என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
இரத்த சோகை இருப்பவர்கள் உணவு விஷயத்தில் சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வெளிறிய முகம், நாக்கு, நகம், உள்ளங்கை வெளுத்து இருத்தல், படபடப்புடன் இதயம் துடித்தல், மூச்சிறைப்பு, சோர்வு, எதிலும் பிடிப்பில்லாமை இவையே இரத்த சோகையின் குணங்கள். இவை எல்லாமே இரத்தத்தில் இரும்புச் சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவு குறைந்த பிறகுதான் தெரியவரும்.
சேர்க்கவேண்டியவை: சிறுகீரை, முருங்கை, அகத்தி, பசலை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி என எல்லாக் கீரைகளிலும் இரும்புச் சத்து அதிகம் உண்டு.
எள்ளும் பனைவெல்லமும் கலந்த உருண்டை. கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச் சத்து அதிகம். கம்பஞ்சோறு, வரகரிசியில் கிச்சடி, பிரியாணி, புலாவ் செய்து சாப்பிடலாம். கஞ்சியாகவும் குடிக்கலாம். பாசிப்பயறு, சிகப்புக் கொண்டை கடலை, முளைக்கட்டிய தானியங்கள் இதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் இரும்பைச் சீரணிக்க உதவிடும்.
தவிர்க்கவேண்டியவை: சாதாரணமாக இரும்புச் சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரத்த சோகைக்கு அளிக்கப்படும் சித்த மூலிகை மருந்துகளின் சிறப்பு, அவை மலத்தையும் எளிதாகக் கழிக்கவைத்து, குடல் புண்ணையும் ஆற்றக்கூடியது.
சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கு ஏற்ற தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - 1 கப்
தக்காளி நறுக்கியது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பட்டை கிராம்பு -சிறிதளவு
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - அரை கப்
சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக வங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார்.
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - 1 கப்
தக்காளி நறுக்கியது - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
பட்டை கிராம்பு -சிறிதளவு
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - அரை கப்
சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
சிறிதளவு வதங்கியவுடன் அதோடு சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக வங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சேர்த்து வேக விடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது
கொ. மல்லி - 1 கட்டு
புதினா - 1 கட்டு
மிளகாய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1
செய்முறை:
* முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.
* பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.
* பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்
* மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.
* பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அளவை குறைத்து வைக்கவும்.
* அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

* ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
* அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.
மட்டன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
நெய் - 150 கிராம்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது
கொ. மல்லி - 1 கட்டு
புதினா - 1 கட்டு
மிளகாய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
எலுமிச்சை பழம் - 1
செய்முறை:
* முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.
* பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.
* பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்
* பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.
* பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அளவை குறைத்து வைக்கவும்.
* அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.
* வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.
* கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.

* ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
* அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.
வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.
அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும்.

* காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும்.
* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.
* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.
* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.
பரிசோதனை முறைகள்:
* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.
* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா, காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.
* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.
பொதுவாகவே, காது கேளாமை பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பைக் குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். நரம்புகளின் பாதிப்புபோல, காது தொடர்பான மற்ற பாதிப்புகளுக்கும் இது 95 சதவீதம் வரை பொருந்தும். ஒருமுறை செவித்திறன் குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது கடினமான காரியம். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் செவித்திறன் குறையாமல் இருக்கச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.
நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
* நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், செரிமானப் பகுதிகளுக்கும் வேகமாக செல்லும் நீர் ஜீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
* நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது.
* நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
* நின்று கொண்டு தண்ணீரை பருகும்போது அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும். இதனால் மூட்டுவலி மற்றும் எலும்புகளின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
* தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
* நீரின் வெப்பநிலையும் மிகவும் முக்கியம். அது சீராக இல்லாவிட்டால் வயிற்றுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் குளிர்ந்த மற்றும் சூடான நீரைப் பருகக்கூடாது என்று கூறப்படுகிறது.
* நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.
* நின்று கொண்டு தண்ணீரை பருகும்போது அதிக அழுத்தம் கொண்ட நீரோட்டம் ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கு குறிப்பிட்ட நேரம் வரை சீரற்றதன்மையை உருவாக்கும். இதனால் மூட்டுவலி மற்றும் எலும்புகளின் இணைப்புகளில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
* தொடர்ச்சியாக நின்று கொண்டே பருகினால் இதயம் மற்றும் நுரையீரல் இயக்கங்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் ஹேர் டையை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இப்போதைய இளைஞர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், பர்கண்டி என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள். ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். ஹேர் கலரிங்கில் எல்லா வண்ணமும் உண்டு. முடிக்கு டை, ஹேர் கலரிங், ஹென்னா என மூன்று விதங்கள் உள்ளன.
இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.
நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.
விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’
இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் பிபிடி சேர்த்திருப்பார்கள். முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.
நாம் பயன்படுத்தும் ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. மேலும் தோல் அலர்ஜி, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஏராளம் உண்டு. பெரும்பாலும் இந்த ரசாயனத் தயாரிப்புகளை மண்டை ஓட்டில் படாமல் முடியில் மட்டும் படுமாறு தடவ வேண்டும். மூடிய அறைக்குள் ஹேர் டை, ஹேர் கலரிங் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் நெடி ஆஸ்துமா நோயாளிக்கு ஒவ்வாமையையும், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பிரச்சனைகளையும் உண்டு பண்ணும்.
விலை மலிவான ஹேர் டைகளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக இயற்கை முறையிலான ஆர்கானிக் ஹேர் டைகளை பயன்படுத்தலாம் அல்லது ஹென்னா சிறந்தது. வீட்டிலேயே ஹென்னா செய்ய நினைப்பவர்கள், மருதாணியுடன் கத்தா பவுடர், ஆம்லா பவுடர், பீட்ரூட் சாறு, லெமன் சாறு, கறிவேப்பிலை, டீ டிக்காஷன், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது ஒயின் ஆகியவற்றைக் கலந்து தகர டப்பாவில் முதல் நாள் இரவு போட்டுவைத்து மறுநாள் தலையில் தடவலாம். முடி மென்மையாகவும் அழகாகவும் கருப்பாகவும் இருக்கும்.’’
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு ஃப்ரூட்ஸ் சேர்த்து தயிர் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது),
தயிர் - 2 டீஸ்பூன்,
திராட்சை (பச்சை, கறுப்பு) - தலா 10,
மாதுளை முத்துகள் - 2 டீஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி போட்டு தாளிக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது.
சூப்பரான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது),
தயிர் - 2 டீஸ்பூன்,
திராட்சை (பச்சை, கறுப்பு) - தலா 10,
மாதுளை முத்துகள் - 2 டீஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி போட்டு தாளிக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.
இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது.
சூப்பரான ஃப்ரூட்ஸ் தயிர் சாதம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.
* முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.
* நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.
* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.
* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.
* வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.
* பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.
* மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.
* முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.
* நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.
* நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.
* மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

* முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.
* வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.
* பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.
* மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
* மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.
முதன் முதலான உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில குறிப்புகள் :
* ஜிம்முக்குச் செல்லும் முன்பு உங்களை ஒழுங்காக சுத்தம் செய்துகொள்ளுங்கள், குறிப்பாக அலவலக வேலை நேரத்திற்குப் பிறகு ஜிம்முக்குச் செல்வதாக இருந்தால் இது முக்கியம். ஜிம்முக்குச் செல்லும் முன்பு குளித்துவிட்டு, பெர்ஃப்யூம் போட்டுக்கொள்ளுங்கள், அதே சமயம் அதிகமாக போடக்கூடாது.
* எப்போதும் தளர்வான மற்றும் வசதியாக இருக்கும் உடைகளை அணியுங்கள். காட்டன் உடை அல்லது வியர்வையை ஆவியாக்கும் உடைகளை அணிந்துகொள்வது நல்லது.
* உராய்வு ஏற்படும் பகுதிகளில் (உதாரணம். தொடை இடுக்குப் பகுதிகள், அக்குள்) பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல் போன்ற சிறப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். எப்போதும் ஹேன்ட் சானிட்டைசரை உடன் வைத்திருப்பது நல்லது.
* உடற்பயிற்சி செய்யும்போது வியர்க்க வேண்டும், அது அவசியம். அதற்காக, வியர்வையால் நனைந்த உபகரணங்களைப் பயன்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே வியர்வையைத் துடைப்பதற்காக ஒரு சுத்தமான டவலை எடுத்துச் சென்று, உடற்பயிற்சி செய்து முடித்ததும் உபகரணங்களை துடைப்பது முக்கியமாகும்.
* உங்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பராமரிக்க, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு நீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மெட்டல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களை கிருமி நீக்குவது கடினம் என்பதால், அதில் கிருமிகள் அதிகம் சேரும். மெட்டல் பாட்டில்களை சோப்பு மற்றும் கொதிக்கும் நீரைக்கொண்டு கிருமி நீக்கிவிடலாம். மேலும், நீங்கள் பார்க்காதபோது, யாரவது உங்கள் பாட்டிலில் இருந்து நீர் அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* உங்கள் ஜிம் ஷூவை மறந்துவிடாதீர்கள் - ஜிம் பையில் அவற்றைப் போடுவதற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் சுற்றிக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு, கிருமி நீக்கும் வைப்ஸைக் கொண்டு கிருமி நீக்கி, காற்றில் உலர வைத்தால், அடுத்த நாளிற்கு அவை தயாராகிவிடும்! உங்கள் ஷூவில் உண்டாகும் நாற்றத்தைத் தவிர்க்க, இரவு முழுவதும் ஷூவின் உட்பகுதியில் தேயிலைப் பைகளை வைக்கலாம்.
* உடற்பயிற்சி முடித்துவிட்டு வரும்போது, சோஃபாவைப் பார்த்ததும் உட்கார்ந்து ஓய்வெடுக்க மனம் ஏங்கும்! ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கச் சென்றுவிடுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்கள் உடல் குளிர்ச்சியடைய வேண்டும், அது வரை காத்திருந்து அதன் பிறகே குளிக்க வேண்டும்.
* உங்களுக்கு இருமல், தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் எதாவது இருந்தால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம். ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது உங்கள் உடல் குணமடைய உதவும், மேலும் மற்றவர்கள் உங்களால் பாதிப்படைவதையும் தடுக்கும் ஏதேனும் திறந்த காயங்கள் இருந்தாலும் மேற்கூறியது பொருந்தும்.
* ஜிம்முக்குச் செல்லும் முன்பு உங்களை ஒழுங்காக சுத்தம் செய்துகொள்ளுங்கள், குறிப்பாக அலவலக வேலை நேரத்திற்குப் பிறகு ஜிம்முக்குச் செல்வதாக இருந்தால் இது முக்கியம். ஜிம்முக்குச் செல்லும் முன்பு குளித்துவிட்டு, பெர்ஃப்யூம் போட்டுக்கொள்ளுங்கள், அதே சமயம் அதிகமாக போடக்கூடாது.
* எப்போதும் தளர்வான மற்றும் வசதியாக இருக்கும் உடைகளை அணியுங்கள். காட்டன் உடை அல்லது வியர்வையை ஆவியாக்கும் உடைகளை அணிந்துகொள்வது நல்லது.
* உராய்வு ஏற்படும் பகுதிகளில் (உதாரணம். தொடை இடுக்குப் பகுதிகள், அக்குள்) பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல் போன்ற சிறப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். எப்போதும் ஹேன்ட் சானிட்டைசரை உடன் வைத்திருப்பது நல்லது.
* உடற்பயிற்சி செய்யும்போது வியர்க்க வேண்டும், அது அவசியம். அதற்காக, வியர்வையால் நனைந்த உபகரணங்களைப் பயன்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே வியர்வையைத் துடைப்பதற்காக ஒரு சுத்தமான டவலை எடுத்துச் சென்று, உடற்பயிற்சி செய்து முடித்ததும் உபகரணங்களை துடைப்பது முக்கியமாகும்.
* உங்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பராமரிக்க, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு நீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மெட்டல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களை கிருமி நீக்குவது கடினம் என்பதால், அதில் கிருமிகள் அதிகம் சேரும். மெட்டல் பாட்டில்களை சோப்பு மற்றும் கொதிக்கும் நீரைக்கொண்டு கிருமி நீக்கிவிடலாம். மேலும், நீங்கள் பார்க்காதபோது, யாரவது உங்கள் பாட்டிலில் இருந்து நீர் அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* உங்கள் ஜிம் ஷூவை மறந்துவிடாதீர்கள் - ஜிம் பையில் அவற்றைப் போடுவதற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் சுற்றிக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்த பிறகு, கிருமி நீக்கும் வைப்ஸைக் கொண்டு கிருமி நீக்கி, காற்றில் உலர வைத்தால், அடுத்த நாளிற்கு அவை தயாராகிவிடும்! உங்கள் ஷூவில் உண்டாகும் நாற்றத்தைத் தவிர்க்க, இரவு முழுவதும் ஷூவின் உட்பகுதியில் தேயிலைப் பைகளை வைக்கலாம்.
* உடற்பயிற்சி முடித்துவிட்டு வரும்போது, சோஃபாவைப் பார்த்ததும் உட்கார்ந்து ஓய்வெடுக்க மனம் ஏங்கும்! ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கச் சென்றுவிடுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்கள் உடல் குளிர்ச்சியடைய வேண்டும், அது வரை காத்திருந்து அதன் பிறகே குளிக்க வேண்டும்.
* உங்களுக்கு இருமல், தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் எதாவது இருந்தால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம். ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது உங்கள் உடல் குணமடைய உதவும், மேலும் மற்றவர்கள் உங்களால் பாதிப்படைவதையும் தடுக்கும் ஏதேனும் திறந்த காயங்கள் இருந்தாலும் மேற்கூறியது பொருந்தும்.
உடல் பருமனைக் குறைக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இன்று பப்பாளி, சிறுதானியங்களை வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
வெங்காயம் - 2,
கம்பு மாவு - 2 கப்,
தினை குருணை, அரிசிமாவு - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
அரைப்பதற்கு :
துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை - தலா ஒரு கைப்பிடி,
இஞ்சி - சிறுதுண்டு,
பட்டை, கிராம்பு - தலா - 2,
சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளிக்காய துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, திணை குருணை, அரிசிமாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
சத்தான பப்பாளி - சிறுதானிய அடை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
வெங்காயம் - 2,
கம்பு மாவு - 2 கப்,
தினை குருணை, அரிசிமாவு - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு,
உப்பு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
அரைப்பதற்கு :
துவரம் பருப்பு, முளைகட்டிய சுண்டல் கடலை - தலா ஒரு கைப்பிடி,
இஞ்சி - சிறுதுண்டு,
பட்டை, கிராம்பு - தலா - 2,
சோம்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் கடலை இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துகொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளிக்காய துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, திணை குருணை, அரிசிமாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய அடையாக ஊற்றி, தேவையான எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
சத்தான பப்பாளி - சிறுதானிய அடை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். பெண்கள் ஏன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுத்து திருமண ஆசையை விடுத்து தனித்து வாழவே விரும்புகின்றனர்.
பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...
எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.
கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.

தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.
நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.
நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.
சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.
பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது. வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...
எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.
கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.

தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.
நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும்.
நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.
சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை புத்தகங்களையும், உபகரணங்களையும் பெற்றுத் தருவதோடு, அவர்களை ஒரு நல்லொழுக்கமிக்க மனிதனாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
‘கல்வி என்பது வெற்றுத் தகவல்களை மூளைக்குள் செலுத்தி, அது புரியாமலும், செரிமானம் ஆகாமலும், மூளையை முடங்கவைப்பது அல்ல. மனிதனை மனிதனாக உருவாக்குவதும், வாழ்வினை உயர்த்துவதும், பண்புகளை மேம்படுத்துவதும்தான் உண்மையான கல்வி’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
பள்ளிக்கல்வியின் நோக்கமே, ஆழ்ந்த அறிவை வளர்ப்பதும், அளப்பரிய சிந்தனையைத் தூண்டுவதும்தான். அறிவை வளர்ப்பதற்கு செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதை மனதிற்குள் நிலைநிறுத்துகின்ற மனப்பாட சக்தி அவசியம். அதைப்போல் சிந்தனையை வளர்ப்பதற்கு, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும் முக்கியம். இத்தகைய அறிவுக்கும், சிந்தனைக்கும் வடிவம் கொடுக்குமிடம்தான் பள்ளிக்கூடம்.
வகுப்பறைக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். மாணவர்கள் கற்றுக்கொள்ள வருகிறார்கள். கற்றுக்கொடுப்பவரை விட, கற்றுக்கொள்கின்ற மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தால், அந்த வகுப்பறை மாணவர்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள ஆசிரியர்களிடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு வழிமுறையைத் தாண்டி கற்றுக்கொடுக்க பல வழிமுறைகள் இருக்கும்.
ஒரு முறை ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு விமானம் எவ்வாறு பறக்கின்றது என்பதைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். நாற்பத்தைந்து நிமிட வகுப்பின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் புரிந்ததா? என்று கேட்க, மாணவர்கள் அனைவரும் அமைதியாய் அமர்ந்து இருந்தனர்.
அன்று மாலை, வகுப்பறை முடிந்ததும், அனைத்து மாணவர்களையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே பறவைகள், கடற்கரையில் பறந்து வந்து இறங்குவதையும், மீன்களைக் கொத்தித் தின்ற பின்னர், வேகமாய் நடந்து அதன் இறகுகளை விசையுடன் அழுத்துவதால் மேல்நோக்கி பறப்பதையும், அதன் வால்பகுதியை அசைப்பதால் அது விரும்பும் திசைக்கு செல்வதையும், கூர்ந்து கவனிக்கச் செய்தார்.
அதனைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு சிறுவன் எப்படியும், இப்பறவையைப்போல் உயரப் பறக்க வேண்டும் என்றும், தான் விரும்பும் திசையிலே வானத்தில் உயரப் பறக்கும் விமானியாக வேண்டும் என்றும் தீர்மானித்தான். கற்றுத்தந்ததை மாணவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை மாற்றி, கற்றுத்தரும் முறையினை சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியர் மாற்றியபோது ‘அப்துல் கலாம்’ என்ற ஒரு மாணவர் இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞானியாக எழுச்சி கொண்டார். அவர் நம் நாட்டின் முதல் குடிமகனானார்.
வகுப்பறையை தாண்டி, ஆசிரியர்கள் மாணவர்களை புதிய வழிமுறையில் பாடங்களை கற்றுத்தரும்போது, நாளை சாதனை மாணவர்கள் எழுதும் புத்தகத்தில் அவ்வாசிரியர் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
ஒவ்வொரு ஆசிரியரும் கலங்கரை விளக்கங்கள். அவர்களின் உன்னத வழியினை சிக்கெனப் பிடித்துக்கொண்டால், ஒவ்வொரு மாணவரும் தேசத்தின் லட்சிய மாணவர்களாக உருவெடுப்பர்.
கல்வி என்பது அறியாமையை அகலச்செய்யும் அணையா விளக்கு. அவ்விளக்கினை, ஒரு மாணவரின் நெஞ்சில் ஏற்ற, தளராத உள்ளத்தை தருகின்ற எண்ணெயாய் இருப்பவர்கள் பெற்றோர். திரியாகிய மாணவர்களுக்கு தங்களின் ஞான ஒளியினை பரிசாய்த் தருபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் உயரிய லட்சியத்திற்கு தூண்டுதலாக இருப்பது பல சாதனைகளை அனுதினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இச்சமூகம். இந்த அம்சங்களும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம்.

இன்றைய சூழலில், நாகரிகத்தின் வளர்ச்சியாலும், விஞ்ஞானத்தின் வியப்பான விபரீதங்களாலும், ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான எண்ணங்களோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். எனவே, ஒரே நடைமுறையில் கற்றுத்தரும் வழிமுறைகள் அனைவருக்கும் பொருந்தாது. காரணம், மாணவர்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் வேறுபட்டது.
எனவே ஒரு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஒரே மாதிரியான திட்டங்களை வகுப்பதைவிட, ஒத்த மாணவர்களுக்கான பல திட்டங்களை வகுப்பது தான் ஒரு வகுப்பறையின் வெற்றியை நிர்ணயிக்கும். இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வகுப்பறைதான் ஒரு லட்சிய வகுப்பறையாக திகழ்கிறது.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை புத்தகங்களையும், உபகரணங்களையும் பெற்றுத் தருவதோடு, அனுதினமும் அவர்களது பழக்க வழக்கங்களை உன்னிப்பாக கவனித்து, அவர்களை ஒரு நல்லொழுக்கமிக்க மனிதனாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம். எனவே நம் குழந்தைகள் எவ்வித கஷ்டமும் பட்டுவிடக்கூடாது என்று அனைத்து பெற்றோரும் நினைப்பதுண்டு. அதற்காக குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கித் தரலாம், ஆனால் அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், மாணவர்களின் லட்சியம் சிதறுண்டு போகும்.
இச்சமூகம் நல்லவர்களையும், தீயவர்களையும் உள்ளடக்கியது. முன்மாதிரியாக இருக்கும் நல்லவர்கள், அடிக்கடி மாணவர்களோடு கலந்துரையாடி ஊக்கப்படுத்த வேண்டும். தவறுகளால் தீண்டப்பட்டவர்கள், வருகின்ற தலைமுறை மாணவர்களுக்கு, அத்தீதினைத் திணிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும், ஒரு பயிரினை வளர்க்க உரமிடுதலும், களை எடுத்தலும் போல் அவசியமானதாகும்.
அதிகாலை எழுந்து, அன்றைய நாளினை நம்பிக்கையோடு தொழுது, தனது கடமைகளை மகிழ்வாய் எவரின் துணையின்றி தானாகவே முடிக்க வேண்டும். நேற்றைவிட இன்றைய நாளில் நல்லறிவாலும், நற்சிந்தனையாலும், இனிதாய் வளர்ந்து, மேன்மை ஒழுக்கத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து, வாய்ப்பினை தினமும் உருவாக்கி, இயற்கைக்கும், இயலாதவருக்கும், உறுதுணையாய் இருக்க வேண்டும். நம் பாரத தேசம் பாரெங்கும் புகழ்பெற தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளையும், தனது உழைப்பால் உன்னத நாளாய் உருமாற்றும் ஒவ்வொருவருக்கும் வரலாற்றின் பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
எனவே, இன்றைய சூழலில், லட்சிய மாணவர்களும், ஆசிரியர்களும், உருவாக்கப்பட வேண்டியதில்லை. புழுவில் இருந்து உருவாகி,சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் போல் தாங்களாகவே உருவாகிக் கொள்வார்கள்.
கல்லுக்குள் இருக்கின்ற சிலை போல, ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு தலைவன், ஒரு கலைஞன், ஒரு அறிஞன் என ஒரு சக்திவாய்ந்த மாமனிதன் இருக்கின்றான். அதனை வெளிக்கொணரும் கலைக்கூடம் தான் பள்ளிக்கூடம். பள்ளிக்கு வந்துவிட்டீர்கள். இனி மாமனிதர்களாய் வெளிவர வேண்டும்.
திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,
போலீஸ் துணை கமிஷனர்
பள்ளிக்கல்வியின் நோக்கமே, ஆழ்ந்த அறிவை வளர்ப்பதும், அளப்பரிய சிந்தனையைத் தூண்டுவதும்தான். அறிவை வளர்ப்பதற்கு செய்திகளை உள்வாங்கிக் கொண்டு அதை மனதிற்குள் நிலைநிறுத்துகின்ற மனப்பாட சக்தி அவசியம். அதைப்போல் சிந்தனையை வளர்ப்பதற்கு, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும் முக்கியம். இத்தகைய அறிவுக்கும், சிந்தனைக்கும் வடிவம் கொடுக்குமிடம்தான் பள்ளிக்கூடம்.
வகுப்பறைக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வருகிறார்கள். மாணவர்கள் கற்றுக்கொள்ள வருகிறார்கள். கற்றுக்கொடுப்பவரை விட, கற்றுக்கொள்கின்ற மாணவர்களிடம் ஆர்வம் அதிகமாக இருந்தால், அந்த வகுப்பறை மாணவர்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ள ஆசிரியர்களிடம் சொல்லிக் கொடுப்பது என்ற ஒரு வழிமுறையைத் தாண்டி கற்றுக்கொடுக்க பல வழிமுறைகள் இருக்கும்.
ஒரு முறை ஆசிரியர் தனது மாணவர்களுக்கு ஒரு விமானம் எவ்வாறு பறக்கின்றது என்பதைப் பற்றி பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். நாற்பத்தைந்து நிமிட வகுப்பின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் புரிந்ததா? என்று கேட்க, மாணவர்கள் அனைவரும் அமைதியாய் அமர்ந்து இருந்தனர்.
அன்று மாலை, வகுப்பறை முடிந்ததும், அனைத்து மாணவர்களையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே பறவைகள், கடற்கரையில் பறந்து வந்து இறங்குவதையும், மீன்களைக் கொத்தித் தின்ற பின்னர், வேகமாய் நடந்து அதன் இறகுகளை விசையுடன் அழுத்துவதால் மேல்நோக்கி பறப்பதையும், அதன் வால்பகுதியை அசைப்பதால் அது விரும்பும் திசைக்கு செல்வதையும், கூர்ந்து கவனிக்கச் செய்தார்.
அதனைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு சிறுவன் எப்படியும், இப்பறவையைப்போல் உயரப் பறக்க வேண்டும் என்றும், தான் விரும்பும் திசையிலே வானத்தில் உயரப் பறக்கும் விமானியாக வேண்டும் என்றும் தீர்மானித்தான். கற்றுத்தந்ததை மாணவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை மாற்றி, கற்றுத்தரும் முறையினை சிவசுப்பிரமணிய ஐயர் என்னும் ஆசிரியர் மாற்றியபோது ‘அப்துல் கலாம்’ என்ற ஒரு மாணவர் இந்தியாவின் ராக்கெட் விஞ்ஞானியாக எழுச்சி கொண்டார். அவர் நம் நாட்டின் முதல் குடிமகனானார்.
வகுப்பறையை தாண்டி, ஆசிரியர்கள் மாணவர்களை புதிய வழிமுறையில் பாடங்களை கற்றுத்தரும்போது, நாளை சாதனை மாணவர்கள் எழுதும் புத்தகத்தில் அவ்வாசிரியர் பெயர் நிலைத்து இருக்கும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
ஒவ்வொரு ஆசிரியரும் கலங்கரை விளக்கங்கள். அவர்களின் உன்னத வழியினை சிக்கெனப் பிடித்துக்கொண்டால், ஒவ்வொரு மாணவரும் தேசத்தின் லட்சிய மாணவர்களாக உருவெடுப்பர்.
கல்வி என்பது அறியாமையை அகலச்செய்யும் அணையா விளக்கு. அவ்விளக்கினை, ஒரு மாணவரின் நெஞ்சில் ஏற்ற, தளராத உள்ளத்தை தருகின்ற எண்ணெயாய் இருப்பவர்கள் பெற்றோர். திரியாகிய மாணவர்களுக்கு தங்களின் ஞான ஒளியினை பரிசாய்த் தருபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் உயரிய லட்சியத்திற்கு தூண்டுதலாக இருப்பது பல சாதனைகளை அனுதினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இச்சமூகம். இந்த அம்சங்களும் ஒருங்கிணைந்து செயல்படுதல் அவசியம்.

இன்றைய சூழலில், நாகரிகத்தின் வளர்ச்சியாலும், விஞ்ஞானத்தின் வியப்பான விபரீதங்களாலும், ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான எண்ணங்களோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். எனவே, ஒரே நடைமுறையில் கற்றுத்தரும் வழிமுறைகள் அனைவருக்கும் பொருந்தாது. காரணம், மாணவர்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரின் மனநிலையும் வேறுபட்டது.
எனவே ஒரு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஒரே மாதிரியான திட்டங்களை வகுப்பதைவிட, ஒத்த மாணவர்களுக்கான பல திட்டங்களை வகுப்பது தான் ஒரு வகுப்பறையின் வெற்றியை நிர்ணயிக்கும். இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளும் வகுப்பறைதான் ஒரு லட்சிய வகுப்பறையாக திகழ்கிறது.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை புத்தகங்களையும், உபகரணங்களையும் பெற்றுத் தருவதோடு, அனுதினமும் அவர்களது பழக்க வழக்கங்களை உன்னிப்பாக கவனித்து, அவர்களை ஒரு நல்லொழுக்கமிக்க மனிதனாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம். எனவே நம் குழந்தைகள் எவ்வித கஷ்டமும் பட்டுவிடக்கூடாது என்று அனைத்து பெற்றோரும் நினைப்பதுண்டு. அதற்காக குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கித் தரலாம், ஆனால் அவர்கள் விரும்புவதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால், மாணவர்களின் லட்சியம் சிதறுண்டு போகும்.
இச்சமூகம் நல்லவர்களையும், தீயவர்களையும் உள்ளடக்கியது. முன்மாதிரியாக இருக்கும் நல்லவர்கள், அடிக்கடி மாணவர்களோடு கலந்துரையாடி ஊக்கப்படுத்த வேண்டும். தவறுகளால் தீண்டப்பட்டவர்கள், வருகின்ற தலைமுறை மாணவர்களுக்கு, அத்தீதினைத் திணிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும். இவ்விரண்டும், ஒரு பயிரினை வளர்க்க உரமிடுதலும், களை எடுத்தலும் போல் அவசியமானதாகும்.
அதிகாலை எழுந்து, அன்றைய நாளினை நம்பிக்கையோடு தொழுது, தனது கடமைகளை மகிழ்வாய் எவரின் துணையின்றி தானாகவே முடிக்க வேண்டும். நேற்றைவிட இன்றைய நாளில் நல்லறிவாலும், நற்சிந்தனையாலும், இனிதாய் வளர்ந்து, மேன்மை ஒழுக்கத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து, வாய்ப்பினை தினமும் உருவாக்கி, இயற்கைக்கும், இயலாதவருக்கும், உறுதுணையாய் இருக்க வேண்டும். நம் பாரத தேசம் பாரெங்கும் புகழ்பெற தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொரு நாளையும், தனது உழைப்பால் உன்னத நாளாய் உருமாற்றும் ஒவ்வொருவருக்கும் வரலாற்றின் பக்கங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
எனவே, இன்றைய சூழலில், லட்சிய மாணவர்களும், ஆசிரியர்களும், உருவாக்கப்பட வேண்டியதில்லை. புழுவில் இருந்து உருவாகி,சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் போல் தாங்களாகவே உருவாகிக் கொள்வார்கள்.
கல்லுக்குள் இருக்கின்ற சிலை போல, ஒவ்வொருவருக்குள்ளும், ஒரு தலைவன், ஒரு கலைஞன், ஒரு அறிஞன் என ஒரு சக்திவாய்ந்த மாமனிதன் இருக்கின்றான். அதனை வெளிக்கொணரும் கலைக்கூடம் தான் பள்ளிக்கூடம். பள்ளிக்கு வந்துவிட்டீர்கள். இனி மாமனிதர்களாய் வெளிவர வேண்டும்.
திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,
போலீஸ் துணை கமிஷனர்






