என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சிறுமி அடிக்கடி தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.
    • கடந்த வாரம் சிறுமியின் விடுதிக்கு சென்ற சிண்டு வீட்டிற்கு வரவேண்டும் என சிறுமியை அழைத்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூருவை சேர்ந்த 10 வயது சிறுமி. இவர் ஏலூரு அருகே உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    விடுதியின் அருகே உறவினர் வீடு உள்ளது. சிறுமி அடிக்கடி தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம்.

    விடுதிக்கு வந்த சிறுமியின் உறவினர் மகன் சிண்டு தின்பண்டங்கள் மற்றும் துணிமணிகள் வாங்கி தர வேண்டும் என வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் தனது அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.

    அதன்பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பரான 13 வயது சிறுவனுக்கும் சிறுமியை விருந்தாக்கினார்.

    இந்த தகவல் சிண்டுவின் தந்தை ராம்பாபுவுக்கு தெரிய வந்தது. சிறுமி தனக்கு மகள் முறை என எண்ணாமல் அவரும் சிறுமியை பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமியின் விடுதிக்கு சென்ற சிண்டு வீட்டிற்கு வரவேண்டும் என சிறுமியை அழைத்தார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைக்கண்ட விடுதி வார்டன் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விடுதி வார்டனிடம் தெரிவித்தார். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் சிறுமியின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர் ஏலூரு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிண்டு அவரது தந்தை ராம்பாபு ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களது தகராறு நீடித்து வந்தது. இவர்களது சண்டை கிராமத்திலும் பிரபலமாக இருந்தது.

    வழக்கம்போல் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக அமைதியாக இருந்தனர்.

    சிறிது நேரம் கழித்து தாராசந்த் நாயக் அவரது மனைவியை சமாதானம் செய்ய முடிவு செய்தார்.

    குடும்பத் தகராறு குறித்து மனைவியிடம் அமைதியாக பேசினார். அப்போது மவுனமாக இருந்த மனைவி புஷ்பாவதி அருகில் சென்று உதட்டோடு முத்தம் கொடுக்க முயன்றார்.

    இதனை அவர் தடுத்தார். ஆனாலும் தாராசந்த் நாயக் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால், தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்தார்.

    இதில் வலி தாங்காமல் தாராசந்த் நாயக் அலறினார். ஆனாலும் புஷ்பாவதி விடாமல் நாக்கை கடித்தார். இதில் நாக்கு துண்டாகி தொங்கியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்றனர். பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறியபடி இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் தாராசந்த் நாயக்கும் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். அதில் தனது நாக்கை வேண்டு என்றே மனைவி கடித்தார்.

    என் மனைவி கொன்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் சாலையில் கொட்டிய மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர்.
    • கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தரையில் விழுந்த மீன்களை போட்டி போட்டு மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர், மகாதேவ்பூர் உள்ளிட்ட இடங்களில் கன மழையுடன் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்தன.

    இதனால் சாலைகள் முழுவதும் மீன்கள் துள்ளி குதித்தபடி ஊர்ந்தன.

    100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் சாலையில் கொட்டிய மீன்களை ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர்.

    இதேபோல் வஜ்ரபு கோனேரு கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் அதிக அளவு மீன்கள் விழுந்தன.

    கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தரையில் விழுந்த மீன்களை போட்டி போட்டு மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.

    ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முதல் முறையாக வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் மீன்கள் விழுந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வானத்திலிருந்து விழுந்த மீன்கள் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாக தெரிவித்தனர். வானத்திலிருந்து மழையுடன் மீன்கள் கொட்டியதை அப்பகுதி மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.
    • டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உட்பட கட்டண சேவை டிக்கெட் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.

    டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர் வங்கி கவுண்டரில் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி, டிக்கெட் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டிக்கெட் ஒதுக்கீடாக பெறும் பக்தர்கள் மொபைல் எண்ணுக்கு பேமென்ட்லிங்க் அனுப்பி, அதன்மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதியை தேவஸ்தான நிர்வாகம் சோதனை அடிப்படையில் நேற்று அறிமுகம் செய்தது.

    இந்த பேமென்ட் லிங்க் மூலம் யுபிஐ ஐடி, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பக்தர்கள் பணம் செலுத்தலாம். பக்தர்கள் கொடுத்திருக்கும் வாட்ஸ்ஆப் எண் அல்லது மெயில் ஐடிக்கு டிக்கெட் வந்து சேரும். அந்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பதியில் பரிசோதனை அடிப்படையில் கொண்டு வந்துள்ள இந்த நடைமுறை வெற்றி பெற்றால், அடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசன கட்டணம் செலுத்தவும் இதே நடைமுறையை கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    • தங்கக் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டது.
    • ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கின்றனர்.

    கலியுகத்தில் திருமலையின் ஏழு மலைகளில் மிக உயரமான நாராயணகிரி மலையில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தவர் வெங்கடேஸ்வர சுவாமி. இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சத்ரஸ்தாபன உற்சவம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, அர்ச்சகர்கள் குழுவினர் ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட குடையை ஏற்றி பூஜை செய்கின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக நாராயணகிரியில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக கோவிலின் தங்கக் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டது. ரங்கநாயகி மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க குடைகளுடன் வலம் வந்து மேடாரமிட்டாவை அடைகின்றனர்.

    அங்கிருந்து நாராயணகிரி உச்சியை அடைந்த அர்ச்சகர்கள், பங்காருபாவியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை கொண்டு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்து, அலங்காரம், பூஜை, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கின்றனர். அதைத்தொடர்ந்து, வேத பாராயணம், பிரபந்த சாத்துமோரை செய்து, ஸ்ரீவாரி பாதத்தில் குடை பிரதிஷ்டை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள்.

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.
    • கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக சுப்பா ரெட்டியும், 28 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை நீக்கிவிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவும் மக்களிடையே நெருக்கமாக உள்ள கட்சியினருக்கு புதிய பதவி வழங்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படும் என கூறப்படுகிறது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் தற்போது வரை கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.

    எனவே கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,024 பேர் தரிசனம் செய்தனர். 32,688 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    • சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர் நவீன். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்.

    இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவரும் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது ஓங்கோல் மற்றும் அதன் சுற்றுப்புற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் நவீனை அடித்து உதைக்க ஆஞ்சி முடிவு செய்தார். அதன்படி நவீனை மது குடிக்க அழைத்தார். ஓங்கோல் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் நவீன் சென்றார். அங்கு வைத்து ஆஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து நவீனை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உடல் முழுவதும் அவருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நவீன் முகத்தில் 3 பேர் சிறுநீர் கழித்தனர். மேலும் சித்ரவதை செய்தனர். இதனை அந்த கும்பலில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார்.

    இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இது ஆந்திராவில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என பழங்குடியினர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர் .

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் அண்மையில் பழங்குடியின வாலிபர் மீது ஒருவர் அலட்சியமாக சிகரெட் புகைத்த படி சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதேபோல ஆந்திராவில் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.
    • கணவன் மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 54). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (50).

    இவர்கள் இருவரும் ஸ்மார்ட் வில்லேஜ் மேம்பாடு திட்டம் என்ற பெயரில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் காவிடியில் ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினர்.

    வேலைவாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அதன் பின்னர் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்தனர்.

    இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பட்டதாரி வாலிபர்கள் இவர்கள் நிறுவனத்தை அணுகினர். அப்போது வேலைக்கு ஏற்றவாறு ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் போட்டி போட்டு பணத்தை செலுத்தினர். பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் வேலையும் கிடைக்கவில்லை பயிற்ச்சியும் அளிக்கவில்லை.

    இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பிரசாத் நிறுவனத்தை அணுகி வேலை கொடுங்கள் அல்லது டெபாசிட் பணத்தை திருப்பி தர வேண்டுமென கூறினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீஸ் நிலையங்களில் பிரசாத் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தம்பதியினருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பிரசாந்த் தனது வீட்டை விற்பனை செய்து ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை திருப்பி கொடுத்தார்.

    போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்தபோது வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதிக்குள் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து விட்டு வந்தனர்.

    பிரசாந்த் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காததால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பி எம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.
    • வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தலித் வாடா பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மா. இவர் 10-க்கும் ஏற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று காலை ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார்.

    வனப்பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன அப்போது 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் உடலை இறுக்கி தலையை விழுங்க தொடங்கியது.

    இதனால் வலி தாங்க முடியாமல் ஆடு கத்தியது. சத்தம் கேட்ட அன்னம்மா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் ஆட்டை விழுங்கி கொண்டிருந்த மலைப்பாம்பை அடித்து கொன்றனர். ஆட்டை உயிருடன் மீட்டனர்.

    • பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார்.
    • விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.

    பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார்.

    அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.

    இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.

    பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.

    இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார். இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

    விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.

    • திருப்பதி கோவிலில் இன்போசிஸ் தலைவரும் முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினருமான சுதா நாராயணமூர்த்தி தரிசனம் செய்தார்.
    • திருப்பதி கோவிலில் நேற்று 64,003 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதனால் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஏழுமலையான் கோவிலில் இன்போசிஸ் தலைவரும் முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினருமான சுதா நாராயணமூர்த்தி தரிசனம் செய்தார். அவர் ரூ.1½ கோடி மதிப்பிலான தங்க அபிஷேக சங்கை முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.

    திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கிழக்கு மாட வீதியில் நடந்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இருந்தவர்கள் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விவரம் தெரியவில்லை.

    திருப்பதி கோவிலில் நேற்று 64,003 பேர் தரிசனம் செய்தனர். 24,659 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
    • ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    திருப்பதி:

    டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்யாண் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினை ஏற்பட்டது. பா.ஜ.க.வும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு பிரச்சனை உள்ளது.

    அவர்களின் பிரச்சனைகளை பேசுவது ஏற்புடையது அல்ல.

    எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படும்.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை.

    ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×