என் மலர்
ஒடிசா
- அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
- முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
- ஏரியில் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு மந்திரி படகில் பயணம்.
- சேர வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் படகு சேராததால் அதிகாரிகள் பதற்றம்.
பீகார் மாநிலத்தில் ஏரியில் பயணம் செய்த மத்திய மந்திரி வழி தெரியாமல் படகோட்டி படகை ஓட்டியதால் இரண்டு மணி நேரம் பரிதவித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு- பால்பண்ணை துறை மந்திரியாக இருப்பவர் பர்ஷோத்தம் ரூபாலா. இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரியில் குர்தா மாவட்டத்தின் பர்குல் என்ற இடத்தில் புரி மாவட்டம் சதாபடா என்ற இடத்திற்கு படகில் சென்றார். இவருடன் பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும் உடனிருந்தார்.
திடீரென மந்திரி சென்ற படகு ஏரியின் நடுப்பகுதியில் நின்றதாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரை வரவேற்க இருந்த அதிகாரிகள், படகு வரவேண்டிய நேரத்தில் வராமம் நீண்ட நேரமாகியதால் பதற்றம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மற்றொரு படகு மூலம் ஏரியில் மந்திரி பயணம் செய்த படகை தேடிச் சென்றனர். அப்போது படகு நடுப்பகுதியில் நின்றிருந்தது தெரியவந்தது.
பின்னர், இரண்டு படகுகளும் கரை சேர்ந்தன. புரி மாவட்டத்தில் உள்ள குருஷ்னபிரசாத் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொள்ள மந்திரி படகு மூலம் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக படகில் தத்தளித்த மந்திரி இரவு 10.30 மணியளவில் புரி சென்றடைந்துள்ளார்.
மீன்வளையில் மோட்டார் சிக்கி படகு செயல்படாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இரவு நேரம் ஆகியதால் வழி தெரியவில்லை. மாற்றுப்பாதையில் படகு ஓட்டுபவர் சென்றதால் கரை சேர முடியாத நிலை ஏற்பட்டது என மந்திரி தெரிவித்தார்.
- சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- டிரைவர்களிடையே தூக்கம், சோர்வு அதிகரிக்கும்போது டீ இலவசமாக வழங்கப்பட உள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.
- குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை தொடங்க ஒடிசா அரசு முடிவு.
- கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் 63 பேருந்துகள் இயக்கம்
ஒடிசா மாநிலத்தில் கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை (லட்சுமி பேருந்து சேவை) தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதன் முதல்கட்டமாக கோரபுத் மாவட்டத்தில் இந்த சேவையினை ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்து அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ- மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பஸ் சேவையால் கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
- 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.
ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.
ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.
நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.
நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
- கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டம் பிடாபாஜூ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்பாக். கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது30).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அர்ஜூன் பாக் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். தான் வேலைக்கு சென்ற நேரங்களில் மனைவி வேறு வாலிபரை அழைத்து உல்லாசமாக இருந்ததாக கருதினார்.
இதுபற்றி மனைவிடம் கேட்டார். அதற்கு தரித்ரி மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன்பாக் கோடரியால் தரித்ரியின் தலையை துண்டித்து கொன்றார். பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அந்த பையை கைப்பற்றி அர்ஜூனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
- ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உள்ள பெரிய நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் பால்தியோ சாகு. இந்த நிறுவனத்துக்கு அதன் வினியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் பெருந்தொகையை செலுத்தியுள்ளதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் ஆலை, அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று 3-வது நாளாக தொடர்ந்த சோதனையில், ஒடிசா சுதபாடா நகரில் உள்ள அந்த மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில், ரூ.200 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
அங்கெல்லாம் அலமாரிகளில் செங்கற்களை போல கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து வருமான வரி அதிகாரிகளே மலைத்துப் போயினர்.
அவற்றை பெரிய பெரிய பைகளில் எடுத்து அடுக்க அடுக்க, அந்த பணி நீண்டுகொண்டே போனது.
சுமார் 160 பைகளில் அடுக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.250 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் பைகளில் இருந்த ரூ.20 கோடி பணம்தான் நேற்று எண்ணி முடிக்கப்பட்டது. மொத்தம் 36 பணம் எண்ணும் எந்திரங்களை நிறுத்தாமல் பயன்படுத்தியும், பணக்கட்டுகளை எண்ணி முடிக்க இயலாமல் வருமான வரி அதிகாரிகள் திணறிப்போயினர்.
ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான். இந்த சோதனை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மதுபானம் நிறுவனமும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
அந்த மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருமான வரி சோதனை தொடர்பான செய்தியை இணைத்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டு மக்கள், குவிந்து கிடக்கும் இந்த பணத்தை பார்த்துவிட்டு, பின்னர் 'நேர்மை' குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்' என்று கூறியுள்ளார்.
மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதாவும் வலியுறுத்தியுள்ளது.
- கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
- வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது
புவனேஸ்வர்:
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்-மந்திரி அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு '5டி செயலாளர்' என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது.
இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.
இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் இன்று இணைந்தார்.
- பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாஜ்பூர்:
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஓரலி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ருத்ர நாராயண் சேத்தி என்ற மாணவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் ருத்ர நாராயண் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் விளையாடியதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக் கரணம் போட சொல்லி உள்ளார்.
இதையடுத்து தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தபோது மாணவன் ருத்ர நாராயண் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த பெற்றோர் மாணவன் ருத்ர நாராயணை அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாணவன் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். மணல் சிற்பத்தை செய்துமுடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும், 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தியுள்ளார்.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா்.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 29 அரைசதங்களுடன் 8,676 ரன்கள் குவித்துள்ளார். 288 ஒருநாள் போட்டியில் 48 சதங்கள், 70 அரைசதங்களுடன் 14,444 ரன்கள் குவித்துள்ளார். 115 டி20 போட்டியில் ஒரு சதம், 37 அரைசதங்களுடன் 2,905 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






