search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby rescued"

    • குழந்தையை கண்ட தூய்மை பணியாளர்கள் உடனடியாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட அதியமான் தெருவில் நேற்று முன்தினம் மறைமலைநகர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த தெருவில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுச்சுவருக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனையடுத்து அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக தூய்மை பணியாளர்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை மீட்டு மறைமலைநகரில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். மீட்கப்பட்ட குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மறைமலைநகர் அதியமான் தெருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் 35 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. #RussiaGasExplosion
    மாஸ்கோ:

    ரஷியாவில் மேக்னி டோகோர்ஸ் நகரில் உள்ள 10 மாடி குடியிருப்பு இடிந்தது. அதில் இருந்த ஒரு வீட்டில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் இந்த விபத்து நிகழ்ந்தது.

    அதில் 48 வீடுகள் சேதம் அடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இன்னும் 36 பேரை காணவில்லை. காயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மீட்கப்பட்ட உடல்கள் போர்வையில் சுற்றி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேக்னி டோகோர்ஸ்க் நகரில் தற்போது மைனஸ் 17 டிகிரி குளிர் நிலவுகிறது. அதை பொருட்படுத்தால் குழுவினர் இடிபாடுகளை அகற்றி கொண்டிருந்தனர்.

    அப்போது இடிபாடுகளுக்கு இடையே குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதன் பின்னர்தான் 11 மாத ஆண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தலையில் பலத்த காயம் இருந்தது. குழந்தையை மீட்ட குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


    விபத்து நடந்து 35 மணி நேரத்துக்கு பிறகு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. குழந்தையின் உடலை படுக்கை சுற்றியிருந்ததால் உயிர் பிழைத்துள்ளது.

    இதை அறிந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இடிந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கூடினர். 35 மணி நேரமாக கடுங்குளிரில் தவித்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை ஆவலுடன் பார்த்தனர். பின்னர் அக்குழந்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த குழந்தையின் தாய் விபத்தில் இருந்து தப்பினார். அவர் உயிருடன் இருக்கிறார். குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த அவர் ஆவலுடன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். #RussiaGasExplosion
    ×