என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் - அரியலூர் முதலிடம் பிடித்து அசத்தல்
- பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-
தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16 சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம்.
பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:-
தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240.
ஆங்கிலப் பாடப்பிரிவில் எவரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.
தேர்வு முடிவில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:-
அரியலூர்- 98.80 சதவீதம், ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம்.






