search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஒடிசாவில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து 5 பேர் பலி
    X

    ஒடிசாவில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து 5 பேர் பலி

    • இரவு 9 மணியளவில் பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புரியில் இருந்து நேற்று ஒரு பஸ் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். இரவு 9 மணியளவில் அந்த பஸ் ஒடிசாவின் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாரபதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது.

    இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

    Next Story
    ×