிகளில் சென்று தேங்கிய நிலையில் இருந்தது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்பட்டது. அந்த கழிவு நீர் கால்வாயை போலீசாரின் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
    ராமேசுவரத்தில் மனநல காப்பகத்துக்கு இலவசமாக நிலம் வழங்கிய திமுக பிரமுகரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது.

    இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் நகர் முன்னாள் தி.மு.க. செயலாளர் ஜான்பாய் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தர் நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.

    அதன் பேரில் ஜான்பாய் தனது குடும்பத்திற்கு சொந்தமான ராமேசுவரம் நகராட்சிக்கு உள்பட்ட செம்மடம் பகுதியில் 18 செண்ட் நிலப்பரப்பை இலவசமாக வழங்க முடிவு செய்தார்.

    மனநல காப்பத்திற்கு நிலத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நடைபெற்றது.

    ராமேசுவரம் ராம்கோ பொறுப்பாளார் வேடராஜன் தலைமை தாங்கினார். சுவாமி விவேகானந்தர் குடில் பிரணவானந்தர் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜா மணி முன்னிலை வகித்தார்.

    ஜான்பாய், அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர் மனோலயா நிர்வாக இயக்குனர் மணி கண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினர்.

    பின்னர் நிகழ்ச்சியில் தொடர்ந்து மனநல காப்பகத்தில் தங்கியுள்ள 40-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் குமரேசன், மனோலயா முத்துராமன், முருகபூபதி, சமூக ஆர்வலர் தில்லை பாக்கியம், வழக்கறிஞர் ராஜசேகர், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவர் நம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×