என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும்.
கடலூர்:
திட்டக்குடி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க வட்ட செயலாளர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பா ட்டத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்தில் 28 அடி தண்ணீர் தற்போது பிடித்துள்ளது. பாசனத்திற்காக அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பதாக பொதுப்பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து வாய்க்கால்களும் முறையாக தூர்வாராமல் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக செல்வதில்லை, உடனடியாக அனைத்து வாய்க்கால்களை முறையாக தூர்வாரி 300 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாயிகள் நலன் கருதி காவிரி உபரி நீரை வெள்ளாற்றில் இணைத்தால் வெலிங்டன் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து நிரந்தரமாக இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் அனைத்து காலகட்ட ங்களிலும் தயங்காமல் விவசாயம் செய்யும் சூழ்நிலை உருவாகும். திட்டக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்