என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு வடக்கு முத்துச்சாமி அவுட் பகுதியில் 4 வீதி பொது மக்களுக்கும் பொதுவாக குடிநீர் குழாய் இருந்து வந்துள்ளது. இந்த குடிநீர் குழாய் மூலம் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்று வந்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் பொதுக் குடிநீர் குழாய் இருந்து வந்த நிலையில் தற்போது சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் அகற்றப்படுவதாக கூறி அகற்றப்பட்டுள்ளது.

    குடிநீர் குழாய் அகற்றப்படுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் குழாய் அகற்றப்படக்கூடாது, கோடை காலம் என்பதால் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு குடிநீர் குழாய் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


    இன்று காலை அப்பகுதியில் குடிநீர் குழாய் இல்லாததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மரக்கிளைகளை சாலையில் வெட்டிப்போட்டு முத்துசாமி லே அவுட் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொது மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் பொது மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களை வரவழைத்து எந்தவித இடையூறும் இல்லாத வகையில் குடிநீர் குழாய் மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    சென்னை :

    பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.

    வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.

    விரைவில் சந்திப்போம்.

    வெற்றி நிச்சயம்!

    இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
    • வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதற்காக வைகை அணையில் இருந்து முன்கூட்டியே மதுரையைச் சென்று சேரும் வகையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 1000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியே திறக்கப்படும். அணையில் இருந்து வெளியேறும் நீர் படிப்படியாக குறைக்கப்பட்டு மே 12-ந் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்படும். ஆற்றின் வழியாக தண்ணீர் செல்வதால் கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 55.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2762 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.35 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 1618 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.50 அடியாக உள்ளது. வரத்து 68 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி 13.6, வீரபாண்டி 26.8, பெரியகுளம் 58, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 5, வைகை அணை 46.8, கூடலூர் 11.6, பெரியாறு அணை 14.8, தேக்கடி 18.2, சண்முகா நதி அணை 7.4, அரண்மனைபுதூர் 2.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நீர்வரத்து 1500 கன அடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 3-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், கடந்த 5-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கி நேற்று சற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.

    நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-05-2025- ஒரு கிராம் ரூ.111

    06-05-2025- ஒரு கிராம் ரூ.111

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
    • துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுதுவதற்கு பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

    மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மே 13 முதல் 17-ந்தேதி வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது. அரியலூர் 98.30 சதவீதம், ஈரோடு 96.90 சதவீதம், திருப்பூர் 95.60 சதவீதம், கன்னியாகுமரி 95.10 சதவீதம், கடலூர் 95 சதவீதம்.

    பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்: -

    அரசு பள்ளிகள் 91.94 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 95.71 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதம், பெண்கள் பள்ளி 96.50 சதவீதம், ஆண்கள் பள்ளி 90.14 சதவீதம்.

    பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

    • பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
    • தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-

    தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16 சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம்.

    பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:-

    தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240.

    ஆங்கிலப் பாடப்பிரிவில் எவரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை. 

    தேர்வு முடிவில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:-

    அரியலூர்- 98.80 சதவீதம், ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம்.

    • மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.

    இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

    • கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
    • 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.

    கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.70 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

    • பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
    • பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.

    மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

    முன்னதாக, நாளை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாளைக்கு முன்னதாக இன்றே தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×