என் மலர்
கடலூர்
- திட்டக்குடி அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சீனி பாபு திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர்:
திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்பதாக திட்டக்குடி டிஎஸ்பி காவியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் திட்டக்குடி டிஎஸ்பி உத்தரவின் பேரில் சிறுபாக்கம் போலீசார் சித்தேரி கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொ ண்டிருந்த புத்தூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் வெற்றி வேல் (வயது 22), சேலம் மாவட்டம் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் அஜய் (வயது 19) இருவ ரையும் திட்டக்குடி சப்இ ன்ஸ்பெ க்டர் பாக்யராஜ், ராமநத்தம் சப் இ ன்ஸ்பெ க்டர் கோபிநாத் மற்றும் போலீசார் பிடித்து சிறுபா க்கம் காவல் நிலை யத்தில் ஒப்படை த்தனர். இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் அவர்களி டமிருந்து 60 லிட்டர் சாராயம், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமதல் செய்தனர் .
- திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகேயுள்ள அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜான் (வயது 47). இவர் நேற்று பணியில் இருந்த போது அடையாளம் தெரியாத நான்கு பேர் அங்குள்ள கம்பிகளை திருடியுள்ளனர். அப்போது சப்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, இரும்பு கம்பிகளை மதில் சுவருக்கு வெளியே போட்டுவிட்டு, சுவர் மீது ஏறி தப்பிவிட்டனர்.
இது குறித்து அவர் கட்டுமான நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். திருடுபோன இரும்பு கம்பிகளின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். இது குறித்து தனியார் கட்டுமான நிறுவன பாதுகாவலர் ஜான் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் சென்னையில் வேலை பார்த்த போது மிஸ்பசாந்தி (35) என்ற பெண்ணுடன் சிவகுருநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் மிஸ்பசாந்தியை சிவகுருநாதன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹெலன்கிரேஸ் என்ற மகள் உள்ளார். சென்னை போரூர் ராஜீவ்காந்தி நகரில் சிவகுருநாதன் தனது 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி (60) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 27-ந்தேதி சிவகுருநாதன் 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி ஆகியோரை அழைத்து வந்து சொந்த ஊரான மலையனூரில் தனியாக வீடு வாடகை எடுத்து இருந்து வந்தார்.
நேற்று இரவு சிவகுருநாதன் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி, மகள் மற்றும் மாமியார் 3 பேரும் இல்லாதது கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர்களை பல இடங்களில் சென்று தேடினார். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர்கள் எங்கும் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வேல்முருகன் என்பவரின் விவசாய கிணற்றில் மிஸ்பசாந்தி, ஹெலன்கிரேஸ், தெபோரால் கல்யாணி ஆகிய 3 பேரும் பிணமாக மிதந்ததை கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார். 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தாய், மகள், பேத்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், என்பவர் தனது மகன் சரவணன் மற்றும் அவரது நண்பரான சென்னை படப்பை திரு.வி.க. நகரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோரை காரில், கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மாலை கடலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சா லையில், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
அதில், காரில் பயணித்த விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சரவணன், சென்னை அடுத்த படப்பையைச் சேர்ந்த வாசுதேவன், ஆகி யோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
வேப்பூர் அருகே ரெட்டாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 57), இவருக்கு மனைவி 3 மகள்கள், 1 மகன் உள்ளனர் கடந்த சிலநாட்களாக சுப்பிரமணியன் உடல் நல குறைவால் இருந்தார். இதில் மனமுடைந்த அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர்.
- பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசெல்வம்.(வயது 47). விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உக்கிரவேல் என்பவருக்கும் வீட்டுமனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த உக்கிரவேல் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து ஞானசெல்வத்தை தாக்கினர். படுகாயம் அடைந்த ஞானசெல்வம் பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு நிலைமை மோசமாக ஞானசெல்வம் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. ஆத்திரம் அடைந்த ஞானசெல்வத்தின் உறவினர்கள் உடலை உக்கிரவேல் வீட்டுமுன்பு வைத்து போராட்டம் செய்தனர். இந்த பிரச்சினையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் போட்டனர். தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகோபால் விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அவர்கள் சமரசம் ஆகவில்லை. இதனால் அங்குபதட்டம் நிலவியது. இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு இவரது மகன் கதிர்வேல் (45) இவரதுமனைவி நான்குஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால்தனக்கு வாழப்பி டிக்க வில்லை என்று கூறி வந்துள்ளார். மனைவிஇறந்த துக்கத்தில் இருந்த இவர் நேற்று தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டார்.அக்கம் பக்க த்தில் இருந்தவர்கள்இவரைமீட்டு கடலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார் இது குறித்து காடாம்புலியூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
கடலூர்:
திட்டக்குடியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக தி.இளம ங்கலத்தில் பகுதியில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி சேதமடைந்தது இருப்பதை கண்டித்தும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் உண்ணா நிலை அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொரு ளாளர் பாண்டுரங்கன், மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர்களின் நலன் கருதி ஆதிதிராவிட நல விடுதியின் கட்டிடத்தின் தன்மை குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தவேண்டும்.
போர்கால அடிப்ப டையில் ஆதிதிராவிட மாண வர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த தற்காலி கமாக விடுதியை மாற்று இடத்தில் அமைத்து தர வலியுறுத்தியும்.அரசி னர் ஆண்கள் மேல்நி லைப் பள்ளியின் அருகி லேயே ஆதிதிராவிட மாணவர் விடுதி அமைக்க வலியுறுத்தியும் உண்ணா நிலை போராட்டம் நடை பெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா, கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முரு கேசன்,மங்களூர் ஒன்றிய செயலாளர் பாலமுரு கன், கிராம தெருக்கூத்து கலை பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர், கிளைச் செயலாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும்.
கடலூர்:
திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க வட்ட செயலாளர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பா ட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்தில் 28 அடி தண்ணீர் தற்போது பிடித்துள்ளது. பாசனத்திற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பதாக பொதுப்பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து வாய்க்கால்களும் முறையாக தூர்வாராமல் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக செல்வதில்லை, உடனடியாக அனைத்து வாய்க்கால்களை முறையாக தூர்வாரி 300 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாயிகள் நலன் கருதி காவிரி உபரி நீரை வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் அனைத்து காலகட்ட ங்களிலும் தயங்காமல் விவசாயம் செய்யும் சூழ்நிலை உருவாகும். திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.
பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்
நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.
- பண்ருட்டியில் தனியார் கம்பெனி ஊழியர் மாயமானார்.
- இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அருகே எரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரதுமகன் வினோத்குமார் ( வயது30 ). இவர்புதுவைதிருவண்டார்கோவில் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. அவரதுசெல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ந்து போன பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை ரங்கநாதன்புதுப்பேட்டைபோலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துகாணாமல் போன வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்.






