search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatiyar University"

    • கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு 2024 ஜனவரி 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கான கட்டணத்தை நவம்பர் 17-ந்தேதிக்குள் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

    • இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்: 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கான, பகுதி நேரம், முழு நேர பிரிவின் கீழ், சேர்க்கை விண்ணப்பம் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

    இணையதளம் வாயிலாக 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 500 ரூபாய்), இணையவழியாக செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 15ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    சேர்க்கை செயல்பாடுகள் ஜூன் 2023 பல்கலைக்கழக தரப்பில் நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட த்தில உயர்கல்வி வகுப்பு தொடங்க புதுவை பல்கலைகழகம் அனுமதி அளித்துள்ளது.

    நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை பாரதியார் பல்கலை கூட முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, உயர்கல்விக்கான புதிய வகுப்புகளுக்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் பல்கலை கூட வளாகத்தில் மிகவும் அடர்த்தியாக, காடு போல் வளர்ந்திருந்த மரம், செடி, புதர்களை அப்புறப்ப டுத்தும் பணி நடந்தது.

    அப்போது அங்கு இருந்த மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். இந்த வண்டுகள் கடித்தால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியோடு, தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டு கூண்டினை தீவைத்து அழித்தனர்.

    • மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • ஊர்வலம் ஆம்பூர் சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் பொறுப்பு முதல்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

    அரசு நிதி ரூ.5 லட்சம் முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக காமராஜர் சிலை அருகே பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் திரண்டனர். மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், திராவிடர் விடுதலை கழகம் லோகுஅய்யப்பன், திராவிடர் கழகம் சிவவீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், தமிழர்களம் அழகர், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், உட்பட தமிழ் தேசிய பேரியக்கம் வேல்சாமி உட்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

    ஊர்வலம் ஆம்பூர் சாலையில் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ×