என் மலர்
கர்நாடகா
- 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.
- முன்னதாக ஆறாவது இடத்தல் இருந்து சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. ர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர வனப்பகுதியில் உடல்கள் புதைக்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களை புகார்தாரர் அடையாளம் காட்டினார்.
அவர் குறிப்பிட்ட இடங்களில் கடந்த வாரம் முதல் புலனாய்வுக் குழு, தடயவியல் குழுவுடன் ஆய்வு நடத்தி வருகிரறது.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) தேடுதல் பணியில் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ள காட்டுப் பகுதியில் புகார்தாரர் குறிப்பிட்ட 11வது இடத்திற்கு அருகில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. மூன்று அடி தூரம் தோண்டிய பிறகு, சேலையின் ஒரு பகுதி மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னதாக கடந்த வாரம் தேடுதலின் மூன்றாவது நாளில், புகார்தாரர் குறிப்பிட்ட ஆறாவது இடத்தல் இருந்து சுமார் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.
- முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.
- எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்று வந்தார்.
பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.
சிறை விதிகளின்படி, அவருக்கு மாதம் ரூ. 540 சம்பளம் பெற அனுமதிக்கப்படுகிறது. அதுவும் சிறை அதிகாரிகள் அவருக்கு ஏதாவது வேலை ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.
எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்ற அவர் ஒரு சாதாரண கைதியாக தனது நாட்களை கழிக்கிறார்.
சிறையில் அவரது அன்றாட வேலைகள் ஒவ்வொரு நாளும் காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. காலை உணவை முடித்த பிறகு, அவர் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும்.
சிறை விதிகளின்படி, ஆரம்பத்தில் அவருக்கு பேக்கரி உதவியாளர் அல்லது எளிய தையல் போன்ற வேலை ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு வருடம் இந்த வேலைகளைச் செய்த பிறகு, அவரது தகுதிகளைப் பொறுத்து நெசவு அல்லது கொல்லர் போன்ற வேலைகளுக்கு மாற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை உணவு வெவ்வேறு வகையான டிஃபினுடன் வழங்கப்படுகிறது. காலை 11:30 மணி முதல் மதியம் 12 மணி வரை மதிய உணவு இடைவேளை உள்ளது. மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, ராகி முத்தா, சாம்பார், சாதம் மற்றும் மோர் ஆகியவை அடங்கும்.
வாரத்தின் செவ்வாய்க்கிழமை முட்டை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழிக்கறி வழங்கப்படும்.
அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாரத்திற்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
- வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை
- வீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பிரஜ்வல் போட்டியிட இருந்த நிலையில் அவர் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து 47 வயதான வீட்டு பணிப்பெண் முன்வந்து புகார் அளித்தார். 2021 ஆம் ஆண்டு ஹாசனில் உள்ள கனிகடாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இரண்டு முறையும், பெங்களூருவில் உள்ள ரேவண்ணாவின் குடும்ப இல்லத்தில் ஒரு முறையும் பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
மேலும் 4 பெண்கள் முன்வந்து பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பி.கே. சிங் தலைமையிலான விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸ் எதிர்கொண்ட முக்கிய சவால், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காட்சிகளை பிரஜ்வல் ரேவண்ணா படமாக்கினார் என்பதை நிரூபிப்பதாகும்.
ஏனெனில் எந்த வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை. வீடியோவை படம்பிடித்த நபரின் கைகள் மற்றும் அந்தரங்க பாகங்கள் மட்டுமே தெரியும். மேலும் பாதிக்கப்பட்டவரின் முகம் தெரியும்.
வழக்கை நிரூபிக்க காவல்துறை முக்கியமாக பாரன்சிக் உயர் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தது. இந்த ஆய்வானது, வீடியோ எடுக்கும் நபரின் அந்தரங்க உறுப்புகளை அவரது உடலின் மற்ற பாகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதாகும்.
கைகள் மற்றும் பிறப்புறுப்புகளின் உடல் அம்சங்களைக் கண்டறிந்து ஒப்பிடுவது பல நாடுகளில், குறிப்பாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் பொதுவாக பயன்படுத்தும் நடைமுறையாகும்.
நீதிமன்ற அனுமதி பெற்று, பிரஜ்வலின் உடல் பாகங்களை புகைப்படம் எடுத்து வீடியோவில் காணப்படும் கைகள் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையே 10 ஒற்றுமைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், வீடியோவில் உள்ள குரல் மாதிரியில் பிரஜ்வாலின் குரலுடன் ஒற்றுமையும் காணப்பட்டது. பின்னர் விசாரணை அதிகாரிகள் பிரஜ்வலின் பண்ணை வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.
வீடியோவில் காணப்படும் காட்சிகள் இந்த இரண்டு இடங்களிலும் படமாக்கப்பட்டதையும் விசாரணைக் குழு கண்டறிந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகளில் காணப்பட்ட DNA மாதிரி பிரஜ்வலின் DNA மாதிரியை ஒத்திருந்தது.
வீடியோ பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை பிரஜ்வல் தனது ஓட்டுநரிடம் ஒப்படைத்திருந்தார். போலீசார் அதை மீட்டபோது, பிரஜ்வால் தானே வீடியோவை படமாக்கியிருப்பது தெரியவந்தது.
மேலும் வழக்கில் தடயவியல் சான்றுகள் வலுவாக இருந்தன. போலீஸ் சmarpithaவீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்து இறுதியில் அவர் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது.
இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சத்தை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது.
- சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. கடந்த 26-ந் தேதி கர்நாடகா பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரணவ் மொகந்தி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
புகார்தாரரை தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரையோர காட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக 35-க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். கடந்த 29-ந்தேதி குழி தோண்டி தேடுதல் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
5 இடங்களில் தோண்டியதில் பான் கார்டு, டெபிட் கார்டு மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 6-வது இடம் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. இதில் ஒரு மண்டை ஓடு ஆண் என்பது தெரியவந்தது. இந்த எலும்புகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தர்மஸ்தலா வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர் மீது புகார்தாரரின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
சிர்சி நிலைய ஆய்வாளரும் சிறப்பு விசாரணைக் குழுவின் உறுப்பினருமான மஞ்சுநாத கவுடா மீது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புகார்தாரரின் வழக்கறிஞர், இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத கவுடா சாட்சியான தனது கட்சிக்காரரை மிரட்டி புகாரை வாபஸ் பெற வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளார்.
சாட்சியை மிரட்டிய மஞ்சுநாத கவுடா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே சிறப்பு விசாரணை குழு தலைவர் பிரணவ் மொகந்தியின் பெயர் மத்திய அரசு பணிக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவரை மத்திய அரசு பணிக்கு அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
- ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
கர்நாடகாவில் மாதம் ரூ.15,000 சம்பளம் வாங்கி வந்த அரசு ஊழியரிடம் இருந்து, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் முன்னாள் எழுத்தராக பணியாற்றிய கலக்கப்பா நிடகுண்டியின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுவரையிலான சோதனையில் 24 வீடுகள், 6 மனைகள், 40 ஏக்கர் விவசாய நிலம், 1 கிலோ தங்கம், மூன்றுக்கும் மேற்பட்ட கார், பைக், ரூ.41 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் விலை உயர்ந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
அரசு ஊழியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக என லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகௌடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும்.
- ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் மிரட்டல் அழைப்பு வந்தது.
- குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியை சேர்ந்த நிஷித் (13 வயது) என்ற சிறுவன் கிறிஸ்ட் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தான்
இந்நிலையில் புதன்கிழமை மாலை, நிஷித் தனது டியூஷன் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.
இரவு 8 மணி தாண்டியும் நிஷித் வீடு திரும்பாததால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராயான நிஷித்தின் தந்தை ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், சிறுவனின் சைக்கிள் அரகேர் பகுதியில் உள்ள புரோமிலி பூங்கா அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு, நிஷித்தின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி பணம் மிரட்டல் போன் அழைப்பு வந்தது.
இதற்கிடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை, கக்கலிபுரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிஷித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில், காலணிகள் மற்றும் உடைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
இந்நிலையில் சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றசாட்டில் குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா என்ற இருவரை போலீசார் நேற்று இரவு பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து மடக்கினர்.
இருவரும், கைது செய்யும்போது, போலீசாரை கொடிய ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், போலீசார் தற்காப்புக்காக ஆறு முறை சுட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா இருவரும் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஜெயநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

- 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
- சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அண்மையில் பகீர் தகவல்கள் வெளியாகின.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார்.
அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.சிறப்பு புலனாய்வு குழு
இந்த விவகாரத்தில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் ஊழியர் நேத்ராவதி நதி படித்துறைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சுட்டிக்காட்டிய இடங்களில் அவர் முன்னிலையில் அகழாய்வு பணிகளை புலனாய்வு குழு மேற்கொண்டது.
அவர் குறிப்பிட்ட முதல் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் 6 வதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணையில் இது முதல் தடயமாக மாறியுள்ளது.
அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், சாட்சிகளின் பாதுகாப்பு மற்றும் ஆதாரங்களை சிதைக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், தர்மஸ்தலாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டிஜிபி பிரணாப் குமார் மொஹந்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிஜிபி அருண் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.
- யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெங்களூரு:
ஜெர்மனியை சேர்ந்தவர் யூனஸ் ஸாரோ. இன்ஸ்டாகிராமில் ஏராளமான சாகச வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் 20 மில்லியன் பார்வையாளர்களை வைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் பெங்களூரு சர்ச் தெருவில் போக்குவரத்து மற்றும் மக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் நேற்று மாலை ஒரு சாகச வீடியோ எடுக்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பெங்களூருவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் சர்ச் தெருவில் குவியத் தொடங்கினர்.
இதுபற்றி தெரிய வந்ததும் கப்பன்பார்க் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் யூனஸ் ஸாரோவை அனுமதியின்றி படம் எடுக்க கூடாது என்றும் போக்குவரத்து நிறைந்த பகுதியில் கூட்டத்தை கூட்டுவது சட்டப்படி தவறு என்றும் தெரிவித்தனர். இதையடுத்து யூனஸ் ஸாரோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் யூனஸ் ஸாரோவை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். கூட்டம் கலைந்து சென்றதும் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் பலியானதை அடுத்து அனுமதியின்றி கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 112 என்ற போலீசாரின் அவசர அழைப்புக்கு வந்த தகவலின் அடிப்படையில் இங்கு விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்றனர்.
- ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
- நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் மகேஷ் என்பவர் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பணி நேரத்தில் தனது செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார். மேலும் நாற்காலியில் ஹாயாக படுத்துக்கொண்டு பயணிகளை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
ஊழியர் மகேஷ் நீண்ட நேரமாக பேசிகொண்டு இருந்ததால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நேரம் ஆகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டும் ஊழியர் மகேஷ் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு இருந்த பயணிகள் சிலர், டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், அந்த நேரத்தில் ரெயில்வே ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருப்பதையும் வீடியோ எடுத்தனர்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். வீடியோவில் ஒரு பயணி 15 நிமிடமாக காத்திருக்கிறோம். டிக்கெட் கொடுக்காமல் ஊழியர் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார். நேரமாகிறது டிக்கெட் கொடுங்கள் என்று கேட்டால் அமைதியாக காத்திருங்கள் என்று கூறுகிறார். நாங்கள் பொறுமையை இழந்த பிறகு தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி குண்டக்கல் ரெயில்வே பிரிவு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பணியின் போது செல்போனில் அரட்டை அடித்த ஊழியர் மகேசை நிலைய மேலாளர் பகீரத் மீனா சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.






