search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breast Cancer Awareness"

    • “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    இந்தியாவில் ஆண்டு தோறும் அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை "பிங்க் அக்டோபர்" என்ற பெயரில் மார்பக புற்று நோய் குறித்து பொது மக்கள் மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் 9 ஆயிரம் இறப்புகளுடன் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு மார்பக புற்று நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 8 நிமிடங்களுக்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் இறப்பதை ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு பெண் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவதை முற்றிலும் அகற்றும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சிபுரம் காரைப்பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக் டர் கலைச்செல்வி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு மார்பக புற்று நோயை தடுக்க முறையாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

    நிகழ்ச்சியில் காரைப் பேட்டை அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன், காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் மனோகரன், நிலைய மருத்துவமனை அலுவலர் சிவகாமி, உதவி பேராசிரியர் ஜெயபாரதி, டாக்டர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி ஜி.வி.என். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆஸ்பத்திரியின் சேவைகள் குறித்து விளக்கம் அளித்தார்

    திருச்சி:

    உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சி ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்த மாதம் முழுவதும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மெமோகிராம் மற்றும் பெப்ஸ்மியர் சிகிச்சை முறைக்கு முன்பதிவு செய்து இந்த மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து இன்று காலை திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிங்கத்தான்-2022 என்ற பெயரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்த ஊர்வலத்தை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் மருத்துவமனை முன்பு தொடங்கி கும்பகோணத்தான் சாலை, மாம்பழச்சாலை சாலை, காவிரி பாலம் வழியாக சென்று இ.ஆர்.மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள திருச்சி தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

    இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஜி.வி.என். மருத்துவமனை 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சை பெற 1,000 பேர் வருவார்கள். இவர்களில் தாத்தா விசுவநாதன், டாக்டர்கள் ஜெயபால், கனகராஜ் சிறப்பாக செயல்பட்டார்கள்.

    அதேபோல் டாக்டர் செந்தில் செயல்படுகிறார். இவர் இப்போதுதான் வெளியில் தெரிகிறார். இவர்கள் சேவை மனப்பான்மையுடன் தான் செயல்படுகிறார்கள். காசு முக்கியமல்ல, சேவைதான் முக்கியம் என்ற நோக்கில் சேவை செய்து வருகிறார்கள். இவர்கள் என்ன சேவை செய்தாலும் வெளியில் தெரியமாட்டார்கள்.

    வெளியில் வந்து சேவை செய்தால்தான் அனைவருக்கும் தெரிவார்கள். வெளியில் வந்து சேவை செய்ய வேண்டும். உங்கள் பின்னால் 1 லட்சம் பேர் திரள வேண்டும். எனவே உங்கள் பணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

    திருச்சி ஜி.வி.என். ரிவர்சைடு மருத்துவமனை தலைவர் டாக்டர் செந்தில் அனைவரையும் வரவேற்று, நன்றி கூறினார். இதில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாள் வைரமணி, கதிரவன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
    தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.

    * முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.

    * நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு  அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.

    * மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.



    * முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.

    * வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.

    * பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.

    * மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    * மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.
    ×