என் மலர்
கோயம்புத்தூர்
- பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைகளிடம் பேசினார்
- காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாயக்க ன்பாளையம் போலீஸ் குடியிருப்பில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் காவலர் குடியிருப்புக்கு வந்தார்.
அப்போது அவரை குழந்தைகள் பூங்கொந்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்வெட்டு திறந்துவைத்து ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சீசா விளையாடிய குழந்தைக ளிடம் பேசினார். அங்கு உள்ள செட்டில்கார்ட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவரும் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்களிடம் கைகு லுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து காவலர் குடியிருப்பை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு, அங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் காவலர் குடியி ருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்றவர், அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் பெரியநாய க்கன்பாளையம் போலீஸ் டி.எஸ்.பி நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் காவலர்களின் குடும்பத்தி னர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்
- மேட்டுப்பாளையம் போலீசார் ஏற்கெனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமு என்பவரது மகன் கந்தவேல் (30).கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி கந்தவேலுவை முன்விரோதம் காரணமாக சச்சின் என்ற நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திலீப் (18), விபின் பிரசாத் (18),கவின் (18), மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
இதில் கந்தவேல் படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப், விபின் பிரசாத், சச்சின், நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கவின் என்ற வாலிபர் தலைமறைவாக இருந்தார்.
அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது போலீசாரிடம் அவர் சிக்கினார்.
- கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது
- தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் நடவடிக்கை
கோவை,
உலக தென்னை தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் தென்னை சார்ந்த கருத்துக் காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமைதாங்கி தென்னை நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த துண்டு பிரசுரங்களை வெளி யிட்டார். 3 விவசாயிகளுக்கு நானோ உரங்கள் தொகுப்பை வழங்கினார்.
தென்னை கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில் கூறியதாவது:-
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னணி வகித்து வருகின்றன. உலக அளவிலான தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற்று உள்ளது.
கோவை மாவட்டத்தில் 89.927 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. குறிப்பாக ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது.
தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உரங்களை போட்டு நல்லமுறையில் பராமரித்து வந்தால் அதிகமாக காய்களை அறுவடை செய்ய முடியும்.
கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16.56 லட்சம் நிதியில் 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 600 நெட்டை வீதம் ஒட்டு மொத்தமாக 27 ஆயிரத்து 600 தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தென்னந்தோப்புகளில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் 14 செயல்விளக்கத்திடல்கள் நடப்பாண்டில் அமைக்கப் பட உள்ளது.தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் சந்தையில் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காக அரசின் வேளாண்மை சார்ந்த பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண் இணைஇயக்குநர் முத்து லட்சுமி, துணை இயக்குநர் புனிதா, தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஐரின் வேதமணி, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, வேளாண் வணிகம் விற்பனைத்துறை துணை இயக்குநர் விஜய கல்பனா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்று, பான்கார்டு சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் மூலம் கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்ய நடவடிக்கை
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்திலும், 18-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக் கழகத்திலும் கல்வி கடன் முகாம்கள் நடந்து ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு பல மாணவர்களுக்கு கல்வி கடன்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் கலந்து பயன்பெறாத மாணவர்களுக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியின் கலந்தாய்வு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நிறைவடைந்து மாணவர்கள் கல்லூரியில் சேர உள்ளதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் வாரத்தில் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும் வருகிற 22-ந் தேதி அன்று குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, 26-ந் தேதி அன்று பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, 29-ந் தேதி ஈச்சனாரியில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமி ஆகிய இடங்களில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவ- மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் பொருட்டு மாணவர்கள் பயிலும் கல்லூரி வளாகத்திலேயே முதல் பட்டதாரி, வருமானம், இருப்பிட சான்றுகள் மற்றும் பான்கார்டு ஆகிய சேவைகளை பெற நாளை (4-ந் தேதி) முதல் 20-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கல்விக்கடன் பெற தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் செயலராக கொண்டு 10 அலுவலர்கள் கொண்ட முதன்மை குழுவினை அமைத்து இப்பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளம் அறை எண்-16-ல் தனியாக கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு கல்விக்கடன் வழங்கும் பணியை மேற்பார்வை செய்யப்பட்டு வருகிறது.
எனவே உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகள் அனைவரும் நாளை முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கல்நது கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் மஞ்சள்காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
- வீரகேரளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது
கோவை,
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவரது மகன் கோபாலகி ருஷ்ணன் (வயது 39). இவர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 11 மாதத்தில் செயான் என்ற மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் கோபா லகிருஷ்ணனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்கள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் மஞ்சள்காமாலை பாதிப்பு அதிகமானது. இத னையடுத்து கோபாலகிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள திருநகர் 3-வது வீதியில் உள்ள வீட்டிற்கு மதியம் 1 மணியளவில் கொண்டு வரப்படுகிறது.
பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு வீரகேரளத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
- வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
- புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தல்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நக ராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லா மல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.
குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி
- கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளை யத்தை சேர்ந்தவர் பிரதீப். இவரது ரம்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று வெளியே சென்ற பிரதீப் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு சென்றார்.
கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த ரம்யா அவரை கண்டித்தார். அப்போது கணவர்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவே தனை அடைந்த ரம்யா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொ லைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீப் தனது மனைவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு ரம்யாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள்.
- காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி, எல்லாமே பாரதிய ஜனதா தான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி அவர்கள் பேசக்கூடாது. அவர்கள் செய்வது என்ன விருப்பு அரசியலா? மொழி, மதம், சார்ந்து பிரித்து இருப்பவர்கள் அவர்கள் தான்
திராவிடத்தை ஒழிக்க வேண்டுவது என்பது என் எண்ணம் அல்ல. தமிழ் தேசியத்தை வளர்ப்பது என் எண்ணம். பெருமை பீத்துவது போல சந்திரனுக்கு, சூரியனுக்கு விண்கலம் அனுப்புகிறேன் என்கிறார்கள். முதலில் இங்கே இருப்பவர்களுக்கு நீர் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.
மேற்கு வங்கத்திலேயே எட்டு கட்டமாக தேர்தல் நடத்தும் நீங்கள் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவீர்கள். காஷ்மீரில் இருந்து ஒரே ரோடு ஏற்றுக்கொள்கிறேன், ஒரே கொள்கை ஏற்றுக்கொள்கிறேன். ஒரே நீர் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு முன்னால் கர்நாடகாவில் இருக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு வாங்கி கொடுங்கள்.
2024-ல் எனக்கு 4 பேரும் எதிரி தான் (திமுக, பாஜக, அதிமுக, காங்கிரஸ்). காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டும் வேறு வேறு கட்சிகள் தான். ஆனால் அவர்களது கொள்கைகள் ஒன்றுதான்.
ராமதாஸ், திருமாவளவன் போன்ற ஆற்றல்கள் இந்த திராவிட ஆற்றல்களை எதிர்த்து சண்டை செய்ய இயலாமல் சமரசம் செய்து கொண்டு விட்டனர். தனித்து நிற்கும்போது ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களது வாக்கு என்ன? இந்தக் கட்சிகளோடு கூட்டணி வைத்த பிறகு அவர்களது வாக்கு எவ்வளவு என்பதை பார்த்தால் குறைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2 நாட்களாக தாங்கள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில் நான் காத்திருப்பதாக (ஐ யம் வெயிட்டிங் ) என்றார்.
மேலும் அவர் கூறுகையில் மக்களுக்காக போராடவா? அல்லது விஜயலட்சுமி செயல்கள் பின்னாடி செல்வதா? என்னுடைய தகுதியை தீர்மானிப்பது யார்? என் மீது குற்றச்சாட்டு வைப்பவர் யார்? விஜயலட்சுமி என்ன ஆங் சாங் சூகியா, ஐரோம் சர்மிளாவா? இந்த விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி டப்பிங்கா? என்றார்.
- அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
- சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 34 மாணவர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று இரவு விடுதியில் 20 மாணவர்கள் மட்டும் இருந்தனர். விடுதியில் மாணவர்களுக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் சாப்பாடு, ரசம் மற்றும் முட்டை ஆகியவை உணவாக வழங்கப்பட்டது.
இதில் விடுதியில் உள்ள திருப்பூர் உடுமலையை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சபரீஸ் (வயது 12), ஆனைமலை கரியன்செட்டிப் பாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் முத்துகணேஷ் (12), மீனாட்சிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் (15), வால்பாறையை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் முனீஸ் (16), பொள்ளாச்சி காளிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சிவபிரசாந்த் (12) ஆகிய 5 மாணவர்கள் மதியம் மீதி இருந்த பாசிப்பருப்பு குழம்பை எடுத்து சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் 5 மாணவர்களுக்கும் வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து 5 மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக மயங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் மாணவர்களை பரிசோதனை செய்தபோது கெட்டுபோன உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் கைவரிசை
- வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரும் சிக்கினர்
கோவை,
கோவை கணபதி தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது30). இவர் சங்கனூர் பகுதியில் பேக்கரி மற்றும் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி பிரேம்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார்.
பின்னர் மறுநாள் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தது பிரேம்குமாரின் சித்தப்பா மகன் மரிய அமிர்தம் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
பிரேம்குமார் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்ற மரிய அமிர்தம் தொழில் முறையிலான கொள்ளையர்கள் திருடுவது போன்று வீட்டு பீரோவில் இருந்த உடைமைகளை களைத்து போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சொந்தமாக தொழில் செய்து வரும் மரிய அமிர்தம் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். எனவே அவர் அதனை ஈடு செய்யும் வகையில் தனது சொந்த பெரியப்பா மகன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் கணபதி வ.உ.சி. நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசூப் (47) என்பவர்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து காரமடையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்துள்ளோம்.
கோவையில் நகை கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு செல்ல வேண்டும்.
இதனால் ரோந்து பணியில் போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பதன் மூலம் கொள்ளை சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் வீட்டை பூட்டும் போது வெளிப்பக்கமாக பூட்டு தெரியும் படி பூட்டாமல் உள்பக்கமாக பூட்ட வேண்டும். பூட்டு வெளியே தெரிந்தால் அது வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு கொள்ளையர்கள் கண்களை உறுத்தும். எனவே கொள்ளை சம்பவங்களை குறைக்க மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அவருடன் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் செல்வி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.
- பட்டப்பகலில் முகமூடி கொள்ளையன் கைவரிசை
- வேலைக்காரியை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றான்
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 64). இவர் அந்த பகுதியில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். பாலகிருஷ்ணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருப்பூரில் உள்ளார். இளைய மகன் மனைவி மோகனப்பிரியா.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் மகனுடன் வெளியே புறப்பட்டு சென்றார். மருமகள் மோகனப்பிரியா வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். வேலைக்கார பெண் சரஸ்வதி வீட்டின் பின்புறமாக துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒருவன் நைசாக வீட்டுக்குள் புகுந்தான். பீரோவில் இருந்த 20 சவரன் நகையை மூட்டை கட்டி எடுத்து கொண்டான். அதன்பிறகு அவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றான்.
இந்த நிலையில் முகமூடி மனிதனை சரஸ்வதி பார்த்து விட்டார். எனவே அவர் திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதனால் அந்த வாலிபர் சரஸ்வதியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளி விட்டு தப்பி சென்றார்.
இந்த நிலையில்பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வேலைக்காரி மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் தீவிர மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பட்டப்பகலில் முகமூடி மனிதன் வீடு புகுந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்று சம்பவம், அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி பகுதியில்நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே அங்கு வந்த ஒரு நபர் தான் மேற்கண்ட துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கவேண்டும்.
எனவே போலீசார் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில் கருமத்தம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
- வணிகர்களுக்கு உரிய இழப்பீடு, ஓய்வூதியம் வழங்கவும் தீர்மனம்
கோவை,
கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார்.
பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்,
இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






