என் மலர்
கர்நாடகா
- 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.
- 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
பெங்களூரு:
கர்நாடக அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.டி.இ.எஸ். ஊழியர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்தது. இதற்காக கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருத்த மசோதா-2025ஐ தாக்கல் செய்யவும் கர்நாடக தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.
தற்போது கர்நாடகத்தில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் (ஓவர் டைம் சேர்த்து) வேலை பார்க்கலாம் என்ற விதி அமலில் உள்ளது. அதில் திருத்தம் செய்து 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்க இந்த புதிய திருத்த மசோதாவை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டு இருந்தது.
இந்த புதிய சட்ட மசோதா அமல்படுத்தினால் தொழிலாளர்களின் பணி 2 ஷிப்டு முறைக்கு வழிவகுக்கும், ஊழியர்களின் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த 12 மணி நேர வேலை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கே.ஐ.டி.யு. வலியுறுத்தி வந்தது.
இந்த மசோதாவின் படி இதற்கு கே.ஐ.டி.யு. உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 6 வாரங்களாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மேலும் ஐ.டி. நிறுவன ஊழியர்களும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 12 மணி நேர வேலை திட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இறுதியில் 12 மணி நேர வேலை திட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதுபோல் கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட்டும், 12 மணி நேர வேலை திட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கே.ஐ.டி.யு. தெரிவித்துள்ளது.
- பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
- 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் அதிசயங்கள் என்பது எப்போதும் மக்களை வியக்க வைக்கும். அதிலும் மருத்துவ துறையில் அதிசயம் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது கர்நாடகத்தில் மருத்துவ துறையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பொதுவாக 'ஓ' பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உள்ளிட்ட ரத்த வகைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு புதிதாக ஒரு வகையைச் சேர்ந்த ரத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது ரத்தம் 'ஓ ஆர்.எச். பாசிட்டிவ்' வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதையடுத்து டாக்டர்கள் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை பெங்களூரு டி.டி.கே. ரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் ரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர். அங்கு அந்த பெண்ணின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவரது ரத்தம் பான்ரியாக்டிவ் ஆவது, அதாவது அவரது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது.
இதை அந்த ரத்த பரிசோதனை மையத்தில் டாக்டர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் ரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச ரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை ரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூரு) என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த வகை ரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என்று அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவத்துறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
- அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டும்மி(Dummi) கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான மல்லிகார்ஜுன்.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர், அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்தித்து வந்தார். ஜூலை 23 ஆம் தேதி, தனது நண்பரின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மல்லிகார்ஜுன், நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில், அவரும் அவரது நண்பர்களும் காயமடைந்தனர்.
பின்னர் அவர்கள் சித்ரதுர்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லிகார்ஜுன் மேல் சிகிச்சைக்காக தாவநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து, அறுவை சிகிச்சைக்கு முன் நடத்தப்பட்ட இரத்த பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்தடுத்த அறுவை சிகிச்சையின் போது அவரது காலில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
மல்லிகார்ஜுன் உடைய மூத்த சகோதரி நிஷா அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர்களிடம் கூறினார்.
ஜூலை 25 ஆம் தேதி மாலை, மல்லிகார்ஜுனை பெங்களூருக்கு அழைத்துச் செல்வதாக நிஷா தனது தந்தையிடம் தெரிவித்தார். இருப்பினும், பயணத்தின் போது, மல்லிகார்ஜுன் இறந்துவிட்டதாகக் கூறி, உடலுடன் வீடு திரும்பினார்.
மகன் மரணம் தொடர்பாக தந்தை நாகராஜப்பா தனது மகள் நிஷா மற்றும் அவரது கணவர் மீது சந்தேகம் அடைந்து விசாரித்தார். அப்போது நிஷா தனது கொடூரமான செயலை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தின் பெருமையை காக்க, போர்வையால் அவரை மூச்சுத் திணறடித்ததாக நிஷா நாகராஜப்பாவிடம் கூறினார்.
இதை தொடர்ந்து நாகராஜப்பா மகள் நிஷா மற்றும் அவர் கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். HIV தோற்று குறித்த தவறான புரிதல் காரணமாக ஒரு இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
- தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
ஐபிஎல் 2025 போட்டியில் ஆர்சிபி வென்றதை கொண்டாடும்போது ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக சித்தராமையா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஸ் மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் எச். தேக்கண்ணவர், காவல் உதவி ஆணையராகப் பணியாற்றிய டி.எஸ்.பி சி. பாலகிருஷ்ணா மற்றும் கப்பன் பார்க் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான நீதித்துறை ஆணையமும், மாவட்ட நீதிபதி குழுவும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடித்து, அரசாங்கத்திடம் அறிக்கைகளை சமர்ப்பித்ததால், தங்கள் இடைநீக்கத்தை நீக்கக் கோரி அதிகாரிகள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அறிக்கையை கருத்தில் கொண்டு, அதிகாரிகளின் இடைநீக்க உத்தரவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் அவர்களின் இடைநீக்கத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது.
- 184 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.
- போலீசார் விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூர் மகடி சாலையில் ஒரு பிரபலமான நகை கடை உள்ளது. இந்த கடையை இரவு அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்தப்படி துப்பாக்கியுடன் 3 பேர் திடீரென கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் நகை கடை உரிமையாளரை மிரட்டி 184 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த நகை கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டினர்.
தொடர்ந்து மர்ம நபர்கள் நகையுடன் வெளியேறி தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து நகை கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையர்கள் முகமூடியுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் இதேபோல் பெங்களூருவில் பட்டப்பகலில் ஒரு நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்தது. எனவே 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.
தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம்களாகப் பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மயக்க மருந்து செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குநர் அசோக் குமார் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி மருத்துவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையிலான அமர்வு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம் மிஷன்களாகவும், பணம் கறக்கும் கினிப் பன்றிகளாகவும் பார்க்கின்றன.
பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டது.
மருத்துவர் நோயாளியை அனுமதித்து, அறுவை சிகிச்சைக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெற்றதாகவும், ஆனால் மயக்க மருந்து இல்லாததால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறி, சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி அசோக் குமார் ராயின் மனுவை நிராகரித்தது.
- ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலி.
- கூட்டல் நெரிசல் தொடர்பாக நீதிபதி குன்கா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருட ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அணி வீரர்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் மைதான வாசலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இன்று கர்நாடக மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் குன்கா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியபடி பார்த்தால் ஆர்சிபி, தனியார் அமைப்புகள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ என்டர்டைமென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்தனர்.
- கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான கலசிபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், அங்கு வைக்கப்பட்டிருந்த பைகளில், ஆறு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டிட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகத்திற்கிடமான பை குறித்து தகவல் கிடைத்ததும், பெங்களூரு போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிபொருட்களை மீட்டனர். அவை தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு இருந்ததாக மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ். கிரிஷ் உறுதிப்படுத்தினார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 1:15 மணியளவில் கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக FIR கூறுகிறது.
ஆரம்பகட்ட விசாரணையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் சாதாரணமாக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால், இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
- தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
- மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார்.
புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவில் பகுதியில் மர்மமான முறைகளில் நடைபெற்ற மரணங்கள் குறித்த விசாரணை எஸ்ஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார் .
- எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் கவுடஹள்ளி அருகே இந்த விபத்து நடந்தது.
சிவகுமார் பயணித்த காருக்கு பின்னல் வந்த எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு டி.கே. சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கான்வாய் விபத்துக்குப் பிறகு டி.கே. சிவகுமார் பெங்களூருக்குத் திரும்பினார்.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
- இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வென்றதால் வெற்றி கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றி கொண்டாட விழாவில் கலந்து கொள்ள லட்சகணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
கூட்டல் நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இரண்டு பகுதிகளான அறிக்கையை கடந்த 11ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சுருக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அறிக்கை குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்டவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிப்போம். மீடியாக்கள் குறிப்பிட்ட சில விசயங்களை பதிவு செய்துள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் அது குறித்து பேசுவேன்.
சிறப்பு விசாரணைக் குழு தேவை என்றால், அது அமைக்கப்படும். அது காவல்துறையின் அறிக்கையை சார்ந்தது. தனிநபர் (சுமார் 100 உடல்களை புதைக்கப்பட்டதை பார்த்ததாக கூறும் முன்னாள் தூய்மை பணியாளர்) 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த அவர், இப்போது காவல்துறை முன் வாக்குமூலம் அளித்து, தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டார்.
இறந்த உடல்களை அடக்கம் செய்ததில் தானும் ஒருவர் என்றும், அவை புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் போலீசார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என கார்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார்.
- கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.






