என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது
- சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்
- மேட்டுப்பாளையம் போலீசார் ஏற்கெனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமு என்பவரது மகன் கந்தவேல் (30).கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி கந்தவேலுவை முன்விரோதம் காரணமாக சச்சின் என்ற நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திலீப் (18), விபின் பிரசாத் (18),கவின் (18), மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
இதில் கந்தவேல் படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப், விபின் பிரசாத், சச்சின், நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கவின் என்ற வாலிபர் தலைமறைவாக இருந்தார்.
அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது போலீசாரிடம் அவர் சிக்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்