என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி.
    • பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.

    இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வடம். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்காஸ்ரீ, முனீஸ்காந்த், பாலசரவணன், ஆடுகளம் நரேன், மதுசூதராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். 'வடமஞ்சு விரட்டு' என்ற கிராம வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த படம் வருகிற 6-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    விழாவில் நடிகை சனஸ்காஸ்ரீ பேசும் போது, ''நான் இயக்குநருடைய நண்பரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த ஒரு காட்சியைத் தான் நான் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்திருந்தேன். அதைப் பார்த்து இந்தப் பெண் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்று அடம் பிடித்து நடிக்க வைத்தார். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி.

    புது ஹீரோயினுக்கு சம்மதம் சொன்ன விமலுக்கும் நன்றி. பெரிய நடிகர்களுடன் பணியாற்றும்போது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் விமலுடன் பணியாற்றும்போது அவர் என்னை கலாய்த்து கொண்டே இருப்பார். நான் சின்ன வயதில் ஸ்கூலுக்கு செல்லும் போது இமானின் பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன். படத்தில் எனக்கும் ஒரு சோலோ சாங் இருக்கிறது. அதை கொடுத்த இமானுக்கு நன்றி. ரொம்ப வருசத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு ஒரு தனி பாடல் வருகிறது' என்றார்.

    இந்தப் படம் ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக "மகரம்" உருவாகியுள்ளது.

    ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இந்தப் படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை இஷிதா பேசிய போது, "இந்தப் படத்தில் 'நாவிஸ்' என்ற கதாபாத்திரத்தில், ஒரு ஆர்கியாலஜிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறேன். மொழி வேறுபாடு இருந்தாலும், படக்குழுவினர் என்னை மிகவும் அன்பாக ஏற்றுக்கொண்டார்கள். உண்மையாக வீட்டில் இருப்பது போன்ற உணர்வு கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் அகஸ்டின் பிரபு பற்றி கூறியே ஆகவேண்டும்.

    இந்தப் படத்தின் 80% காட்சிகளில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். சிறிய மேக்கப் வைக்க நினைத்தாலும், "ப்ராசஸ்ஸை நம்புங்கள்" என்று அவர் சொல்வார். டீசரை பார்த்தபோது அது எவ்வளவு அழகாக வந்திருக்கிறது என்று உணர்ந்தேன். மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு செய்தோம். அது சுலபமான பயணம் இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், என்றார்.

    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
    • விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.

    நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா காதல் திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. திருமண புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தள பக்கங்களில் பல மில்லியன்களை தாண்டி சாதனை படைத்தது. இந்நிலையில் மேலும் பல படங்கள் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

    திருமண விழாவிற்கு ராஷ்மிகா மந்தனா டோலியில் வரும் காட்சிகளும், விஜய் தேவரகொண்டா வாள் ஏந்திய படியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

    இதனிடையே, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா தம்பதி புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு இருவரும் இனிப்பு வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அப்புகைப்படங்களில் ராஷ்மிகா பாரம்பரிய காஞ்சிபுரம் புடவை அணிந்து தேவதை போல் காட்சியளிப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக கருதப்படுவதால் இங்கு கிரிவலம் சுற்றுவது, தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருகிறது. சமீபகாலமாக திருவண்ணாமலை திரை உலக நட்சத்திரங்களின் முக்கிய ஆன்மீக மையமாக மாறி வருகிறது.

    சமீபத்தில் முன்னணி பிரபலங்கள் பலர் குடும்பத்தினருடன் நேரில் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். திரை உலகமும், ஆன்மீகமும் வேறு பாதைகள் போல தோன்றினாலும் மனநிம்மதி, நம்பிக்கை, வெற்றி போன்ற உணர்வுகளில் திரை உலகம் ஆன்மீகத்தின் பாதையில் தான் செல்கிறது.

    ரஜினி: திருவண்ணாமலை கோவிலின் தீவிர பக்தர் ஆவார். ஆரம்பத்தில் திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு விளக்கு போட்டு தந்தவர் என்ற பெருமையும் ரஜினிக்கு உண்டு.

    சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 17-ந்தேதி தனது பிறந்தநாளையொட்டி மனைவி ஆர்த்தியுடன் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ரவிமோகன்: நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் கடந்த ஜனவரி மாதம் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    யோகிபாபு: யோகிபாபு அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருகிறார்.

    சரத்குமார்: சரத்குமார் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து தொடர்ந்து கிரிவல பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    தேவயானி: தேவயானி கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்தார்.

    ஸ்ரீலீலா: நடிகை ஸ்ரீலீலா கடந்த ஆண்டு இறுதியில் தரிசனம் செய்தார்.

    திவ்யாபாரதி: பேச்சிலர் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யா பாரதி திருவண்ணாமலை கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தரிசனம் செய்தார்.

    இது போன்று தனுஷ், விக்ரம்பிரபு, ரோஜா, சசிகுமார், பாபிசிம்கா உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் திருவண்ணாமலை கோவிலில் சமீபத்தில் தரிசனம் செய்துள்ளனர்.

    படம் ரிலீசுக்கு முன்பு வருவது, புதிய படம் தொடங்குவதற்கு முன்பு வருவது தடைகள் நீங்கி மனநிம்மதி பெற்று வேண்டுதல்கள் நிறைவேறச் செய்யும் தலமாக திரை உலக பிரபலங்களுக்கு திருவண்ணாமலை அமைந்துள்ளது.

    • விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
    • கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் விஜய். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஹா என்ற மகளும் உள்ளனர். சினிமாத்துறையில் விஜய் பயணித்த காலத்திலேயே அவர் குடும்பத்தினருடன் விலகி இருந்ததாக தகவல் வெளியாகி வந்தன. இதற்கு இருதரப்பினரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    இதனிடையே விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இம்மனு மீது ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 2 நாட்களாக இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாகிராம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயைப் பின்தொடர்வதை ஜேசன் நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    விவகாரத்து குறித்த தகவல் வெளியான பிறகே Unfollow செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் சிலர் ஜேசன், விஜயின் இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

    இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் அதிகாரப்பூர்வமாக ெவளியாகி உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக "சூர்யா 46" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (மார்ச் 2) காலை 10.18 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

    2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே சூர்யா 46 படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் வெளியாகும் என்று தெரிகிறது.

    • இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

    ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் 'அன்பே டயானா'. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து 'அன்பே டயானா' படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டீசரில் பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும் கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பொழுதுபோக்கு குடும்ப படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    • யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் இப்பாடல் உருவாகியுள்ளது.
    • தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    டாக்சிக் படத்தின் தபாஹி பாடல் மார்ச் 2 அம தேதி வெளியாகவுள்ளது. யஷ் - கியாரா அத்வானி ரொமான்ஸில் உருவாகியுள்ள இப்பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

    சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார்.

    டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார். அந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.

    இதனால் அஸ்வத் மாரிமுத்து படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதன்மூலம் சிம்பு படம் விரைவில் தொடங்கும் என்று அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.

    • ‘மீசைய முறுக்கு-2’ படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் மார்ச் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • ரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார்

    கதை:

    மீன்பிடி படகு மெக்கானிக்காக வேலை பார்க்கும் சரத்குமார், வெளிப்படையாக சாதாரண வாழ்க்கை வாழும் மனிதராக இருந்தாலும், மறுபக்கம் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுத கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான தேவிகா சதீஷ், கல்லூரியில் உடன் படிக்கும் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார்.

    சமூக மற்றும் பொருளாதார வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஏற்க மறுக்கும் சரத்குமார், இளைஞனை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். உயிர் தப்பிக்க போராடும் நாயகன் தப்பித்தாரா? அல்லது கடலே அவரது முடிவை தீர்மானித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்:

    அப்பா கதாபாத்திரம் சரத்குமாருக்கு புதியது அல்ல. பாசமும் கொடூரமும் கலந்த மனிதராக வேறுபாடு காட்ட முயற்சித்திருந்தாலும், அவர் ஏற்கனவே நடித்த பல வேடங்களின் சாயல் இதில் தென்படுகிறது. தோற்ற மாற்றம் இருந்தாலும் கதாபாத்திரத்தின் தீவிரம் முழுமையாக வெளிப்படவில்லை. இருந்தாலும் அனுபவ நடிகராக தனது பங்கை நம்பகமாக செய்து முடித்திருக்கிறார்.

    இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், உயிர் அச்சத்தில் இருக்கும் மனிதனின் பதட்டத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் சற்றே ஒரே மாதிரியான நடிப்பில் பயணிக்கிறார். சரத்குமாரின் மகளாக வரும் தேவிகா சதீஷ் குறைந்த காட்சிகளிலேயே கவனம் ஈர்த்து தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.

    இயக்கம்:

    ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு மீன்பிடி படகை மையமாக வைத்து, இரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன். குறைந்த கதாபாத்திரங்களுடன் தீவிரமான திரில்லர் அனுபவம் கொடுக்க முயற்சி இருந்தாலும், அதற்கான அழுத்தம் திரைக்கதையில் முழுமையாக உருவாகவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபடும் மனிதன் அனைத்தையும் தனியாக செய்வது போன்ற காட்சிகள் லாஜிக் குறைகளை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் உயிர் காக்க போராடும் நாயகன், பின்னர் வில்லனை காப்பாற்ற முயல்வது போன்ற திரைக்கதை மாற்றங்களும் உணர்ச்சி தாக்கத்தை குறைக்கிறது. திடீர் காதலை விட தந்தை-மகள் பாசம் பெரியது என்பதை உணர்த்தும் காட்சி படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு:

    ஆனந்த் ஒளிப்பதிவில் படகின் உட்புறத்தில் குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.

    மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

    'யூத்' படத்தின் முதல் சிங்கிள் `முட்ட கலக்கி' பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார்.

    'அசுரன்', 'விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'யூத்'. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.

    `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    'யூத்' படத்தின் முதல் சிங்கிள் `முட்ட கலக்கி' பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் இந்தப் பாடலை வைத்து அதிக எண்ணிக்கையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து 'பறந்தேனே பெண்ணே' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 'ஆச புள்ள' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

    ×