நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்- இஸ்ரோ தலைவர்

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்- இஸ்ரோ தலைவர்
Published on

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் கூறியிருப்பதாவது:-

முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்திருக்கிறார். இஸ்ரோவிற்கு அடுத்த கட்டமாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதை செயல்படுத்துவேன்.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அதே போல் நானும் பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com