என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
தினமும் ஏதாவது ஒரு சூப் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஆப்பிளை வைத்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை ஆப்பிள் - 4
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
உப்பில்லாத வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
முந்திரி - 10
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
காய்கறி சத்து நீர் - 3 கப்
காய்கறி சத்து நீர் தயாரிக்கும் முறை
இதனைத் தயாரிக்க பூண்டு வெங்காயம், கேரட், பிரிஞ்சி இலை, உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் ஏதேனும் 4 - 5 சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணி, பட்டாணி, பீன்ஸ் என பல வகைகளை சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும்.
தோல் நீக்காமல் காய்களை வெட்டிக் கொள்ளலாம். பூண்டு தவிர மற்ற காய்கறிகளை சம அளவு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு 4 - 5 பல் போதும். மொத்த காய்கறிகள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவு நீர் சேர்த்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை மிக மிக மெல்லிய தீயில் வேக விடுங்கள். பின்னர் 1 மணி நேரம் அதனை மூடி வைத்து காய்கறி சத்து நீரினை நன்கு வடித்து எடுத்து விடுங்கள்.)
சிலர் காய்கறிகளை 2 விசில் வரும் வரை வேகவிட்டு அப்படியே மிக்சியில் கூழாய் அரைத்து விடுவர். இது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது. இந்த சத்து நீரில் உருளை, சேனை, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவற்றினை சேர்ப்பதில்லை. இப்பொழுது காய்கறி சத்து நீர் ரெடியாகி விட்டது. இது அதிகமாக இருப்பின் பிரிட்ஜில் வைத்து மறு நாளும் பயன்படுத்தலாம்.

செய்முறை
ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நசுக்கி கொள்ளவும்.
முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் நசுக்கிய பூண்டு, காய்கறி சத்து நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஆறிய பின் மிக்சியில் ஒரு நிமிடம் நன்கு சுற்றி பின்னர் மிதமாய் சுட வைத்து மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை ஆப்பிள் - 4
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
உப்பில்லாத வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
முந்திரி - 10
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
காய்கறி சத்து நீர் - 3 கப்
காய்கறி சத்து நீர் தயாரிக்கும் முறை
இதனைத் தயாரிக்க பூண்டு வெங்காயம், கேரட், பிரிஞ்சி இலை, உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் ஏதேனும் 4 - 5 சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் பூசணி, பட்டாணி, பீன்ஸ் என பல வகைகளை சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை நன்கு கழுவ வேண்டும்.
தோல் நீக்காமல் காய்களை வெட்டிக் கொள்ளலாம். பூண்டு தவிர மற்ற காய்கறிகளை சம அளவு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு 4 - 5 பல் போதும். மொத்த காய்கறிகள் எந்த அளவு இருக்கின்றதோ அந்த அளவு நீர் சேர்த்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை மிக மிக மெல்லிய தீயில் வேக விடுங்கள். பின்னர் 1 மணி நேரம் அதனை மூடி வைத்து காய்கறி சத்து நீரினை நன்கு வடித்து எடுத்து விடுங்கள்.)
சிலர் காய்கறிகளை 2 விசில் வரும் வரை வேகவிட்டு அப்படியே மிக்சியில் கூழாய் அரைத்து விடுவர். இது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது. இந்த சத்து நீரில் உருளை, சேனை, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளி போன்றவற்றினை சேர்ப்பதில்லை. இப்பொழுது காய்கறி சத்து நீர் ரெடியாகி விட்டது. இது அதிகமாக இருப்பின் பிரிட்ஜில் வைத்து மறு நாளும் பயன்படுத்தலாம்.

செய்முறை
ஆப்பிள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை நசுக்கி கொள்ளவும்.
முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து மிதமாக சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் நசுக்கிய பூண்டு, காய்கறி சத்து நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின்னர் முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஆறிய பின் மிக்சியில் ஒரு நிமிடம் நன்கு சுற்றி பின்னர் மிதமாய் சுட வைத்து மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும்.
குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.
பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.
முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.
புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி.
பொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு.

‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.
வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும்.
எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..
நம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வர வேண்டும். ‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும்.
உடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில் தான் தயாராகின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம்.
பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.
முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும். குழந்தைகளுக்குப் புரதச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மெடிக்கேட்டட் பிஸ்கெட்டை கொடுப்பார்கள். இது மருந்துக்கடைகளில்தான் கிடைக்கும். இந்த பிஸ்கெட்டை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.
புரதச்சத்து குறைபாடு இல்லாத பட்சத்தில் மெடிக்கேட்டட் பிஸ்கெட் மூலம் உடலில் தேவைக்கும் அதிகமாக சேரும் புரதம் சிறுநீரகத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இதே விதிதான். புரதச்சத்து மட்டுமின்றி எந்த சத்தையும் சரிவிகித உணவின் மூலம் பெறுவதே சரியான வழி.
பொதுவாக கீரை, கேழ்வரகு, சில பருப்பு வகைகளில் இருந்து நமக்கு கால்சியம் கிடைக்கிறது. அதோடு, பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலங்கள் என மற்ற சத்துகளும் சேர்ந்தே கிடைக்கின்றன. எலும்பின் வளர்ச்சிக்கு கால்சியத்துடன் பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற மற்ற சத்துகளும் தேவை. மற்ற சத்துகள் இல்லாமல் கிடைக்கும் கால்சியம் சத்துகள் கற்களாக மாறும் வாய்ப்பு உண்டு.

‘‘வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.
வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கெட்டை தேர்ந்தெடுப்பதைவிட இதுபோன்ற நார்ச்சத்து, சிறுதானியங்கள் என சத்துகள் கொண்ட பிஸ்கெட்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. இதுபோன்ற ஸ்பெஷல் பிஸ்கெட்டை வாங்கினாலும், கவரில் இருக்கும் நியூட்ரிஷன் லேபிளை கவனிக்க வேண்டும்.
எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..
நம் உணவுப்பழக்கத்திலேயே பிஸ்கெட்டை தவிர்த்து, நம் பாரம்பரியஉணவுகளைக் கொண்டு வர வேண்டும். ‘‘ஃப்ரூட் சாலட், வேர்க்கடலை, பட்டாணி, சுண்டல், பாதாம், பொரி, பொட்டுக்கடலை, கடலை மிட்டாய், உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் போன்ற நம் கலாசாரத்துக்கும் நம் உடல்நலத்துக்கும் ஏற்ற உணவுகளை சாப்பிட்டுப் பழக வேண்டும்.
உடல்நலத்துக்கு கேடான மைதாவை பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல பிஸ்கெட்டுகள் மைதாவில் தான் தயாராகின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கெட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம்.
இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.
பெயர் விளக்கம் : ‘அஷ்டாங்க’ என்றால் எட்டு அங்கம் என்றும் ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.
செய்முறை : கால்விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி வணங்குவதால், இது அஷ்டாங்க நமஸ்காராசனம். முழங்கால்களை தரையில் ஊன்றி உடலை முன்புறம் நீட்டவும். வயிறு மட்டும் தரையில் படாமல் இருக்க வேண்டும். வெளியே மூச்சுவிடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.
பயன்கள் : கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.
செய்முறை : கால்விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி வணங்குவதால், இது அஷ்டாங்க நமஸ்காராசனம். முழங்கால்களை தரையில் ஊன்றி உடலை முன்புறம் நீட்டவும். வயிறு மட்டும் தரையில் படாமல் இருக்க வேண்டும். வெளியே மூச்சுவிடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு : இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.
பயன்கள் : கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.
உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.
நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது. உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
* பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.
* அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
* எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.
* முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.
* இருதய நோய்களை உண்டாக்கும்.
* ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
* சம்போக சக்தி குறைந்து விடும்.
* பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.

* உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.
* அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
* உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.
* அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.
* நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
* குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
* இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.
* பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது. உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
* பருமனாய் இருப்பவர்கள் சிறிது தூரம் நடப்பதற்குள் மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தளர்ச்சியடைந்து வலியும் வேதனையும் ஏற்படும்.
* அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.
* எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய உடல் ஒத்துழைக்காது.
* முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும்.
* இருதய நோய்களை உண்டாக்கும்.
* ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
* சம்போக சக்தி குறைந்து விடும்.
* பெண்களில் மலட்டுத் தன்மையை உண்டு பண்ணும்.

* உடலில் நீரிழிவு நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களுள் உடற்பருமனும் ஒன்று.
* அமெரிக்காவில் நீரிழிவு நோயைப்பற்றி நடந்த ஆய்வில் இரண்டாயிரம் பேர் நீரிழிவு நோயாளிகள் என்றால் அவர்களில் 1700 பேர் அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டது.
* உடல் பருமன் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு முதுகில் நிரந்தரமான வலியை உண்டு பண்ணி விடுகிறது.
* அதிக உடற்பருமனாய் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு உண்டாகும் நோய்கள் எளிதில் குணமாவதில்லை.
* நமது உடலில் அதிகரிக்கும் ஒவ்வொரு பவுண்டு அளவு கொழுப்பு சத்து சுமார் இரண்டிலிருந்து மூன்று மைல் அளவு ரத்த நாளத்தைப் பெறுகிறது. இந்த அதிகளவு தூரத்திற்கு ரத்தத்தை இருதயம் அனுப்பவேண்டி இருப்பதால் இருதயம் பலகீனம் அடைந்து, இருதய நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
* குடல் இறக்க நோய்க்கும், பித்த நீர்ப்பையில் கற்கள் தோன்றுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும், உடல் பருமன்தான் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
* இடுப்புப் பகுதியில் உண்டாகும் வலி மற்றும் கோளாறுகளுக்கு அதிக உடல் எடைதான் முக்கிய காரணமாகும்.
* பருமனானவர்களின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். இது இருதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் ரத்தக் குழாய்களின் அளவு குறுகி விடுகிறது. இதனால் ரத்த ஓட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது.
சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
அரைக்க
இஞ்சி - 1/2 இன்ச் அளவு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.
அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
அரைக்க
இஞ்சி - 1/2 இன்ச் அளவு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.
அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள்.
இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள். இதனால், பிடித்த உணவு முதல் உடை வரை அனைத்தையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரிக்க மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் தான். செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால், உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது.
அதுவும் அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது.
மேலும் செயற்கை இனிப்பூட்டிகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உடற் பருமன் குறைய வேண்டும் என்றால் உடனே அசெயற்கை இனிப்பூட்டிகளை தவிர்ப்பது நல்லது.
இது ஒரு புறம் எனில், எப்படியோ இடுப்பில் சதை அதிகரித்து உடல் எடை அதிகரித்துவிட்டால் என்ன செய்து என்று பலர் தவிக்கிறார்கள். அவர்கள் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.

காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.
திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது. எனவே இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.
மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரிக்க மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் தான். செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால், உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது.
அதுவும் அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது.
மேலும் செயற்கை இனிப்பூட்டிகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உடற் பருமன் குறைய வேண்டும் என்றால் உடனே அசெயற்கை இனிப்பூட்டிகளை தவிர்ப்பது நல்லது.
இது ஒரு புறம் எனில், எப்படியோ இடுப்பில் சதை அதிகரித்து உடல் எடை அதிகரித்துவிட்டால் என்ன செய்து என்று பலர் தவிக்கிறார்கள். அவர்கள் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.

காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.
திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது. எனவே இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.
மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
குழந்தைகளுக்கும் - செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடத் துணை தேவை. பெரும்பாலும் அவைகள் தன் வயதைஒத்தவர்களிடமும், தன்னைவிட வயது குறைந்தவர்களிடமுமே அதிக நேரம் விளையாட விரும்புகின்றன. அதுபோல் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளிடமும் அதிக பாசம்காட்டி விளையாட விரும்பும். ஆனால் வளர்ப்பு பிராணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும் என்பதால், மிகுந்த கவனம் தேவைப்படும்.
குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.
குழந்தைகளுக்கும்- செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, விளையாட்டாக கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.
வளர்ப்பு நாய்களை குழந்தைகளின் படுக்கையில் புரள அனுமதிக்கவேண்டாம். குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய்வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.
செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்- வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தடுப்பு ஊசிகளும் போட வேண்டும். செல்லப் பிராணிகளோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனாலும் சில நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தள்ளிவைக்கவேண்டும். குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

அப்போது அவைகள் மீதும் அக்கறை காட்டுகிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை செல்லப்பிராணிகள் புரிந்துகொள்ள சில காலம் ஆகும். குழந்தைகளுக்கும், பிராணிகளோடு எப்படி பழகவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அவகாசம் தேவை. அதுவரை இருவரையும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு மற்ற உயிர்களை நேசிக்கும் பண்பு இளமையிலேயே ஏற்பட செல்லப்பிராணிகள் உதவுகின்றன. விளையாட்டின் எல்லை என்ன என்பதையும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அதனை அடிப்பது, காதை பிடித்து இழுப்பது, கடிப்பது போன்றவை விளையாட்டல்ல துன்புறுத்தல் என்பதையும் குழந்தை தெரிந்துகொள்கிறது.
அன்பை மற்ற உயிரினங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அன்போடும், நன்றியோடும் நடந்துகொள்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு செல்லப்பிராணிகள் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.
குழந்தைகளுக்கும்- செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, விளையாட்டாக கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.

குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.
வளர்ப்பு நாய்களை குழந்தைகளின் படுக்கையில் புரள அனுமதிக்கவேண்டாம். குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய்வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.
செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்- வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தடுப்பு ஊசிகளும் போட வேண்டும். செல்லப் பிராணிகளோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனாலும் சில நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தள்ளிவைக்கவேண்டும். குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.

அப்போது அவைகள் மீதும் அக்கறை காட்டுகிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை செல்லப்பிராணிகள் புரிந்துகொள்ள சில காலம் ஆகும். குழந்தைகளுக்கும், பிராணிகளோடு எப்படி பழகவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அவகாசம் தேவை. அதுவரை இருவரையும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு மற்ற உயிர்களை நேசிக்கும் பண்பு இளமையிலேயே ஏற்பட செல்லப்பிராணிகள் உதவுகின்றன. விளையாட்டின் எல்லை என்ன என்பதையும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அதனை அடிப்பது, காதை பிடித்து இழுப்பது, கடிப்பது போன்றவை விளையாட்டல்ல துன்புறுத்தல் என்பதையும் குழந்தை தெரிந்துகொள்கிறது.
அன்பை மற்ற உயிரினங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அன்போடும், நன்றியோடும் நடந்துகொள்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு செல்லப்பிராணிகள் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இன்று இந்த கிழங்கை வைத்து சத்தான சுவையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
வெள்ளைபூண்டு - 4 பல்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு.
தேங்காய் பால் - 3 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் பின் பூண்டினைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சர்க்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு (5 நிமிடங்கள்) வதக்கவும்.
இதில் தேங்காய் பால் சேர்த்து 25 நிமிடங்கள் மிக மிக சிறிய தீயில் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின் மிக்சியில் நன்கு சுற்றி மீண்டும் லேசான சூடு செய்து உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காயம் - 1
வெள்ளைபூண்டு - 4 பல்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு.
தேங்காய் பால் - 3 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம் பின் பூண்டினைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சர்க்கரை வள்ளி கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு (5 நிமிடங்கள்) வதக்கவும்.
இதில் தேங்காய் பால் சேர்த்து 25 நிமிடங்கள் மிக மிக சிறிய தீயில் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின் மிக்சியில் நன்கு சுற்றி மீண்டும் லேசான சூடு செய்து உப்பு, மிளகு தூள் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. விளக்கெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்.
விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
* இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.
* முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.
* சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.
* சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
* இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.
* முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.
* சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.
* சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
நீண்ட கால முதலீடுகளை நமது திடீர்ப் பணத்தேவைக்குப் பயன்படுத்த முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்.
நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். அதுகுறித்துப் பார்க்கலாம்...
பொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.
பொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.
நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.
எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.
நம் வாழ்வின் முக்கிய பொருளாதார இலக்குகளை அடைவதற்காகச் செய்த முதலீடுகளைத் திரும்பப்பெற்றால், நம்முடைய பொருளாதாரத் திட்டத்தையே சீர்குலைத்துவிடும்.
ஆனால் நீண்ட கால முதலீட்டில் உள்ள சில அம்சங்களால் நமது குறுகிய காலத் தேவைகளை எளிதாகப் பூர்த்திச் செய்ய முடியும். அதுகுறித்துப் பார்க்கலாம்...
பொது வருங்கால வைப்புநிதி: ‘பப்ளிக் பிராவிடண்ட் பண்ட்’ எனப்படும் பொது வருங்கால வைப்புநிதியில் முதிர்ச்சிக்கு முன்பே பணத்தைத் திரும்பப் பெற முடியும். பொது வருங்கால வைப்புநிதிக்கான கால அளவு 15 ஆண்டுகள். ஏழாவது நிதியாண்டில் பகுதி பணத்தைத் திரும்பப்பெறுவது அனுமதிக்கப்படுகிறது. நான்காவது ஆண்டின் இறுதியில் இருக்கும் மொத்த பணத்தில் 50 சதவீதம் அல்லது பணம் எடுப்பதற்கு முந்தைய ஆண்டில் உள்ள மொத்த பணத்தில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த அளவு பணத்தை எடுக்கலாம்.
பொது வருங்கால வைப்புநிதியில் மூன்றாவது மற்றும் ஆறாவது நிதியாண்டுக்கு மத்தியில் கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. கடன் கேட்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இருப்பில் 25 சதவீதப் பணத்தை அதிகபட்சக் கடனாகப் பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்ச்சி காலத்துக்கு முன்பு கணக்கை முடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கழிந்தநிலையில் குழந்தைகளின் கல்வி அல்லது பெற்றோர், குழந்தைகள் அல்லது கணக்குதாரரின் உயிர் காக்கும் மருத்துவச் செலவு போன்றவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடிக்கலாம். ஆனால் வட்டி விகிதம் 1 சதவீதம் குறைவாக இருக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி: எம்பிளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில், பதிவுசெய்யப்பட்ட சங்கங்களில் இருந்து வீடு வாங்கவோ அல்லது வீடு கட்டவோ, பகுதி பணத்தை மத்தியில் திரும்ப எடுக்கவோ பயனர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சந்தாதாரர்களாக இருத்தல் அவசியம், குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட வீட்டுவசதி சங்கத்தில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருப்பது அவசியம். அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரமும் அனுமதிக்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: ‘சீனியர் சிட்டிசன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கால அளவு ஐந்தாண்டுகள் என்றபோதும், முதல் அல்லது இரண்டாம் ஆண்டின் இறுதியில் முன்கூட்டியே கணக்கை முடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு வைப்புநிதியில் 1.5 சதவீதமும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு வைப்புநிதியில் 1 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும்.
நிரந்தர வைப்புநிதி (பிக்சட் டெபாசிட்): நிரந்தர மற்றும் தொடர் வைப்பு நிதித் திட்டங்கள் மிகவும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடியவை, முன்கூட்டியே திரும்பப்பெறக் கூடியவை. வைப்புநிதி காலத்தைப் பொறுத்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.
எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி: நாம் பண நெருக்கடியைச் சந்திக்கும்போது எஸ்.ஐ.பி. பரஸ்பர நிதி நிறுத்தத்தை மேற்கொள்ளலாம். இதைத் தற்காலிமாக நிறுத்துவதால் நமது நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படாது. கால அளவு: 1 முதல் 3 மாதங்கள். இந்தக் காலத்திற்குப் பிறகு மீண்டும் திட்டம் தானாகச் செயல்பாட்டுக்கு வரும். இதை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மானிய காப்பீட்டுத் திட்டம்: ‘எண்டோமென்ட் பாலிசி’ எனப்படும் மானிய காப்பீட்டுத் திட்டம் அல்லது இதர காப்பீட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் பேரில் கடன் பெற முடியும். இந்தக் கடனை காப்பீட்டு நிறுவனம் அல்லது வங்கியில் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெறலாம். இத்திட்டத்தில் மொத்த மதிப்பில் 80 முதல் 90 சதவீதம் கடனாகப் பெறலாம். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டி செலுத்த வேண்டும்.
கணினியால் உருவாகும் பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகளை பார்க்கலாம்.
கணினிகள் இன்று அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகப் பணியைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் கணினிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இணையதளம் வழியே டி.வி. நிகழ்ச்சிகள் முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் ரசிக்கப்படுகின்றன. மிச்சசொச்சம் அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்வோர் உண்டு. இப்படி சதா கணினியில் பணி செய்வது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கலாம். உடல்சோர்வு, மனச்சோர்வு, கழுத்துவலி, மணிக்கட்டு வலி, தோள்பட்டை மற்றும் விரல்களிலும் வலி உண்டாகலாம். கணினியால் உருவாகும் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கணினி யோகா எனும் பயிற்சி முறை உள்ளதை நீங்கள் அறிவீர்களா? இதோ சில கணினி யோகா பயிற்சிகள்...
* உங்கள் தலையை இடமும், வலமுமாக அசைக்கவும். அதுபோல முன்னும் பின்னுமாக அசைத்து பயிற்சி செய்யவும். மனதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நினைத்துக் கொள்ளலாம். தலை அசைவை ‘ஓ’ என்ற எழுத்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு அதன் போக்கிற்கு கழுத்தை அசைத்து தலைக்கு பயிற்சி கொடுக்கலாம். இது மேல்-கீழ், சுழிவு என அனைத்து வகை இயக்கங்களுக்கும் வழி வகுக்கும். இதனால் கணினியால் ஏற்பட்ட கழுத்து வலி மறையும்.
* இதேபோல தோள்பட்டை வலியை நீக்க, தோள்பட்டையை மேலும் கீழும் அசைத்து ஒரு வட்டம் (ரவுண்டு) அடிப்பதுபோல இயக்குங்கள். இப்படி சுமார் 10 முறை செய்துவிட்டு, பின்னர் அடுத்த தோள் பட்டையில் இதுபோல பயிற்சி செய்யுங்கள். அடுத்ததாக இரு தோள் பட்டைகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது நீண்ட நேர தட்டுச்சு செய்வதால் ஏற்படும் தோள்பட்டை வலியை மாயமாக்கும்.

* மற்றொரு வகையிலும் தோள்பட்டைக்கு பயிற்சி அளிக்கலாம். கையை மடக்கி விரல்களால் தோள் பட்டையை தொட்டுக் கொண்டு கைகளை பக்கவாட்டில் சில சுற்றுகள் சுற்றலாம். இதேபோல எதிர் திசையிலும் சிலமுறை சுற்றி பயிற்சி செய்யலாம்.
* அதிகமான தட்டச்சுப் பயிற்சியால் ஏற்படும் மணிக்கட்டு வலியையும் கணினி யோகாவால் போக்க முடியும். இதற்காக மணிக்கட்டை ஒரு வட்டமாக கடிகார சுழற்சியில் அசைக்கவும், பின்னர் எதிர் கடிகார சுழற்சியில் மணிக்கட்டை அசைக்கவும். இப்போது அடுத்த மணிக்கட்டில் இதேபோல பயிற்சி செய்யவும். பின்னர் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம்.
* தரையில் அல்லது நாற்காலியில் நேராக அமர்ந்து கொண்டு தண்டுவடத்திற்கு பயிற்சி அளிக்கலாம். உடலை முடிந்தவரை (இடுப்பிற்கு மேல்பகுதியை மட்டும்) இடது புறத்தில் இருந்து வலது பக்கத்திற்கு திருப்புவது, பின்னர் வலதுபுறத்தில் இருந்து இடது புறத்திற்கு திருப்புவது என்று பயிற்சி செய்யலாம். பின்னர் அமர்ந்தபடியே குனிந்து அடிவயிறு தொடையில் படும் வகையில் படுத்து எழுந்தும், பின்னோக்கி முடிந்தவரை சாய்ந்து எழுந்தும் பயிற்சி செய்யலாம். இது முதுகுவலி, அசதி போன்றவற்றை அகற்றும். உற்சாகம் தரும்.
சதா அமர்ந்த படி கணினியில் பணி செய்வதால், உடல் வெப்பமடையலாம். பாதங்களுக்கு சீராக ரத்த ஓட்டம் பாய்வதிலும் தடை ஏற்பட்டிருக்கலாம். இந்த பாதிப்புகளை சீராக்க, பாதத்தின் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிகால்களை உயர்த்தி நின்று சில வினாடிகள் பயிற்சி செய்யலாம். கால்வலியை போக்கி உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராகவும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறவும் இந்த பயிற்சி உதவும்.
* உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்வது புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும். விரல்களால் தலையை கோரி விடுவது, அசைப்பது என தொடங்கி, கைகால்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யலாம், விரல்களை சொடுக்கி அதன் அயர்ச்சியைப் போக்கலாம். அன்புக்குரியவர்கள் இருந்தால் ஒருவருக்கு மற்றவர் மசாஜ் செய்துவிடுவது பாசப் பிணைப்பை அதிகரிக்கும்.
* முழுக்க முழுக்க கணினியில் பணி செய்வர்கள் தினமும் 20 நிமிடம் இந்த கணினி யோகா பயிற்சி செய்வது உடல்சோர்வு தணித்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். நல்ல உறக்கத்தையும், உற்சாகத்தையும் தரும். அடுத்தநாள் பணிகளை ஆனந்தத்துடன் செய்ய இது அவசியமாகும்!
* உங்கள் தலையை இடமும், வலமுமாக அசைக்கவும். அதுபோல முன்னும் பின்னுமாக அசைத்து பயிற்சி செய்யவும். மனதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நினைத்துக் கொள்ளலாம். தலை அசைவை ‘ஓ’ என்ற எழுத்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு அதன் போக்கிற்கு கழுத்தை அசைத்து தலைக்கு பயிற்சி கொடுக்கலாம். இது மேல்-கீழ், சுழிவு என அனைத்து வகை இயக்கங்களுக்கும் வழி வகுக்கும். இதனால் கணினியால் ஏற்பட்ட கழுத்து வலி மறையும்.
* இதேபோல தோள்பட்டை வலியை நீக்க, தோள்பட்டையை மேலும் கீழும் அசைத்து ஒரு வட்டம் (ரவுண்டு) அடிப்பதுபோல இயக்குங்கள். இப்படி சுமார் 10 முறை செய்துவிட்டு, பின்னர் அடுத்த தோள் பட்டையில் இதுபோல பயிற்சி செய்யுங்கள். அடுத்ததாக இரு தோள் பட்டைகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது நீண்ட நேர தட்டுச்சு செய்வதால் ஏற்படும் தோள்பட்டை வலியை மாயமாக்கும்.

* மற்றொரு வகையிலும் தோள்பட்டைக்கு பயிற்சி அளிக்கலாம். கையை மடக்கி விரல்களால் தோள் பட்டையை தொட்டுக் கொண்டு கைகளை பக்கவாட்டில் சில சுற்றுகள் சுற்றலாம். இதேபோல எதிர் திசையிலும் சிலமுறை சுற்றி பயிற்சி செய்யலாம்.
* அதிகமான தட்டச்சுப் பயிற்சியால் ஏற்படும் மணிக்கட்டு வலியையும் கணினி யோகாவால் போக்க முடியும். இதற்காக மணிக்கட்டை ஒரு வட்டமாக கடிகார சுழற்சியில் அசைக்கவும், பின்னர் எதிர் கடிகார சுழற்சியில் மணிக்கட்டை அசைக்கவும். இப்போது அடுத்த மணிக்கட்டில் இதேபோல பயிற்சி செய்யவும். பின்னர் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யலாம்.
* தரையில் அல்லது நாற்காலியில் நேராக அமர்ந்து கொண்டு தண்டுவடத்திற்கு பயிற்சி அளிக்கலாம். உடலை முடிந்தவரை (இடுப்பிற்கு மேல்பகுதியை மட்டும்) இடது புறத்தில் இருந்து வலது பக்கத்திற்கு திருப்புவது, பின்னர் வலதுபுறத்தில் இருந்து இடது புறத்திற்கு திருப்புவது என்று பயிற்சி செய்யலாம். பின்னர் அமர்ந்தபடியே குனிந்து அடிவயிறு தொடையில் படும் வகையில் படுத்து எழுந்தும், பின்னோக்கி முடிந்தவரை சாய்ந்து எழுந்தும் பயிற்சி செய்யலாம். இது முதுகுவலி, அசதி போன்றவற்றை அகற்றும். உற்சாகம் தரும்.
சதா அமர்ந்த படி கணினியில் பணி செய்வதால், உடல் வெப்பமடையலாம். பாதங்களுக்கு சீராக ரத்த ஓட்டம் பாய்வதிலும் தடை ஏற்பட்டிருக்கலாம். இந்த பாதிப்புகளை சீராக்க, பாதத்தின் விரல்களை மட்டும் தரையில் ஊன்றி, குதிகால்களை உயர்த்தி நின்று சில வினாடிகள் பயிற்சி செய்யலாம். கால்வலியை போக்கி உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராகவும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறவும் இந்த பயிற்சி உதவும்.
* உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து கொள்வது புத்துணர்ச்சிக்கு வழி வகுக்கும். விரல்களால் தலையை கோரி விடுவது, அசைப்பது என தொடங்கி, கைகால்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யலாம், விரல்களை சொடுக்கி அதன் அயர்ச்சியைப் போக்கலாம். அன்புக்குரியவர்கள் இருந்தால் ஒருவருக்கு மற்றவர் மசாஜ் செய்துவிடுவது பாசப் பிணைப்பை அதிகரிக்கும்.
* முழுக்க முழுக்க கணினியில் பணி செய்வர்கள் தினமும் 20 நிமிடம் இந்த கணினி யோகா பயிற்சி செய்வது உடல்சோர்வு தணித்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். நல்ல உறக்கத்தையும், உற்சாகத்தையும் தரும். அடுத்தநாள் பணிகளை ஆனந்தத்துடன் செய்ய இது அவசியமாகும்!
சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம்.
இதயம், நுரையீரல், மூளை போன்று உடலுக்கு ஒவ்வொரு உறுப்பும் முக்கியம் தான். உடலின் அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியை சிறப்பாக செய்கின்றன. அந்த வகையில் இதயம், ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நுரையீரல், சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தில் பிராண வாயுவை நிரப்பி அனுப்புகிறது. மூளை, ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இவ்வாறு உடலின் உள்உறுப்புகள் செய்யும் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-
தண்டுவட நரம்பு மண்டலம்
நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
செயல்பாடுகளில் பாதிப்பு
பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.
அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்
இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.
பிசியோதெரபி
அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.
பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.
சக்கர நாற்காலி
தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.
பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இத்தகைய உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?, அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்கு எத்தகைய சிகிச்சை மேற்கொள்வது? என்பது பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை தலைமை மருத்துவர் வடிவேல் கூறியதாவது:-
தண்டுவட நரம்பு மண்டலம்
நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
செயல்பாடுகளில் பாதிப்பு
பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.
அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால், கை-கால் செயல் இழப்பு, மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால் மூச்சு திணறல், உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். கழுத்து எலும்புக்கு கீழ் என்றால் கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். அத்தகைய சூழலில் முதுகில் படுக்கைபுண் ஏற்படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்
இதுதவிர விபத்தினால் இன்றி, மேற்கூறிய மற்ற காரணங்களால் தண்டுவடத்தின் பாதிப்பு நிலையை அறிய அதன் அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, கால்களில் மதமதப்பு, கால் தசைகளின் சக்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய பரிசோதனையில் நேராக, முன், பின்பக்கம் என 3 நிலைகளில் குனியவைத்து எக்ஸ்-ரே எடுத்து பார்த்தாலும், சி.டி.ஸ்கேனிலும் தண்டுவட பாதிப்பை அறிந்து கொள்ளலாம். இதுதவிர எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பதால் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதுதவிர ரத்தபரிசோதனையிலும் தெரிந்து கொள்ளலாம்.
பிசியோதெரபி
அவ்வாறு கண்டறிவதில் தண்டுவடத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவந்தால், நோயாளியின் வயது, எலும்பு முறிவின் அளவு, தண்டுவட நரம்பு செயல்பாடுகளை பொறுத்து பிசியோதெரபி மூலம் சரி செய்ய இயலும். அவ்வாறான சிகிச்சையில் சிலருக்கு ஒரு ஆண்டில் குணம் ஆகும். பாதிப்பு அதிகமாக இருந்தால் குணமடைய 2 அல்லது 3 ஆண்டுகள் கூட ஆகலாம். இந்த காலகட்டத்தில் தவறாமல் அதற்குரிய மருந்து, மாத்திரைகளை உண்ண வேண்டும்.
பொதுவாக பிசியோதெரபி செய்தும், மருந்து மாத்திரைகளை உண்டும் தண்டுவட பாதிப்பு சரி ஆகவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்டம் அறுவை சிகிச்சைதான். அப்போது தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கூடாது.
சக்கர நாற்காலி
தண்டுவடத்தில் முழு அளவில் முறிவு ஏற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் காண இயலாது. ஆனால் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த போதிய பயிற்சி, பிசியோதெரபி, ஆலோசனைகளை பெற வேண்டும். இதுதவிர ஒரு சிலருக்கு சக்கர நாற்காலி உதவி தேவைப்படலாம். அதன் உதவியால் வீட்டிற்குள் சிறு பணிகளை செய்யலாம். அலுவலகத்துக்கு செல்ல முடியும். மேலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு விளையாடவும் முடியும்.
பொதுவாக தண்டுவட பிரச்சினை என்பது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயதானவர்களுக்கு மட்டும் கால்சியம் சத்து குறைபாடால் இந்த பிரச்சினை வர வாய்ப்புண்டு. அதனை உணவு முறையால் சரி செய்ய இயலும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






