என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கட்டுங்கடங்காக கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது.
- கூட்டம் கலைந்து செல்லும்போது நெரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக அச்சமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்ததில் 3 குழந்தைகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலர் மயக்கமடைந்து உள்ளனர். மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மருத்துவமனையில் தவெக தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.
கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் விரைந்துள்ளார்.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பலர் மயக்கமடைந்து உள்ளனர். மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மருத்துவமனையில் தவெக தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன.
கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.
இந்நிலையில், பரப்புரை கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. உடனே, ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுங்கள் எனத் தனது தொண்டர்களிடம் விஜய் கூறினார்.
இதற்கிடையே, கூட்டத்தில் தொண்டர்கள் தண்ணீர் கேட்டதும் பிரசார வாகனத்தில் இருந்து விஜய் தண்ணீர் பாட்டில்களை கொடுத்தார்.
அப்போது, கூட்ட நெரிசலில் தொண்டர் ஒருவர் மயக்கமடைந்ததை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைக்குமாறு விஜய் கூறியதை அடுத்து, ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்றது.
- மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் சொன்னாரு.
- இந்த மாஜி மந்திரி திமுகவுக்கு என்னதா இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூர் மக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:-
கரூர் என்றாலே ஒரே ஒரு பெயர்தான் பேமஸா ஜொலிக்குது. அதற்கு யார் காரணம்?. யார் காரணம் என்று உங்களுக்குதான் தெரியுமே..,
கரூர் பிரச்சனையை பற்றி பேசிவிட்டு, அவரை பற்றி பேசாமல் போனா, நல்லாவா இருக்கும்?. கரூர் வரை வந்துட்டு அவரை பற்றி பேசாமல் போனால் நல்லவா இருக்கும்?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மந்திரி ஒருவர் இருந்தார்ல. தற்போது அவர் மந்திரி இல்ல. மந்திரி மாதிரி. நான் யாருன்னு சொல்லிதான் தெரியனுமா என்ன?. அவரை பற்றி தெரிந்து கொள்ள க்ளூ ஒன்று கொடுக்கலாமா?. பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்..,
தற்போது ஒரு விழா ஒன்று நடத்தினார்கள் அல்லவா. அது என்ன முப்பது பேர் விழா, ஆ., முப்பெரும் விழா, சாரி Confuse ஆகிடுச்சி. இந்த விழாவில் முதலமைச்சர், மாஜி மந்திரியை உச்சியில் தூக்கி வச்சி, மெச்சினதை நாம் காதாலேயே கோட்டோம்ல.
எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாஜி மந்திரியை பற்றி என்னவெல்லாம் சொன்னாரு, என்னவெல்லாம் கேட்டாரு. Fact Check நண்பர்களே இதுபற்றி ஆராயத் தேவையில்ல. You Tube சென்றால அனைத்தும் இருக்கும். மிரண்டு விடுவீர்கள்.
இந்த மாஜி மந்திரி திமுகவுக்கு என்னதா இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?. திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ணும் பணத்தையெல்லாம் 24x7 டெலிவர் செய்யும் மிஷினாக இருக்கிறாராம். இது நான் சொல்லல, ஊருக்குல்ல பேசிக்கொள்கிறார்கள்.
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
இந்நிலையில், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் கரூரில் தனது பிரசார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையை தொடங்கினார்.
விஜய் வருகைக்காக மதியம் முதல் காத்திருந்த பெருங்கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அதே உற்சாகத்துடன் காத்திருந்தது.
இந்த நிலையில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார்.
அப்போது, காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள், அவர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது என்று விஜய் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
- அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்லில் இன்று பிற்பகலில் தேர்தல் பரப்புரை நடத்தினார்.
அப்போது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சித்து பேசினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி" என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதா கூறியதற்கு மாறாக அதிமுக பொருந்தா கூட்டணி வைத்துள்ளதாக பேசிய நிலையில் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை.
எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக செல்கிறார். ஆவாங், விஜய் மாவட்ட வாரியாக பயணிக்கிறார்.
மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்தும் விஜய் முதலில் களத்திற்கு வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய உள்ளது.
- தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.
- தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார்.
தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நாமக்கல்லில் தனது பிரச்சார உரையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களிடம் அனைவரும் சாப்பீட்டீர்களா என கேட்ட விஜய் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் என்று தவெக தலைவர் விஜய் தனது உரையை தொடங்கினார்.
திமுக, அதிமுக, பாஜகவை தாக்கி பேசினார். தவெகவுக்கும்- திமுகவுக்கும் தான் போட்டியே என்றார். பின்னர், நமாக்கல் பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் கரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டார்.
இந்நிலையில், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூர் பகுதியில் தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் பரப்புரை வாகனத்தின் மேல் விஜய் ஏறினார்.
பரப்புரை வாகனத்தின் மேல் ஏறி தொண்டர்களை பார்த்து தவெக தலைவர் விஜய் கையசைத்தார். அப்போது, தொண்டர்கள் அளித்த வேல் மற்றும் வெற்றிலையை மாலையை த.வெ.க. தலைவர் விஜய் பெற்றுக் கொண்டார்.
- புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
- ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.
நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்," திராவிட முன்னேற்ற கழகத்தை போல் பொய் வாக்குறுதிகளை என்றும் சொல்ல மாட்டோம்.. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடித்து விடுவது போல் அடித்துவிடுவோமா?" என்று கூறினார்.
மேலும் கூறியதாவது:-
ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம் கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.
ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.
அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.
புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும் ,காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும் ,வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிட்னி திருட்டில் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது.
விஜய் இன்று நாமக்கலில் பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை.
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
- 2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
- அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
திமுக- பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2026 தேர்தலில் திமுக- தவெக இடையில் தான் போட்டி.
ஜெயலலிதா சொன்னதை மறந்துவிட்டு, பொருந்தாக் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டின் நலனுக்காகக் கூட்டணி வைத்ததாகக் கூறுவது.
பாஜகவுடன் கூட்டணி தேவையா என நான் கேட்கவில்லை, எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக- பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
தவெக, பாசிச பாஜக அரசுடனும், திமுக அரசுடனும் ஒத்துப் போகாது.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே.
வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






