என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே மாமுல்கேட்டு மிரட்டிய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பத்தை அடுத்த காட்டுக்கூடலூர் மெயின் ரோட்டில் ஒட்டல் நடத்தி வருபவர் விஜய குமார். இவரது ஒட்டலில் கடந்த 9-ந் தேதி 2 பேர் வந்து மாமுல் கேட்டு மிரட்டி னர். பணம் கொடுக்க மறுத்த தால், மறைத்து வைத்தி ருந்த கத்தியை காட்டி கல்லா விலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இத னால் பயந்துபோன விஜய குமார் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இன்ஸ் பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் விசா ரணை மேற்கொண்டு விருத்தாச்சலம், பெரிய காப்பான்குளம், இளைய ராஜா (எ) சிங்கில் ராயர் (36), மணிவர்மா (42)ஆகி யோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தார்.
கைது செய்யப்பட்ட இளையாராஜா (எ) சிங்கில் ராயர் மீது நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலை யத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும், முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலை யத்தில் 2 வழிபறி வழக்கு களும் என மொத்தம் 4 வழக்கு கள் இருந்தது. இவரின் தொடர் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் 1 ஆண்டு தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து இளையாராஜா (எ) சிங்கில்ரார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்