என் மலர்
சத்தீஸ்கர்
- இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
- கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் கீழ் பிறவியிலிருந்து உள்ள இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அவர்களிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார். அவருடன் பேசிய குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுபிறவி அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரதமர் மனதார பாராட்டினார்.
- நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.
- மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியா விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சுமார் 50 ஆண்டாக நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர்.
அரசியலமைப்பை காட்டிக் கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், சுயநலத்திற்காக உங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர்.
பல ஆண்டாக பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. ஏற்கனவே இருந்தவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. மருத்துவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
நாட்டை ஆண்டவர்கள், தங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, உங்களை கைவிட்டனர்.
2014-ம் ஆண்டு நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டோம். இன்று அதன் விளைவுகளை இந்த நாடு காண்கிறது.
11 ஆண்டுக்கு முன் இந்தியா முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.
மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியாவும், சத்தீஸ்கரும் முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.
- ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தரும்படி சம்பா பகத் கேட்டார்.
- மகளின் கனவை நிறைவேற்ற அவர் தினமும் சில நாணயங்களை சேர்த்து வந்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத். விவசாயியான தனது தந்தையிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி சம்பா பகத் கேட்டார்.
தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர், தினமும் சில நாணயங்கள் மற்றும் ரூபாயை ஒரு சேர்த்து வந்தார். சில மாதங்கள் கழிந்த நிலையில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது.
இந்நிலையில், நாணயங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் தனது மகளுடன் சென்றார்.
ஷோரூம் மேலாளர் விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து, நாணயங்களை வேண்டாம் என சொல்லாமல் அவற்றை வாங்கி ஊழியர்களிடம் எண்ணும்படி கூறினார்.
நாணயங்களை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.40 ஆயிரம் இருந்தது. மீதி பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார்.
அதன்படி, அவரிடம் புதிய ஸ்கூட்டர் சாவி கொடுக்கப்பட்டது. அந்த சாவியை தனது மகளிடம் வழங்கி மகிழ்ந்தார். தந்தையும், மகளும் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 2026க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நக்சலைட்டுகள் அதிக நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாக அவர்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜத்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 2,110 பேர் சரணடைந்தனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
- மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கிய நாள்.
இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கரில் 27 பேர் ஆயுதங்களை கீழே போட்டனர். மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டனர்.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிடுவதற்கான அவர்களின் முடிவை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் நக்சலைட்டு அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.
நக்சலைட் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தொடர் பழக்கத்தால் மைனர் பெண் 3 மாதம் கர்ப்பம்.
- கருவை கலைக்க சொல்லி மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் ஆத்திரம்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் கருவை கலைக்க சொன்னதால் இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அந்த மைனர் பெண்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சதாம். இவர் அபன்பூர் என்ற இடத்தில் எம்.எஸ். என்ஜினீயரிங் அதிகாரியாக வேலைப் பார்த்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் 16 வயது வயது மைனர் பெண். இவருக்கும் முகமது சதாமுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த மைனர் பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன்னதினம் (செப்டம்பர் 28ஆம் தேதி) ராய்ப்பூருக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள லாட்ஜியில் இரண்டு பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து முகமது சதாம், இந்த மைனர் பெண்ணிடம் கருவை கலைத்துவிட வற்புறுத்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் சமதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது, கருவை கலைக்க சொல்கிறாயா? என ஆத்திரமடைந்த அந்த மைனர் பெண், காதலன் மிரட்டிய அந்த கத்தியை எடுத்து, காதலின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தை அறுத்ததுடன், அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். ரெயில்நிலையம் அருகே லாட்ஜ் சாவியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மகளிடம், எங்கு சென்றாய் என தாய் கேட்க, நடந்த விசயம் அனைத்தும் தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக தாய், மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்த அனைத்தும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மைனர் பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கருவை கலைக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். சதாம் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை, கருவை கலைத்துவிடு எனச் சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது.
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
- பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சலைட்டுகள் சரண் அடைந்தனர். போலீஸ் நிலையத் தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்பு அவர்கள் சரண் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் அதில் இருந்து விலகி சரண் அடைந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது மாவோயிஸ்டு தலைவர்கள் பழங்குடியினரின் உண்மையான எதிரிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
- பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
- பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.
- இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்பு படையினர், சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பா.ஜ.க. அரசு ஓயாது.
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.
ஒவ்வொரு மலைப்பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.
கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர்.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது படுகாயம் அடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதிசெய்யவும் பா.ஜ.க. அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.






