என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பா.ஜ.க.-ஜனசேனா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இல்லை: நடிகர் பவன் கல்யாண் பேட்டி
- கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது.
- ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.
திருப்பதி:
டெல்லியில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.
இந்த கூட்டத்திற்கு முன்பு பவன் கல்யாண் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க., ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி இணைந்து போட்டியிட்டது. இதனையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிரிவினை ஏற்பட்டது. பா.ஜ.க.வும் ஜனசேனாவும் மீண்டும் இணைந்தாலும், தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு பிரச்சனை உள்ளது.
அவர்களின் பிரச்சனைகளை பேசுவது ஏற்புடையது அல்ல.
எங்கள் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு பிரச்னை இல்லை. ஜனசேனா கட்சியினர் என்னை முதல்வராக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தலின் போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவு படுத்தப்படும்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது மட்டுமே எனது முன்னுரிமை.
ஆதார் போன்ற பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு ஏன் கொடுக்கப்பட வேண்டும். ஆந்திராவில் தனியார் நபர்கள் தரவுகளை சேகரிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளது. உள்கட்டமைப்பு முழுமையாக இல்லை. ஊழியர்களுக்கு முறையான சம்பளம் கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்