என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது.
    • பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்நிலையில், நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    கோவையில் நேற்று தனியார் பேருந்து மூழ்கிய அதே இடத்தில் இன்று மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியுள்ளது. பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
    • மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

    கோவை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

    விழாவில் ஒவ்வொரு மாணவராக அழைத்து பட்டம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பட்டம் வாங்க வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர், கவர்னரிடம் இருந்து பட்டம் பெற்றதும், கவர்னரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவை கவர்னரும் பெற்றுக்கொண்டார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது பெயர் பிரகாஷ். விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமம். நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் (பிஎச்டி) பட்டம் பெற்றேன்.

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 2 விடுதிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அங்குள்ள கழிவறை ஒழுகுகிறது. மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

    இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விளையாட அனுமதிக்கிறார்கள். நாங்கள் வைவாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

    சில பயிற்சியாளர்கள் ஆராய்ச்சி மாணவர்களை அவர்களது வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனக்கு இதனால் பிரச்சினை இல்லை.

    இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
    • அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    செய்முறை தேர்வு

    * 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.

    * 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.

    * 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

    பொதுத்தேர்வு

    * அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.

    * அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.

    * அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

    பொதுத்தேர்வு முடிவுகள்

    * 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.

    * 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்ட பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் இரவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.

    கோவை பகுதியில் இரவில் மழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.

    ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.

    தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    • கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது.
    • நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    பொள்ளாச்சி:

    கோடை மழைக்கு பிறகு ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழையால் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 110 அடியை அணை எட்டியது.

    அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. 118 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் மலைமுகடுகள், நீரோடைகள் வழியாக அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.

    இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 75 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் பாசனத்திற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஜூலை மாதம் இறுதியில் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக 118 அடியாக இருந்தது.

    தற்போது 115 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 83 அடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டி இருக்கிறது. வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது.
    • லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

    கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற 2 முதியவர்கள் மீது மோதியுள்ளது. அதில் முதியவர் மருதாசலம் என்பவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

    விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் கனமழை கொட்டுகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், காந்திபார்க், சிங்காநல்லூர், உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து சாரல் மழை அடித்து கொண்டே இருந்தது.

    இந்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர், சூலூர், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிரும் நிலவியது. இன்று காலையும் லேசான சாரல் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இருந்து வருகிறது.

    இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்ககூடிய சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 9.82 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 59 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:

    சோலையார்-59, சின்னக்கல்லார்-49, சின்கோனா-42, வாரப்பட்டி பி.டபிள்யூடி அலுவலகம்-34, பெரிய நாயக்கன்பாளையம்-29, வால்பாறை பி.ஏ.பி-27, பொள்ளாச்சி தாலுகா-25, வால்பாறை தாலுகா-24, கோவை தெற்கு-22 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை.
    • பிழையை மாற்றக் கோரி முதலமைச்சருக்கு கடிதம்.

    கோவை:

    கோவை பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி கிருத்திகா. இந்த தம்பதிக்கு பிரணவிகா (வயது10). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள பிரபல மாலில் படம் பார்க்கச் சென்றார்.

    தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும் என்ற வாசகம் வந்தது.

    அதை பார்த்த சிறுமிக்கு கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என தவறாக இருப்பதாக சிறுமி தனது தந்தையிடம் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அந்த வாசகம் எழுத்துப் பிழையுடன் வருவதால் இதனை பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே அதனை எழுத வாய்ப்புள்ளதாக கருதிய சிறுமி, தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

    அதற்கு அவர், இந்த படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. அதனை தங்களால் மாற்ற இயலாது என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவி இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் உள்ள எழுத்து பிழையை சுட்டிக்காட்டியும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கடிதம் எழுதி அனுப்பினார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை பழனிச்சாமி கூறியதாவது:-

    கடந்த ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்கச் சென்றபோது, படம் துவங்கும் முன்பு வந்த விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப் பிழை இருப்பதை எனது மகள் பார்த்தார்.

    அதனை என்னிடம் தெரிவித்த அவர், எழுத்துபிழையை சரி செய்யாவிட்டால் அதனை பார்க்கும் அனைவரும் அதே எழுத்துப் பிழையுடன் எழுத வாய்ப்புள்ளது. அதனால் அதனை மாற்ற கோரி தமிழக முதலமைச்சருக்கு எனது மகளே கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    தமிழை ஊக்குவிக்க தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். எழுத்து பிழையை உடனடியாக மாற்றுவார்கள். மேலும் தன்னுடைய மகள் கொரோனா காலத்திலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கும் தான் சேர்த்து வைத்திருந்த தொகையைத் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்தது.

    நேற்று 2-வது நாளாக கோவை மாநகர் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழையானது இரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

    அதிகளவிலான தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல அடி தூரத்திற்கு காத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

    இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும்.

    மழைநீர் புகாமல் இருக்க அந்த பகுதி உயர்த்தி தளம் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழைக்கு அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து எம்.எம். 4 கட்டிடத்தின் வார்டுகளுக்குள் புகுந்தது.

    இதனால் அங்கு கடும் தூர்நாற்றம் வீசியது. நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் வார்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது. இரவிலும் கடுமையான அனல் காற்றடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    கடந்த 2 நாட்களாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் மிதமான வெயிலும், மாலை நேரத்தில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வந்தது.

    நேற்று காலை முதலே கோவை மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவியது. மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய தொடங்கின.

    கோவை பாப்பநாயக்கன்பாளையம், ரெயில் நிலையம், அவினாசி சாலை, உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்திபார்க், சிங்காநல்லூர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் உள்பட மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே மாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இரவில் மாநகரில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டியதும். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன்பின்னர் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை மழை பெய்யாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, எல்லநள்ளி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்கம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    மழையால் மேகமூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று காலை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக சென்றனர். கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில், ஜூன் மாதம் 37.2 மி.மீ மழையும், ஜூலையில் 43.8 மி.மீ மழையும், ஆகஸ்டில் 47.3 மி.மீ மழையும், செப்டம்பரில் 69.2 மி.மீ மழையும் சராசரியாக பெய்யும்.

    நடப்பாண்டில் ஜூனில் சரிவர மழை பெய்யவில்லை. ஜூலையில் அதிகளவில் மழை பதிவாகியது. அதன்படி ஜூனில் 2 மழை நாளில் 27 மி.மீ மழையும், ஜூலையில் 8 நாளில் 89.3 மி.மீ மழையும் பெய்தது.

    ஆகஸ்டில் 31 மி.மீ மழையும், செப்டம்பரில் 11.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது 197.5 மி.மீ பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டு 159.3 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட 19 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

    • இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது.
    • வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் நேரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

    ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே நமது தேசம் இனஅழிப்புக்கு எதிராக செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. இந்த விஷயத்தில் தலையிட்டு 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி.

    கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறையினர் பழங்குடியிருனக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நவீன விடுதிகளை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரப்பட்டு உள்ளது. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தனிப்பட்ட உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. எனவே வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு சிறு-குறு தொழில்களை பாதித்து உள்ள விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உள்ளோம். தேர்தலுக்கு பிறகு மின்கட்டண உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சொன்ன மாநில அரசு, மின்கட்டண உயர்வில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் மூடப்பட்ட நூற்பாலை தொழிலை காப்பாற்ற, மூலப்பொருட்கள் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆனால் அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். கடவுளையாவது விட்டு வையுங்கள் என சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து விசாரணை குழுவும் அமைத்து உள்ளது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×