என் மலர்tooltip icon

    கடலூர்

    • அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.
    • ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக 300-க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. கடலூர் மாநகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 162 பேர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை. இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் கலெக்டர் அருண் தம்புராஜ், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், குப்பை அகற்றும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து , இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் துப்புரவு பணியாளர்களை மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது துப்புரவு பணியாளர்கள் கையில் உறைகள் மட்டும் அணிந்திருந்தனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நேரில் வரவில்லை. அதற்கு மாறாக ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் ஊழியர்கள் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அருண் தம்புராஜ் கடும் அதிர்ச்சி அடைந்து, ஆய்வு கூட்டத்திற்கு ஒப்பந்ததாரரை நேரில் அழைத்தும் வரவில்லையா என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பேசுகையில், எங்களுக்கு தற்போது குப்பைகள் அள்ளுவதற்கு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகன வசதிகள் சரியான முறையில் வழங்கவில்லை . தற்போது வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை நாங்களே செலவு செய்து சரி செய்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள். இது மட்டுமின்றி குப்பைகள் கொண்டு செல்வதற்கு சாக்குகளும் அதற்கான வசதிகளும் இல்லை. மேலும் அகற்றப்பட்ட குப்பைகள் கொண்டு செல்வதற்கு, ஜேசிபி வசதி இல்லாததால், குப்பைகளும் கொட்ட முடியவில்லை என சரமாரியாக புகார் அளித்தனர்.

    இதனை கேட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சியை சுகாதாரமாக பேணிக்காப்பதற்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வாரம் ஆய்வு செய்த போது, எப்படி இருந்ததோ அதேபோல் தற்போதும் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனடியாக மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா மற்றும் மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கவுன்சிலர்கள் சுதா அரங்கநாதன், சுபாஷினி ராஜா, சக்திவேல், சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
    • பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு பாலத்தின் நடைபாதையில் ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்திருந்தனர். இக்கடைகள் பாலத்தின் மீது நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த பழக்கடை, காய்கறி கடை மற்றும் பேன்சி கடைகளை அகற்றினர். மேலும், பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
    • ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாதாரண ஆட்டோக்களை (அபே ஆட்டோ) இயக்குபவர்களும், ஷேர் ஆட்டோக்கள் செல்லும் வழித்தடங்களிலே தங்கள் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்கி ன்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வருமானத்தை இழந்து, வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட ஷேர் ஆட்டோ டிரை வர்கள் இன்று தங்கள் ஆட்டோ க்களை இயக்காமல், பஸ் நிலையம் அருகில் சாலையோரம் ஆட்டோ க்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.
    • தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலு வலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதா னத்தை சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஆக்கிரமிப்பு கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநக ராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்க ளுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் எனகேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றாமல் சென்றனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் சில நாட்களாக ஆக்கிரமிப்பு கடைகளை தாங்களாக அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை மாநகராட்சி ஊழி யர்கள் பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கடை களை போலீஸ் பாதுகாப்பு டன் பொக்லைன் எந்திரங் கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர்.

    இதில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையே பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினார். தொடர்ந்து தரைக் கடை மற்றும் தள்ளு வண்டி கடைகளை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்ப வத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது.
    • 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

    கடலூர்:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, கடலூர் புதுநகர் போலீசார் பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியுடையது என போலீசாருக்கு தெரியவந்தது. இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், இவர் காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை 2 மாதமாக தேடி வருவதும் போலீசாருக்கு ெதரியவந்தது.

    இந்த நிலையில் பழனிச்சாமி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை பழனிச்சாமியிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவஹரி (வயது31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (26). இருவரும் நேற்று இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாமூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாமூர் ரோட்டில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு கொண்டு வெளியே வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதனால் படுகாயம் அடைந்த சிவஹரியும் சந்திரலேகாவையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
    • தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பயந்துபோன விஜய குமார் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த காட்டுக்கூடலூர் மெயின் ரோட்டில் ஒட்டல் நடத்தி வருபவர் விஜய குமார். இவரது ஒட்டலில் கடந்த 9-ந் தேதி 2 பேர் வந்து மாமுல் கேட்டு மிரட்டி னர். பணம் கொடுக்க மறுத்த தால், மறைத்து வைத்தி ருந்த கத்தியை காட்டி கல்லா விலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இத னால் பயந்துபோன விஜய குமார் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் விசா ரணை மேற்கொண்டு விருத்தாச்சலம், பெரிய காப்பான்குளம், இளைய ராஜா (எ) சிங்கில் ராயர் (36), மணிவர்மா (42)ஆகி யோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.

    கைது செய்யப்பட்ட இளையாராஜா (எ) சிங்கில் ராயர் மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலை யத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும், முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலை யத்தில் 2 வழிபறி வழக்கு களும் என மொத்தம் 4 வழக்கு கள் இருந்தது. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் 1 ஆண்டு தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து இளையாராஜா (எ) சிங்கில்ரார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார்.

    எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது தொடர்ந்து பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்த் தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதால், எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் தற்போது 12 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமா னவர்கள் திரண்டதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன.இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை தொடங்கினார்கள்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி, கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஊழியர் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே முத்துகிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்குத்திட்டை, வடக்குத்திட்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் மழைநீரில் மூழ்கி சுமார் 400 ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி பயிர் முழுவதும் சேதமானது.புவனகிரி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுதும் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியது. அது மட்டுமின்றி முரட்டு வாய்க்கால் எனப்படும் பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் வழியாக வயலில் இருக்கும் நீர் மழை காலங்களில் வடிவது வழக்கம். இந்த வடிகால் கால்வாயில் சில ஆண்டுகளாகவே சரியாக தூர் வராமல் மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் நிரம்பி சம்பா பயிர் செய்த வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சரியான வடிகால் வசதி இல்லாததால் நீர் வடிவதற்கு சில காலதாமதம் ஏற்படுகிறது.

    இதனால் புவனகிரி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம், பு. சித்தேரி, மேல மணக்குடி, தெற்கு திட்டை, வடக்கு திட்ர்டை, புதுவராயன் பேட்டை ஆகிய கிராமங்களில் சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். முரட்டு வாய்க்கால் வடிகால் வாய்க்கால் மற்றும் பெரும்பாலான பாசன வடிகால் வாய்க்கால் முழுவதும் சம்பு, ஆகாயத்தாமரை பரவியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசு இழப்பீடு தரம் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

    கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியைஅயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ராகுல் என்கிற கிருஷ்ணா (16).இவர் பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிபாளையம்பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

    இன்று காலை கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார் அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது .இதில் சம்பவ இடத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×