என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள க.மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 33). இவருக்கும், திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் (30) என்பவருக்கும் இருந்த முன் விரோத தகராறில், கடந்த 2012-ம் ஆண்டு தீபக்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகானந்தத்தையும், அவரது நண்பர் க.மேட்டுத்தெருவை சேர்ந்த மைனர் மகன் ஸ்டாலின் (23) என்பவரையும் அடித்து கொலை செய்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டனர்.
இதையடுத்து திருமானூர் போலீசார் முருகானந்தம், ஸ்டாலின் உடலை தோண்டியெடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். ஆனால், முக்கிய குற்றவாளியான திருமழபாடியை சேர்ந்த தீபக்குமார் தலைமறைவானார். இந்நிலையில், தீபக்குமார் திருமழபாடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு கிடைத்த தகவலையடுத்து, திருமழபாடிக்கு சென்ற திருமானூர் போலீசார் தீபக்குமாரை கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள வாரணவாசி கிராமம் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரி ஒன்று வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த கொடி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.

இதையடுத்து அந்த பகுதி கிராம மக்கள் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இங்கு விபத்து ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர்-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்துவந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வேகத்தடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதே இடத்தில், கடந்த ஆண்டு மணல் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, வீடு மற்றும் கடையினுள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. லாரி மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மேலும், கடந்த 28-ந் தேதி பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருந்த பயணிகள் மீது வேகமாக வந்த கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கூத்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குட்டி போட்டு 5 நாட்களே ஆன கண் திறக்காத நாய்க்குட்டியை குரங்கு ஒன்று 3 நாட்களாக தூக்கி கொண்டு தனது குழந்தையை போல் பார்த்து கொள்கிறது. மேலும் அந்த குட்டியுடன் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீட்டு மாடி, ஓட்டு வீடுகளில் மேலே நாய்க்குட்டியை வைத்து கொண்டு, அந்த குரங்கு சுற்றி வருகிறது. மேலும் அந்த நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து, மடியில் போட்டு பேன் பார்க்கிறது. இதையடுத்து ஒரு குழந்தையை போல் நாய்க்குட்டியை தோளில் போட்டு தூங்க வைப்பதும், நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிவது, மரங்களில் தாவி கொண்டிருக்கின்றது. மேலும் அந்த குரங்கு, நாய்க்குட்டியை பார்த்து கொள்ளும் பாவனைகளை மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்து வருகின்றார்கள்.
இந்நிலையில் அந்த குரங்கிற்கும், கிராம மக்கள் தினமும் ரொட்டி மற்றும் சாதம் கொடுத்து ஆச்சரியமாக பார்த்து ரசித்து வருகின்றனர். விலங்குகளுக்குள் இருக்கும் நேயம் மனிதர்களிடத்தில் இருப்பதில்லை. தாயை பிரிந்து தவிக்கும் கண் திறக்காத நாய்க்குட்டியை அனைத்தபடி தாய்பால் மற்றும் பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் குரங்கு ஒன்று தா.பழூர் பகுதியில் சுற்றி வருவதை பொதுமக்கள் பார்த்து அதிசயித்து வருகின்றனர். குரங்கும், நாயும் எதிரிகளாக இருந்த காலம் மாறி தற்போது மனிதனுக்கு மாறாக மனித நேயத்துடன் இனக்கமாகவும் இருக்கின்றன. இதனை பார்த்த பின் மனிதர்கள் மத்தியில் சாதி, மதம், இனம் கடந்த மனித நேயம் காணப்படுமா? என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வியந்து பார்க்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு நீட்தேர்வு பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசை கண்டித்தும், வன்முறையை தூண்டும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு அரியலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக கவுதமன் இன்று அரியலூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இதற்கான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் இயக்குனர் கவுதமன் மீதான 19 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு, அவர் அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #Gowthaman
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி பகுதியில் திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஆற்றில் இருந்து லாரியில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்த வெற்றியூரை சேர்ந்த டிரைவர் ராஜசேகர் (வயது 19), விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (26), கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பொக்லைன் எந்திரம்- 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 36). இவர் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வேல்விழி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயபிரகாஷ் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் வழக்கம் போல் வேல்விழி எழுந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள மற்றொரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.1,000-த்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே தெருவில் ஜெயபிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பத்மநாபன், சகுந்தலா ஆகியோரின் வீடுகளிலும் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் நகைகள் ஒன்றும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மர்மநபர்கள் திரும்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெயபிரகாஷ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக காவிரியிலிருந்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார். ஆனால் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசும், மாநிலத்தில் ஆட்சி நடத்திய தி.மு.க.வும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா போராடி பெற்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிட செய்தார்.
ஆனால் அப்போது ஆட்சி நடத்தியவர்கள் அதனை அரசிதழில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இன்றைக்கு காவிரி நீர் வருகிறது என்றால் அதற்கு ஜெயலலிதாதான் காரணம்.
தற்பொழுது ஆட்சி நடத்தி வரும் நமது முதல்வர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் முதல்வர் ஆனவுடன் அப்பதவியிலிருந்து நீக்கி ஆட்சியை கலைப்பதற்கு பல்வேறு வகையில் தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால் தொண்டர்களின் ஆதரவோடு இன்று வரை சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சொத்து சம்பந்தமான வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த போது, சசிகலா குடும்பம் ஆட்சியை பிடிப்பதற்காக பெங்களூரில் ஒரு ஓட்டலில் ரூம் போட்டு பேசியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பதிவு செய்து கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் கொடுத்ததால் அவர்களின் சுயரூபம் தெரிய வந்ததை அடுத்து சசிகலா உட்பட அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.
சில மாதங்கள் கழித்து சசிகலா, ஜெயலலிதாவிடம் எனது குடும்பம் இவ்வளவு பெரிய துரோகம் செய்யுமென்று நான் நினைக்கவில்லை. என்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள் என மன்னிப்பு கடிதம் கொடுத்து அனுப்பினார். மன்னிப்பு கொடுத்து மீண்டும் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
ஆனால் கடந்த 2008-ம் ஆண்டே தினகரனை கட்சியை விட்டே நீக்கினார். இனிமேல் போயஸ்கார்டன் பக்கமே வரக்கூடாது, பெரியகுளம் தொகுதி பக்கமே செல்லக்கூடாது. சென்னையிலேயே இருக்கக்கூடாது என கட்டளையிட்டார். அது முதல் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இருந்த இடம் தெரியாத அளவிற்கு இருந்து வந்தவர் இன்று ஜெயலலிதா இல்லை என்றதும் ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கிறார்.
ஏன் தினகரனை நீக்கினார் என்றால், ஜெயலலிதா மீது தி.மு.க. ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் தினகரனும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவிற்கு தெரியாமலேயே தினகரன் லண்டனில் ஒரு ஓட்டல் வாங்கியுள்ளார். அந்த ஓட்டலையும் சேர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது.
அதில் தினகரனும் ஒரு குற்றவாளியாக இருக்கிறார். தினகரன் அப்போதே முடிவு செய்து விட்டார். எப்படியாவது ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் நாம் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கருணாநிதியுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருணாநிதியுடன் பேசிய தினகரன், என்னையும் லண்டன் சொகுசு ஓட்டலையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுங்கள். மற்றவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் லண்டனில் உள்ள விலைமதிக்க முடியாத அந்த ஓட்டலை வழக்கில் இருந்து தி.மு.க.வினர் நீக்கி விட்டனர். ஒப்பந்தம் இல்லை என்று சொன்னால் தினகரனையும், ஓட்டலையும் வழக்கில் இருந்து நீக்கியிருப்பார்களா?
ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்வருடப் பிறப்பையொட்டி கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் தினகரன் வீட்டிற்கு சென்று அவரிடம், நீங்கள் இந்த இயக்கத்திற்கு வந்த பிறகு பிரச்சினைகள் அதிகம் வந்துவிட்டது. ஆகையால் நீங்கள் இந்த இயக்கத்தை விட்டு ஒதுங்கி இருங்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து நாங்கள் இந்த இயக்கத்தை நடத்திக்கொள்கிறோம் என்று சொன்னோம்.
அதற்கு தினகரன் உங்களுக்கு 60 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதன் பிறகு நான் மீண்டும் எனது விஸ்வரூபத்தை எடுப்பேன். அதற்குள் ஓ.பி.எஸ்.சிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
அதற்கும் மேல் தாமதமானால் என்னுடைய ஒரு முகத்தை மட்டும்தான் நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். எனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தது கிடையாது என்று கூறி, என்னையும், வேலுமணியையும் பார்த்து உங்கள் வீடு தேடி வந்து சட்டை காலரை தூக்கி உதைப்பேன் என்று சொன்னார்.
மேலும் அங்கிருந்து எழுந்து எங்களை அடிப்பதை போல் வந்தார். இதற்கு மேலும் அங்கிருந்தால் அசிங்கமாகி விடும் என்று நானும், வேலுமணியும் வெளியே வந்து விட்டோம். எங்கள் பின்னே அனைத்து அமைச்சர்களும் வந்து விட்டார்கள்.
தினகரன் முதல்வராவதற்கு கனவு காண்கின்றார். அம்மாவின் ஆத்மா இருக்கும் வரை சசிகலா குடும்பத்தில் எவரும் முதல்வராக முடியாது. இந்த கட்சியில் உரிமைக் கொண்டாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. அம்மா ஒரு முறை சட்டமன்றத்தில் பேசிய போது, எனக்கென்று யாரும் கிடையாது, எனக்காக இருப்பவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களும், 7½ கோடி தமிழக மக்களும்தான் எனது குடும்பம் என பேசினார். ஆனாலும் எனக்குப் பின்னால் 100 ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நுழையும் போதெல்லாம் ஏமாந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை காண்பித்து 20 ரூபாய் இங்கே, 10 ஆயிரம் எங்கே என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை இருக்கின்ற காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு கூட செல்லமுடியாத சட்டமன்ற உறுப்பினர்தான் தினகரன்.
இவ்வாறு அவர் பேசினார். #ADMK #MinisterThangamani
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் விரைந்து வந்து போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி செந்துறை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






