என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னையும், கோவையும் உள்ளது.
    • ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவையில் ஒருவர் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக பேசினார். சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்.

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 80 சதவீதத்திற்கு மேல் தண்டனை பெற்று தந்துள்ளோம். பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னையும், கோவையும் உள்ளது.

    மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் பொள்ளாச்சி சம்பவம் பற்றி எண்ணி பாருங்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடந்தது என்பது சிபிஐ-யால் தெரியவந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன் என்றார்.

    பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு.
    • ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

    அப்போது, "தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரச்சனையை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டேன் என சொல்லக்கூடியவர் அல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு அதிமுகவினர் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

    பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    ஞானசேகரனிடம் செல்போனில் பேசியது யார் என்று மத்திய அரசு தான் வெளியிட வேண்டும்.

    செல்போன் அழைப்புகள் தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. அவர்கள் தான் விவரங்களை வெளியிட வேண்டும்.

    10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஒரு விரல் மற்றவரை காட்டினால் மற்ற விரல்கள் உங்களை காட்டும்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை வாக்கு வங்கி அரசியலாக்கி விட்டார்கள். பாலியல் வன்கொடுமை விஷயத்தை அரசியலாக்குவது அதைவிட கொடுமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.
    • மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவையில் ஒருவர் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக பேசினார்.

    சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்.

    குற்றம் நடந்தபின் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்தால் நீங்கள் எங்களை குறை சொல்லலாம். குற்றம் நடந்தது அறிந்த உடனேயே காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு அடுத்த நாளே குற்றவாளி கைது.

    FIR கசிந்ததற்கு மத்திய அரசு நிறுவனத்தின் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா இல்லை, பாதுகாப்பு இல்லை என பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுவது நியாயமில்லை.

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

    முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து யார் அந்த சார் என கேட்கிறீர்கள். யார் அந்த சார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவிடம் கொடுங்கள்.

    மகளிருக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம் தான்.

    மாணவி விவகாரத்தில் மலிவான அரசியலை செய்ய வேண்டாம் என்றார். 

    • தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
    • நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது.

    இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் கூறியிருப்பதாவது:-

    முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்திருக்கிறார். இஸ்ரோவிற்கு அடுத்த கட்டமாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதை செயல்படுத்துவேன்.

    தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அதே போல் நானும் பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் இன்று காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
    • உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் இன்று காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

    தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட இல.கணேசனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது.
    • காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கிற்கு 8 நாட்கள் என்றாலும் பொங்கல் அரசு விடுமுறை நீங்கலாக வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி (திங்கட்கிழமை) 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
    • அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு போடப்பட்டது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்கள், பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் கவர்னர் செயலில் சந்தேகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.

    இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் காவல்துறை அனுமதி பெற்ற பின்னர் தான் போராட்டம் நடத்த வேண்டும். அது காவல்துறையின் கட்டுப்பாடு. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால் வழக்கு போடப்பட்டது.

    கவர்னரை கண்டித்து திமுக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி பெற்ற பின்னர் தான் நடத்தப்பட்டது. ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை என்றார்.

    • குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன்.
    • நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

    சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்கு காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த-தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணனின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், "விண்வெளித் துறையில் இந்தியா ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் புதிய தலைவரான நாராயணன் தலைமையில் புதிய உச்சங்களைத் தொடும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்துகையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானியான அவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் பதில் அளித்தார்.
    • பயன்பெறாத மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் பேசிய வேடச்சந்தூர் உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூரில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சரும், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் விண்ணப்பித்த 5 லட்சத்து 27 ஆயிரம் பேரில் 4 லட்சத்து 897 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மேலும் வேடச்சந்தூர் தொகுதியில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் 62 ஆயிரம் பேர் பயனடைந்து வருவதாகவும் பதில் அளித்தார்.

    தொடர்ந்து கேள்வி எழுப்பிய காந்திராஜன், தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாத மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்து பேசிய உதயநிதி, தமிழகம் முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அதில் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    மேலும் மேல்முறையீட்டின் மூலம் 9 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தமாக 1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும் பதிலளித்தார்.

    இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறாத மகளிரை, உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15-ந் தேதி (புதன்கிழமை) அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.

    அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது.

    இந்த வரைபடத்தில் 13 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 6 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு ரசிக்க பேருந்து நிலையம், விளக்குதூண் உள்ளிட்ட 4 இடங்களில் அகன்ற திரை (எல்.இ.டி.) மூலம் நேரடி ஒளிபரப்பு வசதி, 10 இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சுமார் 900 காளைகளுக்கு மேல் வாடிவாசலில் அவிழ்த்து விட பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி தகுதி பெறும் காளைகள் அதிகளவில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பாலமேடு பேரூராட்சி நிர்வாகமும், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
    • பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

    மண்டபம்:

    தென் தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை தாக்கி சிறைபிடிப்பதும், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    சில நேரங்களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள இலங்கை கடற்பரப்பில் வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8-ந்தேதி) பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி இன்று மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது.

    இதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள இலங்கை பகுதிக்கு சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இலங்கை கடற்படையினர் அவரது எல்லைப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதை கருத்தில் கொண்டு ராமேசுவரம் மீனவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் பாதுகாப்பாக நமது எல்லைக்குள் மீன் பிடிக்குமாறு ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    • மதகஜராஜா திரைப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

    சுந்தர்.சி 2013 ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.

    படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது. இப்பாடலை விஷால் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. இருப்பினும் படம் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். சுந்தர் சி, விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து பேசிய விஷால் குரல் நடுக்கத்துடன், பேச்சில் தடுமாற்றம் மற்றும் கையில் மைக்கை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டே பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த காணொளி இணையத்தில் வைரலானது. விஷாலின் மேல் உள்ள அக்கறையில் ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் குணமாகி வாருங்கள். என பதிவிட்டு வந்தனர். சிலர் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் இப்படி ஆயிற்று என பல செய்திகளை பரப்பினர்.

    இதைதொடர்ந்து, விஷால் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவருக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்ப்பட்டதால்தான் இவ்வாறு ஆனதற்கு காரணம் என டாக்டர் சான்றிதழுடன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

    இந்நிலையில், நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தன.

    ஆனால் இதற்கு விஷாலில் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறுகையில், " விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார்.

    ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×