என் மலர்
மகாராஷ்டிரா
- மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
- 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. இதையொட்டி வருகிற நவம்பர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மராட்டியத்தில் தற்போது பா.ஜ.க. ஆதரவுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க. சேர்ந்த பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலிலும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா கட்சியுடன் தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
கடந்த தேர்தலில் ஒன்றிணைந்த சிவசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால் இம்முறை சிவசேனா 2-ஆக பிரிந்து கிடக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே பிரிவு பா.ஜ.க. கூட்டணியிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளது. இதனால் இம்முறை மராட்டியத்தில் கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து இம்முறை ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. புது வியூகம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தலை சந்திக்க மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.
8 மண்டலமாக பிரிக்கப்பட்டு இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6 மந்திரிகள் மற்றும் 7 மூத்த தலைவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி பெறுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவா மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஷ்தோந்த் கொங்கன் மண்டல பகுதியையும், குஜராத் மாநில பொதுச்செயலாளர் ரத்னாகர் வடக்கு மராட்டியம் பகுதிகளிலும், தெலுங்கானா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர் கட்சி பிரசாரத்தையும் கவனிப்பார்கள்.
மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஹிதானந்த் சர்மா மேற்கு விதர்பா பகுதிகளையும், ஆந்திர பிரதேச பா.ஜ.க. பொதுச்செயலாளர் மதுக்கர் மராத்வாடா மண்டல பகுதிகளையும் கவனிப்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டிள்ளது
- நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்ற அம்மாநில பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மராட்டிய வரலாற்றில், 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்துமத துறவியான துக்காராம் பக்தி கவிதைகள் மற்றும் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களால் நன்கு அறியப்படுபவர் ஆவார்.
எனவே புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கவுரவிக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
- நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர்கள்
- கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பிடுங்கி ஷிண்டே சுடத் தொடங்கியுள்ளான்.
மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கிய நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அக்சய் ஷிண்டே [23 வயது] போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்துள்ளான்.
விசாரணைக்காக தலோஜா ஜெயிலில் இருந்த ஷிண்டேவை போலீஸ் இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த நிலையில் மும்பை பைபாஸ் சாலையை நெருங்கிம்போது கான்ஸ்டபிளின் துப்பாக்கியை பிடுங்கி ஷிண்டே சுடத் தொடங்கியுள்ளான்.
எனவே தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஷிண்டே படுகாயமடைந்தான். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றி அங்கு ஷிண்டே உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
- 50 பேருடன் சென்ற பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல்.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
50 பேருடன் சென்ற பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழு, பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பாஜக 4-வது முறை ஆட்சிக்கு வந்தால் மந்திரி பதவி கிடைக்கும்- ராம்தாஸ் அத்வாலே.
- நாங்கள் 4-வது முறை ஆட்சிக்கு வருவது உத்தரவாதம் கிடையாது.
மத்திய மந்திரி நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். பா.ஜ.க.-வை சேர்ந்த இவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசச்கூடியவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய மந்திரியாக இருக்கும் ராம்தாஸ் அத்வாலா, மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு நிதின் கட்கரி, நீங்கள் மந்திரியாவீர்கள். ஆனால், பா.ஜ.க. 4-வது முறையாக ஆட்சி அமைப்பது உத்தரவாதம் என, மந்திரியை கிண்டல் செய்துள்ளார்.
இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில் "மூன்று முறை மந்திரியாக உள்ளேன். 4-வது முறையம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நான் மந்திரியாவேன். என்னுடைய இந்திய குடியரசு கட்சி (ஏ) மகாராஷ்டிரா மாநிலத்தின் மஹாயுதி கூட்டணியில் உள்ளது. நாம் குறைந்தபட்சம் 10 முதல் 12 இடங்களை வரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பெற வேண்டும். வடக்கு நாக்பூர் உள்பட விதர்பாவில் மூன்று முதல் நான்கு இடங்களை கேட்போம்" என்றார்.
இதற்கு மத்திய மந்திரி நிதின் கட்சரி, "எங்களுடைய அரசு 4-வது முறையாக ஆட்சி செய்யுமா? என்பது உத்தரவாதம் கிடையாது. ஆனால், ராம்தாஸ் அத்வாலா உறுதியாக மந்திரி ஆவார்" என்றார்.
ராம்தாஸ் அத்வாலேவால் பல அரசாங்கங்களில் அமைச்சரவையில் இடத்தைப் பிடிக்கும் திறன் குறித்து நிதின் கட்கரி கிண்டல் செய்தார்.
மகாராஷ்டிரா மாநில மஹாயுதி அரசில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடம் பிடித்ததால், உறுதி அளித்தபோதிலும் இந்திய குடியரசு கட்சி (ஏ)யால் மந்திரி சபையில் இடம்பெற முடியவில்லை. எங்களுக்கு கேபினட் மந்திரி சபை, இரண்டு கார்ப்பரேசன் சேர்மன், கிராமம் அளிவிலான கமிட்டிகளில் பங்கு தருவதாக சொன்னார்கள். இதெல்லாம் நடக்கவில்லை. ஏனென்றால் பவார் இடம் பெற்றதால்.
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
பா.ஜ.க.-வுக்கு 103 எம்.எல்.ஏ.-க்களும், சிவ சேனாவுக்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், காங்கிஸ்க்கு 40 எம்.எல்.ஏ.-க்களும், சிவசேனாவுக்கு (உத்தவ் தாக்கரே) 15 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ்க்கு (சரத் பவார்) 13 எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.
- பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
- எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:
ஜபல்பூர்- மும்பை கரிப்ரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை கசாரா ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் உள்ள G-17 பெட்டியின் சைடு பெர்த்தின் இரும்பு பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. இதைப்பார்த்து பயணிகள் பீதியில் உறைந்தனர். இதனால் ரெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கசாரா வழித்தடத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
Snake On A Train! "Gareeb rath mein ameer kahan se aa gaya ye?" (How has this rich one come to Gareeb Rath (name of train). The sense of humour of Indians is legendary?. Jokes apart, a snake found in Jabalpur-Mumbai Garib Rath Express. #snake #snakeVideo pic.twitter.com/xLP9T2A3cD
— Abhishek Yadav (@geopolimics) September 22, 2024
- நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன்.
- என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டில் புழு உள்ளதாக மகாராஷ்டிரா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அக்ஷய் ஜெயின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பதிவில், "என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்தது. நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இது மிக மோசமான அனுபவம். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவில் கேட்பெரி நிறுவனத்தை அவர் டேக் செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டிற்கு கேட்பெரி நிறுவனம் பதில் அளித்துள்ளது. கேட்பரி நிறுவனத்தின் பதிவில், "உங்களின் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்களின் புகாரை எழுத்துபூர்வமாக அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
- மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
- நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசை குடியிருப்பு பகுதியாக தாராவி உள்ளது. இங்கு தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் வேலை நிறுத்தம் செய்தால் மும்பை நகரமே முடங்கும் அளவுக்கு நகரம் முழுவதிலும் பரவி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறனர்.
சமீபத்தில் தாராவியை மறுசீரமைப்பு செய்யும் டெண்டரை இந்தியாவின் பெரும் பணக்காரரான அதானி கைப்பற்றியுள்ளதும் அரசியல் ரீதியாக புகைச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில் தாராவியில் உள்ள மசூதி கட்டடத்தின் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது என கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்துள்ளனர்.

தாராவியில் உள்ள மெஹபூப் -இ- சுப்ஹானி மசூதியின் பகுதி சாலையில் 90 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாக அதை இடிக்க G-North பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 9.00 மணி அளவில் வருவதை அறிந்த தாராவி மக்கள் அவர்கள் மசூதிக்கு வரும் வழிகளை அடைத்து அதிகாரிகள் மசூதியை நெருங்காதபடி தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் தாராவி காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களைச் சமாதானப்படுத்த காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேயில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் ஒன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
55 வினாடிகள் ஓடும் வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருக்கும் மாநகராட்சியின் தண்ணீர் டேங்கர் ஒன்று மெல்ல நகர்ந்த போது ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பின்பக்க சக்கரங்கள் முதலில் விழுந்தது. அதன்பின் வாகனம் முழுவதும் பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் மூழ்கிய டேங்கரை மீட்டனர். திடீரென பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும்
- இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் [2023] தகவல் தொழில்நுட்ப [ஐடி] சட்டத்தில் கொண்டுவந்த திருத்தும் செல்லாது என்று மும்பை உய்ரநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் போலியான மற்றும் தவறான வகையில் பதிவிடப்படும் தகவல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழுவை அந்த சட்டத்திருத்தத்தின்படி மத்திய அரசு அமைத்திருந்தது.
இந்த அமைப்பின் உத்தரவுப்படி எந்த ஒரு சமூக வலைதள பதிவையும் கணக்கையும் நீக்க முடியும். ஆனால் இது அரசை விமர்சிக்கும் எந்த ஒரு கருத்தையும் நீக்க முடியும் என்ற அதிகாரத்தை நிறுவுவதாக அமைத்துள்ளதால் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எழுந்தது. எனவே இதற்கு எதிராக பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீது இன்று நடந்த விசாரணையில், இந்தத் திருத்தங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 [சமத்துவத்திற்கான உரிமை] மற்றும் பிரிவு 19 [பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்], பிரிவு 19(1) (g) [சுதந்திரம் மற்றும் தொழில் உரிமை] ஆகியவற்றை மீறும் வகையிலும், 'போலியான' மற்றும் 'தவறான' என்பதை இதன்மூலம் நிர்ணயிக்க முடியும் என்பது பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததாகவும் உள்ளது என்று தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அமைத்த தகவல் சரி பார்ப்பு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
- அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் (26) என்பவர் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேளைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் அறையில் உயிரிழந்து கிடந்தார். இவரின் உயிரிழப்பு, கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அன்னா செபாஸ்டியனின் மரணத்திற்கு காரணம் பணிச்சுமை தான் என அவரது தாயார் அனிதா எர்ன்ஸ்ட் & யங் இந்தியா தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "அன்னாவிற்கு இதுதான் முதல் வேலை. உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அவர் மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், 4 மாதங்களிலேயே அதிக பணிச் சுமையால் அவர் உயிரிழந்துள்ளார். இரவு நீண்டநேரமும், வார இறுதி நாள்களிலும் அவர் வேலை செய்துள்ளார். பெரும்பாலான நாட்கள் மிகவும் சோர்ந்து போய் விடுதிக்கு திரும்பியுள்ளார்.
புதிதாக வேலைக்கு சேர்ந்தவருக்கு முதுகெலும்பு உடையும் அளவுக்கான பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரியில், அன்னா முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவார். CA தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். உங்கள் நிறுவனம் கொடுத்த அனைத்துப் பணிகளையும் அவர் சோர்வின்றிச் செய்தார்.
ஆனாலும் பணிச்சுமை அவரை உடல் மற்றும் மனரீதியாக பாதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த பல ஊழியர்கள், பணிச்சுமை தாங்காமல் ராஜினாமா செய்துள்ளனர். அன்னாவின் மேலாளர் தொடர்ந்து பணி நேரம் முடிந்தபிறகு அவருக்கு வேலை வழங்கியுள்ளார். கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
இரவு நேரம் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிய வைத்துள்ளனர். அன்னாவின், தகுதிக்கு மீறிய பல்வேறு பணிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அன்னாவின் இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை. அவரது மேனேஜருக்கு தகவல் கொடுத்தும் பதில் இல்லை. எனது மகளின் உயிரிழப்பு, அந்த நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் அடைந்த துயரமும், அதிர்ச்சியும் வேறு குடும்பத்தால் தாங்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
அன்னாவின் தாயார் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி பலரும் அந்நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்த நிலையில், இதனை வழக்காக எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அன்னா செபாஸ்டியனின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். மேலும் அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.
- ஆண்டு தோறும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து உற்சாகத்துடனும், பக்தியுடனும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.
- இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்துக்கு மாபெரும் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
பல மொழி, வெவ்வேறு மதம், கணக்கில் அடங்காத சாதிகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டது தான் இந்திய திருநாடு.
சுய லாபத்துக்காக சிலர் மதம், சாதியின் பெயரால் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் ஒற்றுமையை பேணி காத்து வருவதை மறுக்க முடியாது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 ஆண்டுகளாக மனதை குளிர்விக்கும் மத நல்லிணக்க நிகழ்வு நடந்து வருகிறது.
இந்த மாநிலத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராம மக்கள் தான் வியத்தகு ஒற்றுமைக்கு சொந்தக்காரர்கள். இந்த கிராம இஸ்லாமியர்கள் தங்கள் மசூதிக்குள் 'நியூ கணேஷ் மண்டல் குழு' சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது கணபதி சிலையை நிறுவி, 10 நாள் பூஜைக்கு பிறகு நீர்நிலைக்கு எடுத்து சென்று கரைத்து வருகின்றனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு மதநல்லிணக்கத்துக்கு மாபெரும் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
மசூதி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி குறித்து நியூ கணேஷ் மண்டல் தலைவர் இலாகி பதான் கூறியதாவது:-
ஆண்டு தோறும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து உற்சாகத்துடனும், பக்தியுடனும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த பாரம்பரியம் 1961-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சாங்கிலியில் பலத்த மழை பெய்து உள்ளது. அந்த நேரத்தில் பொது இடத்தில் விநாயகர் சிலை நிறுவிய இந்துக்களை மசூதிக்குள் வந்து கொண்டாடுமாறு இஸ்லாமியர்கள் அழைத்து உள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மசூதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. 1980-ம் ஆண்டு மண்டல் (சிலை நிறுவும் குழு) அமைக்கப்பட்டு மசூதிக்குள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நல்லிணக்க திருவிழா தொடங்கியது. அது முதல் கடந்த 44 ஆண்டுகளாக மசூதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதன் காரணமாக எங்களுக்குள் எந்த பிரச்சினைகளும் வருவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மண்டல் நிர்வாகியான ராகுல் கோகடே கூறியதாவது:-
1980-ம் ஆண்டு இந்த மதநல்லிணக்க திருவிழா தொடங்கியது. இங்குள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ரம்ஜான் நேரத்தில் இந்துக்கள் நோன்பு இருப்பார்கள். விநாயகர் சதுர்த்தி காலத்தில் இந்துக்களுடன் இஸ்லாமியர்களும் விரதம் இருந்து ஒன்றாக சாப்பிடுவார்கள். தீபாவளிக்கு பண்டங்களை பகிர்ந்து கொள்வோம். ரம்ஜானுக்கு அவர்கள் எங்களை பாயாசம் (கீர்) சாப்பிட அழைப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராமத்தை சேர்ந்த மொசின் பதான் என்ற இஸ்லாமியர் கூறுகையில், "ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதிக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். எந்த பிரச்சினை என்றாலும் நாங்கள் நேரடியாக பேசி கொள்வோம். எனவே சோதனை காலங்களில் கூட எங்களுக்கு நல்லிணக்கம் நீடித்தது. எங்கள் பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் தினந்தோறும் நாங்கள் கலந்து கொள்வோம். சிலை கரைப்பு ஊர்வலத்துக்கும் செல்வோம். சில இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் கூட விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வார்கள்" என்றார்.
மற்றொரு மண்டல் உறுப்பினர்கள் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி மட்டுமில்லாமல் மொகரம், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளையும் இங்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்" என்றார்.
இந்து-இஸ்லாமியர்களின் இந்த ஒற்றுமை செய்தியை படிக்கும்போது ஒருகனம் நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா!. மத நல்லிணக்கத்துக்கு இதை விட வேறு என்ன சிறந்த உதாரணம் வேண்டும்?. தொடரட்டும் மதங்களை கடந்த ஒற்றுமை பயணம்!.






