என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அமித்ஷா வீடுதான் அதிமுகவிற்கு நீதிமன்றமாக இருக்கிறது.
- ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார்.
இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள். திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.
திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. நீங்கள் உங்கள் கட்சியை கவனியுங்கள். நீங்கள் தான் தவளை. பிஜேபி பாம்பு உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதி உள்ள போய்ட்டீங்க.
தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு.
அதிமுக தலைவர்கள் இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.
அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு.
கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம்" என்று தெரிவித்தார்.
- பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது.
- திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
நம் பயணம் நீண்டது, தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை குறிவைத்து பாஜக செய்பவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் திமுகவை டார்கெட் செய்கின்றனர்.
பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது என கரூர் மாநாட்டிலேயே எடுத்து சொன்னேன்.
தொகுதி மறுவரையறை, கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என லிஸ்ட் நீள்கிறது.
அவர்களின் கூட்டணிக்குள் பல குழப்பம் இருந்தபோதிலும் திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.
பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையாக எதிர்ப்பது திமுக தான்.
அனுபவம், வலிமை, கொள்கைகளோடு பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது.
திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முன்னெடுப்பில் ஒருகோடிக்கும் அதிகமான குடும்பங்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.
இந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போலதான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
- சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து, திருவாரூரில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை" என்றார்.
மேலும், விஜய் பேசியதாவது:-
கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க ரூ.40 கமிஷன் வாங்குவதாக திருவாரூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
கமிஷன் விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், இதனை கூறியதே விவசாயிகள் தான்.
உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி, டெல்டா விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்த ரூ.40 கமிஷன் தான்.
விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.
டெல்டா பகுதியில் 40-க்கு 40 என்பது விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெற்ற கமிஷன், இதற்கு சிஎம் சாரின் பதில் என்ன?
எது நடைமுறைக்கு சாத்தியமோ எதை உண்மையாக செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக தவெக தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள்.
- அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர்.
திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
கேள்வி கேட்கிறான் என்று நினைக்கிறாதீர்கள். தீர்வை நோக்கி போவதுதான் தவெக-வின் லட்சியம். தேர்தல் அறிக்கையில் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுப்போம். பொய்யான தேர்தல் அறிக்கைய கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வோம். எது உண்மையோ அதை மட்டுமே சொல்வோம். செய்வோம்.
ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி இதுதான் த.வெ.க.வின் மிஷன்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள். அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர். இது என்ன சும்மா கூட்டமா? தொண்டர்கள் TVK TVK என கரகோஷம் எழுப்ப கோடான கோடி நன்றிகள் எனத் தெரிவித்தார்.
- உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
- மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-
இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
- உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்.
திருவாரூில் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.
அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்றார்.
இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-
நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறார்.
அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை.
எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லை.
உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
- அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கல்வி, மருத்துவத்தரம், உள்கட்டமைப்பு, சட்டம், ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது தான் பொருளாதார வளர்ச்சி.
பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம், வாங்கும் திறனை எடுத்துக்காட்டுவது ஜிடிபி.
4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
கொரோனா பாதிப்பு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்தும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதா வளர்ச்சி.
அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்" என்றார்.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
- திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
- வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.
- குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்.., என விஜய் பேச்சு.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது " CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்துள்ளாரா? என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா "கண்டது கழியது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்" என பதில் அளித்தார்.
- இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
- நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.
இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்.
- ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
- முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய பயணமும்- ஆக்ஸ்போர்டு நினைகளும் என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்," தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெர்மனி தொழிலதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.
முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அடுத்தக்கட்டம் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம்" என்றார்.
- மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்..,
- மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, இவர் ஈழத்தமிழகர்கள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக விஜய் பேசியதாவது:-
மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்.., அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்கான குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா?
மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.
இவ்வாறு விஜய் பேசினார்.






