என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சிதம்பரம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.
    • தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று சவரனுக்கு ரு.640 உயர்ந்து சவரன் ரூ.58,080-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.120, செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்தும், ஆங்கில புத்தாண்டு நாளான புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரு.640 உயர்ந்து சவரன் ரூ.58,080-க்கு விற்பனையானது.

    கடந்த 3நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்து விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,720-க்கும் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,215-க்கும் விற்பனையாகிறது.


    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.99ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080

    02-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,440

    01-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    31-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880

    30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    02-01-2025- ஒரு கிராம் ரூ. 99

    01-01-2025- ஒரு கிராம் ரூ. 98

    31-12-2024- ஒரு கிராம் ரூ. 98

    30-12-2024- ஒரு கிராம் ரூ. 100

    • சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.

    இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. 4 காவல் துறை வாகனங்களும் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி லியா லட்சுமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

    சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
    • தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

    காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாநகர தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    • மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
    • தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நடப்பாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    தூய விண்ணேற்பு அன்னை ஆலய அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி தச்சங்குறிச்சியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 25 பணியாளர்களை கொண்ட 7 மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே விழா மேடையில் யார் இருப்பது என்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினரையும் மேடையை விட்டு கீழே இறக்கினர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 



    • மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார்.
    • தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக கட்சி மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    அதேநேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பு வகித்தவர்களே தற்போது மாவட்ட தலைவர்களாக தொடர்ந்து வருகிறார்கள். எனவே கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வந்தது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு, 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார். இந்த பட்டியலுக்கு விஜய் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான பிறகு, வட்டார, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தை பொங்கல் அன்று இந்த பட்டியல் வெளியாகலாம் என்று தெரிகிறது.

    அதனை தொடர்ந்து கட்சியின் முதல் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடைகிறது. அதன்பிறகு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

    • சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 39 லிருந்து 142ஆக மோசமடைந்து மிதமான பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, இதய நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டது. அப்போது சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்தது. 

    • குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
    • குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே 3 மாத குழந்தையை துணியால் சுற்றி பை ஒன்றில் பால் பாட்டிலுடன் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர்.

    குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.

    போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், வள்ளுவர் கோட்டம் பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.
    • தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சென்னை:

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செல்போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செல்போன்களின் மூலமாக சமூக வலைதளங்களில் பலரும் உலா வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500 கோடியையும் தாண்டிவிட்டது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனால் ஒரு நாட்டில் வைரலாகும் சமூக வலைதள பதிவுகளோ, வீடியோவோ கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுபோலத்தான் தமிழக பாதிரியார் ஒருவர் பிரார்த்தனை செய்யும் வீடியோ வட இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வட இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தமிழக பாதிரியார் பிரார்த்தனை செய்வது போன்ற வீடியோவையும், அதில், 'பிரதமர் மோடி, மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை இயேசு கிறிஸ்து கொல்ல வேண்டும்.

    அயோத்தியில் ராமர் கோவிலை இடித்துவிட்டு அதில் தேவாலயம் கட்டுவதற்கு வலிமை தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்' என்று குறிப்பிட்டும் தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'பிரார்த்தனை செய்யும் அந்த வீடியோவில் பாதிரியார் 'தொடுங்கப்பா' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தொடுதலை குறிக்கும்.

    மேலும் இது ஆசீர்வாதம் என்று பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, உத்தரபிரதேச முதல்-மந்திரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு, அவர்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். 'தொடுங்கப்பா' என்ற வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு சூழல்களில் தவறாக பரவுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி.

    சென்னை:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை, செல்லக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை.

    எத்தனையோ கனவுகளை, லட்சியங்களை கொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆறுதல்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம். இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் கேட்டுக்கொள்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம்.

    பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது. குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    ×